10.02.2007

உணர்ச்சிகளுக்காக

நரை விழுந்த மனதில்
குறையொன்று கண்டேன்
குறை கண்ட மனதிலோ!
சிறையொன்றைக் கண்டேன்
சிறையான மனமோ!
தேய்வானது பிறையாய்
தூக்கத்தின் மத்தியில்
பிதற்றங்கள் பலவும்
அதன் தாக்கத்தின்விளைவாய்
சோர்வுகள் படரும்
பாழாகும் உயிரோ
மறந்ததையே நினைக்கும்
நோயாகும் உடலோ
துறந்தையே கேட்கும்
போகின்ற வரையிலும்
பூக்காத தெளிவு
சேர்கின்ற பொழுது தான்
தெளிவாக்கும் பூக்கள்
தேகத்தின் மடியில்
நினை கின்ற பொழுது
உயிர் தாகத்தின் தேடலை
யாரறிவாரோ!

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts