11.25.2011

பெண்களே உங்கள் அகத்தில் அச்சம் தவிர்ப்பது எப்பொழுது?

 
 சமீபத்தில் இணையத்தில் ஒரு கட்டுரைப் படித்தேன். வெளியூரில் இருந்து சென்னையில் வந்து தங்கிப் படிக்கும் பெண்ணின் அவலக் கதை. சென்னையில் தனியார் விடுதி ஒன்றில் தங்கிப் படிக்கும் பெண். தனியார் விடுதியில் சேர்ந்த முதல் நாளே அவளுக்கு தேனீரில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து, அவளை மயக்கமடைய செய்திருக்கின்றனர்.
மயக்க நிலையில் இருந்த பெண்னை, அந்த விடுதியில் தங்கியிருக்கும் பெண்கள் கேமராவில் நிர்வாணமாக படம் எடுத்து அவளை மிரட்டி விபசாரத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கின்றனர். இப்பொழுது அந்த பெண் படித்துக் கொண்டே தொழிலுக்கும் போவதாக சொல்கிறாள். என்னைப் போல் இன்னும் நிறைய பெண்கள் இப்படி மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று வேறு அதிர்ச்சி தரும் தகவலை சொல்லியிருக்கிறாள். ஆனால் அவள் வீட்டிற்கு அவள் படித்துக் கொண்டிருப்பதாக மட்டுமே தெரியும். இன்னும் இப்படி எத்தனைப் பெண்கள் இப்படி மாட்டியிருக்கிறார்களோ? பெண்களே பெண்கள் மீது இழைக்கும் இந்த அநீதியை எப்படி தடுப்பது?
     அப்படியெனில் ஒரு பெண்ணை நிர்வாணமாக படம் பிடித்துவிட்டால் அவளை அடிமைப் படுத்திவிடலாம் என்ற அவல நிலை என்று தான் மாறும். எல்லாமே வியாபாரமான இன்றைய சமூக சூழலில் இன்றைய பெண்களை இந்த சிக்கலில் இருந்து எப்படி பாதுகாப்பது?
     மகளிர் அமைப்போ, பெண்கள் சமூகமோ என்று அதன் மீது மட்டும் இந்த சுமையை ஏற்றி வைத்துவிட எனக்கு விருப்பமில்லை. ஒரு பெண் இப்படிபட்ட சிக்கலில் மாட்டிக் கொண்டால் அவள் அதிலிருந்து தப்பிக்க என்ன வழி ?
     இதை ஒவ்வொரு பெண்ணுக்கும் சமூக நிறுவனமோ, அமைப்போ சொல்லித் தர முடியாது. கல்வி கற்கும் ஆசிரியரும், பெற்றோருமே சொல்லித் தர வேண்டும். ஏனென்றால் இன்றைய கலாசார சீரழிவில் இருந்து ஒவ்வொரு பெண்ணையும் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்.
     ஒரு பெண் இப்படிப்பட்ட சிக்கலில் சிக்கிக் கொண்டால், ஏமாற்றும் நபர் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வேண்டும் என்றில்லை. பக்குவமாக யோசியுங்கள், நிர்வாணம் ஒன்றும் உங்கள் கற்பையோ, மானத்தையோ நிர்ணயிக்கவில்லை. எனவே அதை வைத்து ஏமாற்றுபவர் பெண்ணாக இருந்தாலும் சரி ஆணாக இருந்தாலும் சரி நீங்கள் பயப்படத் தேவையில்லை. நீங்கள் பயந்தால் உங்களை இன்னும் மென்மேலும் பயன்படுத்திக் கொள்வார்கள். எனவே துணிவுடன் செயல்பட்டு இது போல் மாட்டிக் கொள்ளும் பெண்களுக்கு வழிக்காட்டியாக இருங்கள். விரைவில் இப்படி செய்யும் மிருகங்கள் எல்லாம் புற்றீசல்களாக மறைந்துவிடுவர். 
  பெண்களே புறத்தால் அறியாமையை கலைந்துவிட்டீர்கள். அகத்தால் அறியாமையை எப்பொழுது கலைவீர்கள். பெண்களே உங்கள் அகம் அச்சம் தவிர்ப்பது எப்பொழுது?




வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

9 comments:

  1. nalla hostel mattum kidaiththaal pothaathu nalla hostelil nalla room mettum kidaikka vendum.. illai enraal paadu thindaattam thaan...

    ReplyDelete
  2. நீங்கள் பயந்தால் உங்களை இன்னும் மென்மேலும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

    சரியா சொன்னேங்க...ஒரு பெண் முதல பயத்த தவிர்த்தாலே பாதி பிரச்சனை நீங்கும்..பெண்மையின் மீது ஒரு ஆணின் ஆதங்கம் !!!!!! பதிவை ரசிக்கவைத்தது....நல்ல பதிவு...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. @ரேவா
    ரேவா உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி
    பெண்மையின் மீது ஒரு ஆணின் ஆதங்கம் !!!!!!
    ஆதங்கம் மட்டுமில்லை, கோபமும் கூட...
    ஏன் இவ்வளவு பயந்தாங்கொள்ளியாக இருந்து தங்கள் வாழ்க்கையையே கெடுத்துக் கொள்கிறார்கள் என்று...

