8.13.2012

குழந்தையின் பிறந்த நாள் வாழ்த்து



அம்மா ! அம்மா! இன்று உன் பிறந்த நாளா?
எனக்கு இன்று உன்னை அழுது தொந்திரவு செய்ய
கூடாது என்று ஆசை.
இருப்பினும் நான் அழா விட்டால்
எனக்கு ஏதோ என்று நீ
அழுது விடுவாயோ என்று நான் அழுகிறேன்.
எனக்கு எல்லோரையும் போல் இனிப்பான
கேக் வேண்டும் என்றால் நீ தரவாப் போகிறாய்.
எனக்கு மற்றவர்களைப் போல் பரிசுக் கொடுத்தும்
வாழ்த்து அட்டைக் கொடுத்தும்
 உன்னை பாராட்டத் தெரியாது.
ஆனால் கற்றுக் கொள்வேன்.
சகலமும் உன்னைப் போல் கற்றுக் கொள்வேன்.
இருப்பினும் இன்று என்னுடைய வாழ்த்தை
அம்மா உனக்கு நான் எப்படி தெரிவிப்பது.
நான் பிறந்து முதலில் வரும் உன் பிறந்த
நாளுக்கு உனக்கு என்ன பரிசு தருவது.
நானே உனக்கு பரிசு என்று நீ சொல்வாயே
என்றுமே என் முகத்தில் தான் விழிக்கிறாய்
இன்று மட்டும் நீ விழிப்பதற்குள் நான்
விழித்து உன் முகத்துக்கு அருகில் சின்ன
சிரிப்பை உதிர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
அம்மா! பிற்காலத்தில் பாடம் படிக்க உன்னை
காலையில் எழுப்ப சொல்லுவேன்
அதை இன்று முதலே நீ ஆரம்பித்து வீடு.
ஆம் என்னை காலையில் எழுப்பு
எல்லோருக்கும் முன் நான் தான் உன்னை
முதலில் பார்க்க வேண்டும்.
என் அழுகை சத்தம் உன்னை வாழ்த்தும்
என் சத்தமில்லாத சிரிப்பு உன்னை தாலாட்டும்
அம்மா இன்று தானே நீ பிறந்தாய்
என்னை போல் நீயும் குழந்தை தானே

இப்படிக்கு ..........................மழலை


வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

13 comments:

  1. நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்....
    என் வலைக்கு உங்களை வரவேற்கிறேன்... "பாதை மாறும் பயணம்" கட்டுரை படித்து கருத்துரைக்கவும்... நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி.

      Delete
  2. என் அழுகை சத்தம் உன்னை வாழ்த்தும்
    என் சத்தமில்லாத சிரிப்பு உன்னை தாலாட்டும், அருமையான வரிகள்...அம்மாவின் பிறந்த நாளுக்கு மழலை சொல்லும் வாழ்த்து பார்த்தேன்...படித்தேன். ரசித்து ருசித்ததில் கவிஞரின் தாய் பாசம் மட்டுமே இனித்தது மனதில்

    ReplyDelete
    Replies
    1. தாய்பாசம் கவிஞருக்கு மட்டுமின்றி இந்த உலகம் முழுதும் நிரம்பி இருப்பதால் தான்,என்னை இந்த கவிதை எழுதத் தூண்டியது

      Delete
  3. "இருப்பினும் நான் அழா விட்டால்
    எனக்கு ஏதோ என்று நீ
    அழுது விடுவாயோ என்று நான் அழுகிறேன்."
    பிரமாதம்! தாய்மையின் அழகும் மழலையின் இன்பமும் கவிதையில் மகிழ்விக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தாய்மை என்றுமே அழகு, மழை என்றுமே இன்பம். இந்த கவிதை உங்களை மகிழ்வித்ததில் எனக்கும் மகிழ்ச்சியே. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  4. என்னங்க இது... தாய் தான் குழந்தைக்கு கவி எழுதுவார்கள்... இங்கே மழலை... அருமை...

    ஒவ்வொரு வரியும் ரசித்தேன்... பாராட்டுக்கள்... நன்றி...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 2)


    அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !

    ReplyDelete
    Replies
    1. இது குழந்தைப் பாடும் தாலாட்டு போல் இது ஒரு வாழ்த்து

      Delete
  5. வித்தியாசமான சிந்தனை
    அருமையான மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. உங்கள் பின்னூட்டத்திற்கு வாழ்த்திற்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  7. என் அழுகை சத்தம் உன்னை வாழ்த்தும்
    என் சத்தமில்லாத சிரிப்பு உன்னை தாலாட்டும்
    அம்மா இன்று தானே நீ பிறந்தாய்
    என்னை போல் நீயும் குழந்தை தானே .

    தாய்க்கு குழந்தையின் அழுகை தாலாட்டு.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

      Delete
  8. அம்மா இன்று தானே நீ பிறந்தாய்
    என்னை போல் நீயும் குழந்தை தானே

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts