1.07.2008

இழக்க மறவா ஆசைகள்


நட்போடு நாமிருக்க
நாட்ப் பொழுது பார்த்ததில்லை
அதில் கற்போடு தானிருக்க
நாடித் துடிப்பையும் பார்த்ததுண்டு
பூவோடு நார்ப் போல
நாம் மணந்த காலங்கள்
இன்று நினைத்தாலும் சலிக்காமல்
மனதை நனைக்கின்ற கோலங்கள்
துவண்டு விழுந்தப் போதுந்தன்
தூக்கி விடும் கைகள்
தோல்வி கண்ட என் நெஞ்சிக்குத்
துடிப்பூட்டும் விதைகள்
காரிருளில் நான் செல்லும்
வேளையிலும் என்னுடன்
துணையாக வந்த உந்தன் நேசங்கள்
என்னை நான் இழந்தாலும்
உனை இழக்க மறவாஆசைகள் ...!

3 comments:

  1. //துவண்டு விழுந்தப் போதுந்தன்
    தூக்கி விடும் கைகள்
    தோல்வி கண்ட என் நெஞ்சிக்குத்
    துடிப்பூட்டும் விதைகள்
    காரிருளில் நான் செல்லும்
    வேளையிலும் என்னுடன்
    துணையாக வந்த உந்தன் நேசங்கள்//

    என் நட்பின் நினைவுகளை மீட்டிக் கொண்டேன்.நன்றி சகோதரா.

    ReplyDelete
  2. உங்கள் நட்பின் நினைவுகளை மீட்டுக் கொள்ள இந்த வரிகள் உதவி செய்தது என்பதில் மகிழ்ச்சிக் கொள்கிறேன்

    ReplyDelete
  3. துவண்டு விழுந்தப் போதுந்தன்
    தூக்கி விடும் கைகள்
    தோல்வி கண்ட என் நெஞ்சிக்குத்
    துடிப்பூட்டும் விதைகள்

    அருமையான வரிகள் - நட்பின் சிறப்பு

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts