11.12.2011

பிளாக்கரில் நான் செய்த தவறுகள் உதவுங்கள்




ஒரு பதிவை எழுதிவிட்டு அதை பதிந்த பின் மறுமுறை அதை மீண்டும் திருத்துவது இயலாமல் இருக்கிறது. நேற்று சில மாற்றங்களை செய்து அதை சேமித்தேன். நீண்ட நேரமாகியும் பதிவு சேமிக்கப் படாமலேயே இருக்கிறது.
என்ன செய்வது என்றுத் தெரியவில்லை.

ஏழாம் அறிவுக்கு ஒரு உதவி இயக்குனராக நான் எழுதும் திரைக்கதை (2)


வாசக நண்பர்களே இந்தப் பதிவை படிப்பதற்கு முன் இதற்கு முந்தையப் பதிவை படிக்கவும். இதற்கு முன் படித்தவர்களிடம் முதலில் தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பதிவு மிக நீண்டதாக மாறிவிட்டது. எத்தனை முயன்றும் தவிர்க்க முடியவில்லை. சீன மொழி பேசும் இடங்களில் எல்லாம்  தமிழையே பயன்படுத்தியிருக்கிறேன். வேறு வழியில்லை இன்னும் நீண்டு விடும் என்பதனால்....
வாசக நண்பர்களே படித்துவிட்டு இதன் நிறை குறைகளை மறக்காமல் பின்னூட்டம் இடவும்.
இடைவேளி முடிந்ததும்

11.11.2011

ஏழாம் அறிவு திரைவிமர்சனம்: ரசனைக்கு எட்டாத அறிவு



உதயநிதி ஸ்டாலின் ,ஏ.ஆர்.முருகதாஸ்,சூர்யா,ரவி.கே.சந்திரன்,ஹாரிஸ் ஜெயராஜ், பீட்ட்ர் ஹெயின், ஆண்டனி என்று மிகப் பிரம்மாண்டமான கூட்டணியில் ஒரு படைப்பு. ஆயுதப் பூஜையில் இருந்தே ஏழாம் அறிவிற்கான பரபரப்பை கூட்டிவிட்டது மீடியாக்கள். தமிழக மக்களின்றி உலக தமிழர்கள் அனைவரிடமும் ஒரு எதிர்ப்பார்ப்பை கிளப்பிவிட்டது இந்த மீடியாக்கள்

ஏழாம் அறிவுக்கு ஒரு உதவி இயக்குனராக நான் எழுதும் திரைக்கதை


இது கிண்டலுக்காக அல்ல. உண்மையில் ஏழாம் அறிவைப் பார்க்கையில் சில இடங்களில் வியந்தேன். இருப்பினும் அந்த திரைக்கதை என் மனதில் சிறு உறுத்தலை உண்டு செய்ததால் என் மனதில் இப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணியதை எழுதுகிறேன்.

Ø  திரைப்படம் ஆரம்பித்து முதல் 15 நிமிடங்கள் எந்த மாற்றமும் இல்லை. போதி தர்மனின் வாழ்க்கை அப்படியே திரையில் வருகிறது. அதற்கு அடுத்து போதிதர்மன் இறந்ததும் இந்தியத் தேசத்தைக் காட்டுகிறோம். தமிழகம் காட்டப்படுகிறது.

Ø  சென்னை மாநகரில் ஸ்ருதிஹாசன் ( சுபா ஸ்ரீனிவாசன்) படிக்கும் கல்லூரி காட்டப்படுகிறது. ஒரு பேராசிரியர் வந்து ஆராய்ச்சிப் பற்றி சொல்லிவிட்டு, அதை எந்த தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு செல்கிறார். 

11.09.2011

மனம் என்ன காதலின் விருந்தாளியா?



இது என்ன புது உணர்வு
எதைக் கொடுப்பது நான்...
நீ என்னிடம் எடுத்துச் சென்றது
திரும்பப் பெற முடியாத உணர்வுகள்
அல்லவா...
அப்படியிருக்க என்னிடம் நீ
எதைக் கேட்கிறாய் பெண்ணே!
கொடுத்த சில பொருட்களைத்
திருப்பிக் கொடுத்துவிட்டு
எல்லாவற்றையும்
நான் கொடுத்துவிட்டேன்...

Popular Posts