12.18.2007

என்னை மீட்டுக்கொடு

என்னை மீட்டுக்கொடு!















உன் துப்பட்டாவால் நான் விழுந்தேன்
அன்பே என்னை தூக்கி விடு!
உன் இருவிழி பார்வையில் எனை மறந்தேன்
அன்பே என்னை மீட்டுக்கொடு!
ஓருயிர் தானே எனக்குள் இருப்பது
இருயிர் சுமக்க இதயத்தில் இடமெது
கருவினில் கூட இருயிர் தோன்றும்
என் இதயத்தில் என்றுமே ஓருயிர் தான்
அதுவும் என்றும் உன்னிடம் தான்




உன் கண் இமைக்குதே
எனை சிறை வைக்குதே
உன் இதழ் திறக்குதே
அது கவி படைக்குதே
நீயும் புன்னகைக்கையில்
என்னுயிர் மறுப்பிறப்பெடுக்குதே.............








காதல் சுடுமோ! கண்ணீர் வருமோ!
கனவும் நினைவும் கவலையை தருமோ!
மறதியும் மனதில் மறைவின்றி எழுமோ!
முற்களின் வலியை பூக்கள் தருமோ!
சொற்களும் சுமையாய் நெஞ்சினில் விழுமோ!
என்னவளே!
அடி என்னவளே!
ஒரு சொல் சொன்னாய் என் நெஞ்சுள்ளே........
வாழ்ந்தது போதும் என்று நினைப்பது போல்........








என் வாழ்க்கை எப்படி போகும்
உன் சொல்லால் பாதைகள் மாறும்
கனவாய் நீ இல்லை உயிராய்
உள்ளிருந்து மனமாய் இயங்குகிறாய்
பொய்யை மறைக்கின்றேன் நான்
இருப்பதாக இந்த உடலில்
உண்மையில் நீயே எனை
ஆட்கொண்டாய் உன் பார்வையில்
யாரையோ கூப்பிட்டு விட்டு
என்னை அழைத்தேன் என்கிறார்கள்
எனக்கு செவிகள் வேலை செய்யவில்லை
என்று என் நண்பர்கள் சொல்கிறார்கள்
நல்ல வேளை செவிகள் மட்டும் தான்
அவர்களுக்கு தெரிந்திருக்கிறது
என்னுயிரே வேலை செய்ய வில்லை
என்பது உனக்கும் எனக்கும் மட்டுமே
தெரியும்.................
தயவு செய்து யாரிடமும் சொல்லிவிடாதே!



12.17.2007

உண்மையடி நீ எனக்கு


ஒன்றிரண்டு வாசகங்கள்
உன்னைப் பற்றி நானெழுத
வெள்ளைத் தாளில் ஓடு மடி
கவிதை என்ற பேரருவி
சிந்தி விழும் துளி சிரிப்பும்
உன்னுடனே உறவு சொல்லும்
பொத்தி வைத்த ஆசையெல்லாம்
நீ நடக்கக் கூட வரும்
கற்பனைக்கு கரு அமைய
உன்னை பற்றியே நினைத்திருக்கும்
கண் விழிக்கும் நேரமெல்லாம்
உன் முகமே சுற்றி நிற்கும்
எதை பற்றி நானெழுத
உன்னிடம் பொய்யுரைக்க ஆசையில்லை
உண்மையடி நீ எனக்கு காதலியே!


அழைத்து செல்வாயா ?
வேகமேடுக்கும் உன்
விழிகளின் பார்வையில்
என் நினைவுகளையும்
சேர்த்து அழைத்து செல்வாயா?
உன் உள்ளத்தில் பயனியாக
வர அனுமதி கேட்கிறேன்
பாலைவனத்தில் தனியாக சிக்கி
தவிக்கும் நான்
வழியுமின்றி விழியுமின்றி
கிடக்கிறேன்
அழைத்து செல்வாயா ?
உன் நீண்டநேசப் பயணத்தில்.......................



என்னுயிர் நின்று விடும்

உன் உள்ளத்துப் பயணியாக
வந்த என்னிடமே செல்ல
வழி கேட்கிறாயே பெண்ணே!
எங்கேயாவது செல்................
பயணத்தை நிறுத்தி மட்டும்
விடாதேஎன்னுயிர் நின்று விடும்.........



அதிசயம் தானே நான்..

சாவையருகில் பார்த்ததாக பலர்
சொல்லியிருக்கிறார்கள்
நானோ சாவையே பார்த்து
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
நீ உள்ளே வந்தாயே அந்நொடியே
என்னுயிர் பிரிந்து விட்டது
இருந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
பெண்ணே ! அதிசயம் தானே நான்.....................

Popular Posts