    ReplyDelete
  4. @துரைடேனியல்
    பெண்களுக்கு ஆபத்து பெண்களால் தான்.அதற்கு துணைப் புரிவது ஆண்கள் தான். இருவருமே சமூகம்.ஒரு பெண்ணுக்கு ஆபத்து வந்தால் அதில் ஆணும் தான் பாதிக்கப்படுவான்

    ReplyDelete
  5. இப்போது, ஒவ்வொரு முறையும் ஒருவனிடம் நிர்வாணமாக நிற்பதற்கு பதிலாக, முதல் முறை நிர்வாணப் படுத்தியவர்களை அப்போதே காவல் துறையிடமோ, மகளிர் சங்கங்களிலோ காட்டி கொடுத்திருந்தால், மனித நேயமுள்ள காவலர்கள்/சங்கங்கள் இந்த பெண்ணின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு, உலகுக்கு இவரின் முகம்/முகவரி காட்டாமல், இவரது வீரத்தை மட்டும் உலகறிய செய்து, இவருக்கு முன்பு இதுபோல் மாட்டிக் கொண்டவர்களை மீட்டு, இனி மாட்டப்போவோரையும் காப்பாற்றி இருக்கலாம். இன்னும் எத்தனை பேர் இது போல் மாட்ட போகிறார்களோ.?

    ReplyDelete
  6. பெண்களுக்கு அச்சம் விலகும் பொழுது தானாக குற்றம் புரிபவர்கள் மறைந்துவிடுவார்கள்.இருப்பினும் இந்த சமூகத்தில் ஆண்களே வீரமற்றவர்களாகத் தான் இருக்கிறார்கள்.இல்லையென்றால் ஒரு பெண்ணை சந்தர்ப்பவாதத்தால் மிரட்டி அடைவார்களா...?
    அது மிகப் பெரிய கோழைத்தனம். இரண்டுப் பக்கத்தில் பெருகி வரும் கோழைத்தனத்திற்கு விஞ்ஞானம் நல்ல தீனிப் போடுகிறது. எழுச்சிமிக்க சமுதாயம் உருவாக இருப் பாலரும் வீரமிக்கவராக மாற வேண்டும்.
    இல்லையெனில் இப்படித்தான் என்னைப் போல் வருங்கால சமுதாயம் வலைத்தளத்தில் மட்டும் புலம்பிக் கொண்டிருக்கும்.

    ReplyDelete
  7. @SUGAN-SARO
    நன்றாக சொன்னீர்கள்

    ReplyDelete
  8. அந்த கட்டுரையில் தாங்கள் குறிப்பிட்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய
    விடயம் தான், நிர்வாணமாய் புகைப்படம் எடுத்து மிரட்டியதால் பாலியல்
    தொழிலில் ஈடுப்பட்ட அந்த பெண்ணின் நிலை குறித்து நான் வேதனைப்படுகிறேன்.

    இரத்தமும் சதையும் தோலுமாய் நிறைந்திருக்கும் நாம் அனைவருமே வெறும்
    சதைபிண்டம் என்பதை ஏன் மனிதர்கள் உணர மறுக்கிறார்கள்.

    கொஞ்சம் உடலில் கீறிவிட்டு நான்கு நாட்கள் அதை கவனிக்காமல் விட்டால்,
    நாற்றமெடுக்கும். தோல் மூடியிருப்பதினாலேயே நாம் கொஞ்சம் லட்சணாய்
    இருக்கிறோம். தோல் உரித்துவிட்டு ஒரு மனிதனை கற்பனை செய்து பாருங்கள்.

    மாமிசம் விற்கும் கடைகளில் தொங்கும் இறைச்சியும் நாமும் ஒன்றுதான்.

    நிர்வாணத்தை வெளிப்படுத்தினால் கற்பு போய்விடுமா என்ன?
    உடல் குறித்த சிந்தனையில் மாற்றம் ஏற்படவேண்டும்.

    ஆதீத காதலுடன் இணையும் போதே உடலுறவில் சுகம் இருக்கும் என்பதை ஏன்
    இருபாலரும் ஏற்க மறுக்கிறார்கள்.

    பெண்களுக்கு பெண்களாலேயே ஆபத்து என்ன கொடுமை இது?

    எனக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் ஒரு ஆண், அவரது பெயர் ஹாசன்.
    பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்தான் குழந்தை பிறந்தது. குழந்தை
    பிறந்தது என்று சொல்வதை விட, சிசரின் செய்து குழந்தையை வெளியில்
    எடுத்தார்கள் என்பதுதான் உண்மை. அப்பொழுது உள்ளிருந்த மருத்துவம் கற்ற
    மாணவர்கள் 12 பேர் ஒரு பெண் மருத்துவர், மருத்துவர் ஹாசன் அவர்கள்
    முன்னிலையில் நான் நிர்வாணமாகவே கிடத்தப்பட்டிருந்தேன்.

    இதினால் என் கற்பு போய்விட்டது என்று கொள்ள முடியுமா? குழந்தை
    எந்த பொசிஷனில் இருக்கிறது என்று பார்ப்பதற்காக அந்த ஆண் மருத்துவர் என்
    உயி்ர் நிலையில் கையை உள் நுழைத்து சோதனை செய்ததினால் கற்பு போய்விட்டது
    என்று சொல்லிவிட முடியுமா?

    கற்பு என்பது நாமாக கற்ப்பித்துக்கொண்ட ஒரு விடயமே, நிர்வாணத்தை
    பார்த்தால் பார்த்துவிட்டு போகட்டுமே அதற்காக உடலுறவிற்கு இணங்க வேண்டிய
    அவசியமில்லை.

    அது வெறும் பிம்பம் என்ற எண்ணம் சமூகத்தில் இருக்கும் இருசாரருக்கும்
    தோன்றினால் ஒழிய இந்த நிலை மாற வழியில்லை என்றே எண்ணுகிறேன்.

    நிர்வாணத்தை பிறர் பார்ப்பதால் எந்த சூழலிலும் கற்பு போக வாய்ப்பில்லை.
    அதற்கு பயந்து உடலுறவிற்கு இணங்கியதாலே அல்லவா கற்பு பறிபோகிறது

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts