10.18.2007

பேசாத விட்ட நொடிகள்


பேசுவோம் பேசுவோமென்று நாம்
பேசாத விட்ட நொடிகள் தான்
நம் நட்பை இன்றும் பேசுகிறது.....
சிரிப்போமென்று தெரியாமல்
சிரித்த கணங்கள் தான்
நெஞ்சில் இன்றும்
பசுமையாக நிற்கிறது................
கவிதையாய் நினைவுகளும்
புதினமாய் நிகழ்வுகளும்
ஓவியமாய் சந்திப்புகளும்
புதைந்திருக்கும் நெஞ்சுக்குள்
எப்பொழுதாவது நிகழும் சந்திப்பு
நமக்குள்ளிருக்கும் நினைவுகளை
விழிக்கச் செய்யுமென்றால்
நம் நட்பின் அந்த நொடிகள்
லேசான ஈரத்துடனே பதிவாகும்
நெஞ்சுக்குள் ஆழமாய்.............................

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts