10.28.2011

வேலாயுதம் திரைவிமர்சனம்



நீண்ட நாட்களுக்குப் பிறகு இளைய தளபதிக்கு ஒரு பெயர் சொல்லும் படம். வேலாயுதம். படம் ஆரம்பித்தவுடனேயே காஷ்மீரைப் போன்ற ஒரு இடத்தைக் காட்டி தெரியாத மொழியில் ஏதோ பேச,பழைய விஜயகாந்த் பட்த்துக்குள் நுழைந்துவிட்டது போல் ஒரு உணர்வைத் தருகிறது. மீண்டும் அதே தீவிரவாதமா, அய்யோ சாமி கண்ணைக் கட்டுதேன்னு கொஞ்சம் கண் அயர,சிட்டியில் ஒரு வெடிக்குண்டு வெடிக்கிறது. என்னடா இது சென்னைக்குப் பழக்கப்படாத விஷயங்களைக் காட்டுவதிலேயே இந்த தமிழ்சினிமா எவ்வளவு நாள் தான் பயணிக்குமோ தெரியலையே. பழைய சினிமாவில் வருவதுப் போல் ரிப்போர்டர் கூட்டம் அதில் ஜெனிலியா என்று ஆரம்பித்து ஒரு பத்து நிமிடம் பொறுமையாகச் செல்கிறது.

10.25.2011

அவதாருக்கு கைத்தட்டல் கூடங்குளத்திற்கு ஏன் எதிர்ப்பு...?


அவதார் :மனித இனம் வேறு ஒரு கிரகத்திற்கு சென்று அங்கிருக்கும் நாபிகள் என்ற இனத்தை விரட்டிவிட்டு,அங்கிருக்கும் ஒரு பொருளை (தனிமத்தை) கைப்பற்ற எண்ணுகின்றனர். அந்த நாபிகள் இயற்கையோடு இயற்கையாக வாழ்கின்றார்கள். இவர்களுக்கும் இயற்கையை அழிக்க வந்த மனிதர்களுக்கும் இடையில் மிகப் பெரிய யுத்தம் நிகழ்கிறது. அதற்கு மனிதனில் இருந்து ஒருவன் இவர்களுக்கு நாபியாகி உதவுகிறான். இறுதியில் நாபிகள் வெற்றி பெற்று மனிதர்கள் தோற்று, அந்த கிரகத்தை விட்டே துரத்தப்படுகிறார்கள்.

Popular Posts