10.02.2012

காந்தி கணக்கு : தமிழர்களின் துரோகச் செயல்(தெளிவான விளக்கம்)


காந்தி கணக்கு” தமிழ்நாட்டில் பெரும்பாலும் அபத்தமாகப் பிரபலமாகியுள்ளது. இந்த வார்த்தையின் தோற்றம் பற்றி இன்று காலை ஒரு தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள் பேசினார்.
       அதில் காந்தி கணக்கு என்ற வார்த்தை எப்படி வந்தது என்ற வரலாற்றைச் சொன்னார். பெரும்பாலும் திரும்ப வராத, ஏமாற்றப்பட்ட கணக்குகளையே காந்தி கணக்கில் எழுது என்று சொல்லும் வழக்கம் தமிழர்களிடையே பரவி  இருக்கிறது.
       இந்த வழக்கம் நம் தமிழ்நாட்டில் மட்டும் தானா … பிற மாநிலங்களிலும்  இருக்கிறதா ? என்று ஆராய்ந்தால் இல்லை என்ற பதில் தான் வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த காந்தி கணக்கு என்ற சொல்வழக்கு பரவியிருக்கிறது.
       ஒரு நேர்மையான மனிதரைப் பற்றி இப்படி ஒரு வழக்கம் நிலவுவதை எண்ணி தமிழர்களாகிய நாம் வெட்கப்பட்டே ஆக வேண்டும். இருப்பினும் இந்த வார்த்தை தோன்றிய விதம் தமிழ்நாட்டில் வேறு விதமாகவே உள்ளது.
       இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன் இருந்த காலக்கட்டங்களில் பல நிறுவனங்களின் கணக்குகளில்  குளறுபடிகள் வரும் பொழுதெல்லாம், அந்த தொகையை சரி செய்ய “ மகாத்மா காந்தியின் சுதந்திரப் போராட்டத்திற்காக நன்கொடையாக அளிக்கப்பட்டது என்ற கணக்கில் சேர்த்துவிடுவார்களாம். அது மருவி காந்தி கணக்கு என்று மாறி இன்றும் தமிழ் மக்களிடம் பரவி வருகிறது.

       இந்த தலைப்பில் தமிழில் ஒரு திரைப்படம் வேறு வந்தது.பிறகு அந்த தலைப்பிற்கு எதிர்ப்பு வலுக்கவே அதை மகான் கணக்கு என்ற தலைப்பில் வெளியிட்டார்கள். காந்தி கணக்கு என்ற சொல்லிற்கு பின்னே தமிழர்களாகிய நம்முடைய தேச துரோகச் செயல் அப்படமாகத் தெரிவதை நம்மால் மறுக்க முடியாது.
       சுதந்திரப் போராட்டத்திற்காக உதவி செய்யவில்லையென்றாலும், நன்கொடை வழங்கவில்லையென்றாலும், கணக்கில் வராத தொகையையெல்லாம், காந்தியின் போராட்டக் கணக்கில் எழுதிய அந்த துரோகச் செயலை தமிழர்கள் செய்திருக்கிறார்கள் எனும் பொழுது உண்மையில் ஒரு தமிழனாக நான் தலைக் குனிகிறேன்.
       அதுவும் காந்தி கணக்கு என்ற வார்த்தையின் பிரபலம், ஒரு குறிப்பிட்ட தமிழர்களின் ஊழலைப் பறைச்சாற்றுவதாகவே உள்ளது. அந்தக் குறிப்பிட்ட தமிழர்களின் இழிவான செயலால், ஓட்டு மொத்த தமிழர்களின் முகமாகவும் இது இன்று மாறியுள்ளது.
       சுதந்திரப் போராட்டத்திற்காக தன்னுடைய சொத்தையெல்லாம் விற்று கப்பலோட்டியவரும், தமிழர்களாகிய நம் தன்மானத்தைத் தூக்கி நிறுத்தியவருமான வ.உ.சிதம்பரனார் பிறந்த மண்ணில் தான் இப்படி சில ஊழல்காரர்களும் இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது, மனது வலிக்கிறது.
       அது மட்டுமின்றி அதை ஏற்கும் விதத்தில் நாமும் தெரிந்தோ தெரியாமலோ இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது எத்தனைப் பெரிய இழிவான செயல். தமிழர்களின் நகைச்சுவை சிந்தனை ஒரு மகாத்மாவையே இழிவுப்படுத்தும் அளவு கேவலமாகப் போனது எதனால்…?
       சுதந்திரப் போராட்டக் காலத்தில் கூட நாட்டிற்காக கொடுக்கும் கொடையில் தப்பானக் கணக்கை காட்டி அதை காந்தியின் பெயரிலேயே எழுதும் போக்கு எப்படி நம் தமிழர்களுக்கு வந்தது. இன்று இந்திய அரசாங்கம் எதற்கும் எங்களுக்கு உதவவில்லை, என்று கொடித் தூக்கும் பேச்சளவு தமிழர்கள், சுதந்திர வரலாற்றின் ஏடுகளை கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும். பக்கத்து நாட்டு விடுதலைக்காக சீறி எழும் தமிழ் வீரர்கள், நம் தேச விடுதலைக்காக நாம் ஆற்றிய ஊழல் பணியை திரும்பிப் பார்த்தால், நாம் இந்தியன் என்று சொல்லிக் கொள்ளவே அருகதையற்று, தமிழன் என்று சொல்லிக் கொள்ளவும் வெட்கப்பட்டு, மனிதன் என்று சொல்லிக் கொள்ளவும் திரானியற்று தான் இருப்போம் என்பதை மறந்துவிடக் கூடாது. 

  தமிழகத்தில் தியாகம் ஒளிவிட்ட காலக்கட்டத்திலேயே, நம் தேசத்திற்காக கொடுத்த கொடையில், இப்படியொரு ஊழல் இருந்திருக்கிறதே…

       இன்றோ சுயநலத்தின் பிடியில் சிக்கியிருக்கும் தமிழகத்தில் ஒவ்வொரு நன்கொடையிலும், திட்டத்திலும் எத்தனை ஊழல் நடந்துக் கொண்டிருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே...
வறுமை எனபது வன்முறையின் மோசமான ஒரு முகம் என்று சொன்னார் காந்தி.  இந்தியாவின் வறுமைக்கு முக்கிய காரணமே ஊழல் தான். அந்த ஊழலின் முதல் படி தமிழகத்தில் காந்தியின் பேரிலேயே ஆரம்பித்திருக்கிறது என்பதை நாம் ஆதரிக்கலாமா…?
       தமிழர்களாகிய நாம் ஊழலைத் தடுக்க முடியவில்லையென்றாலும், இந்த வார்த்தையின் பிரயோகத்தையாவது தடுக்கலாம் இல்லையா…?
       நாம் தமிழர்கள் என்பது உண்மையென்றால், இந்த வார்த்தையை நிச்சயம் நம் சூழலில் இருந்து ஒழித்தே ஆக வேண்டும். இது மகாத்மாவிற்கு நாம் அளிக்கும் மிகப் பெரிய மதிப்பு மட்டுமின்றி, நம் வருங்கால தலைமுறையினர் ஊழலை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற தொலைநோக்கு சிந்தனையும் தான்.
இப்படி ஒரு மாமனிதர் நம்மிடையே வாழ்ந்து மறைந்தார் என்பதை வருங்கால தலைமுறையினர் எண்ணி அதிசயப்படுவர், அது மட்டுமின்றி அதை நம்புவது அவர்களுக்கு கடினமாக இருக்கும் “ என்று காந்தியின் மறைவில் ஒரு புகழ்ப் பெற்ற மாமனிதர் சொன்னார்.
       ஆம் அவரின் வாழ்க்கை அப்படியொரு எளிமையானது. நம் கற்பனைக்குள் எளிதில் அகப்படாதது. அவர் தோன்றிய இந்நாளில் தமிழர்களாகிய நாம் இந்த ஊழல் வார்த்தையை நம்மிடையே இருந்து அகற்றுவதை கடமையாகக் கொள்வோம்.தமிழன் மேலுள்ள கரையை அகற்றுவோம். விரைவில் வார்த்தையில் மறையும் ஊழல் நம் வாழ்க்கையிலும் மறையும் என்பதில் நம்பிக்கை வைப்போம்
      
      



வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

20 comments:

  1. வார்த்தையில் மறையும் ஊழல் நம் வாழ்க்கையிலும் மறையும் என்பதில் நம்பிக்கை வைப்போம்.
    நம்பிக்கையே வாழ்க்கை ஆதலால் நம்பிக்கையுடன் நானும்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் நம்மையறியாமலேயே நாம் மோசமான நாகரிகமற்ற வார்த்தைகளுக்குப் பழக்கப்பட்டுவிட்டோம். இதை நிச்சயம் மாற்றியே தீர வேண்டும்.

      Delete
  2. காந்தி கணக்கு - சிக்கனத்திற்கும், எளிமைக்கும் சொல்லப்பட்டதை எப்படியெல்லாம் நம்ம மக்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள் என்பதை உங்கள் பதிவின் மூலம் தெரிகிறது...

    உண்மையான பல கருத்துக்களுக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
    Replies
    1. சிக்கனமும், எளிமையும் காந்தியின் வழி, அவரை வைத்து திரிக்கப்பட்ட சொற்றொடர் தான் இந்த வார்த்தை...

      Delete
  3. காந்தி கணக்கு என்றால் என்ன வென்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன்த.மிழர்கள் வெட்கப் படேண்டிய விஷயம்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் எனக்கும் காந்தியின் பிறந்த நாளன்று தான் தெரிந்தது. மனம் மிகவும் வருத்தப்பட்டது நமது செயலை எண்ணி...
      உடனே இங்கே அதை பதிவிட்டேன். இந்த வார்த்தையை உடனே நீக்க முடியவில்லையென்றாலும், பதிவின் மூலம் இந்த வார்த்தையின் இழிவைச் சொல்லவே இந்தப் பதிவு...

      Delete
  4. Replies
    1. ஆம் ஐயா பழைய ஊழலின் புதுத் தகவல் தான்.அதற்கு காந்தியையே பயன்படுத்திக் கொண்ட சில தமிழர்களின் கசப்பான பக்கங்கள்

      Delete
  5. நீங்கள் சொல்வதும் நடந்திருக்கலாம்.
    என் தாத்தா சொன்னது உப்பு சத்தியாக்ரகம் அப்போ சில ஹோட்டல்கள் மூடாமல் திறந்து வைத்து இருந்தார்களாம்; ஆதலால், அங்கு சாப்பிட்டு விட்டு பணம் கேட்ட போது, காந்தி கணக்கில் வைத்துக் கொள் என்று சொன்னார்களாம்

    ReplyDelete
    Replies
    1. என்னச் செய்வது உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இனபம் உணடாவதெங்கே சொல் என் தோழா என்று பாடிய பட்டுக்கோட்டையார் பிறந்த மண்ணில் தான் அவர்களும் பிறந்து மடிந்திருக்கிறார்கள்
      ஆனால் வாழவில்லை. உழைப்பு மட்டுமே ஊழலை ஒழிக்கும் மிகப் பெரிய ஆயுதம். அது அன்றே நம்மிடம் மலிவாகிவிட்டதை தான் இது காட்டுகிறது.

      Delete
  6. அருமை நண்பா .......நானும் கேட்டேன் பாரதி பாஸ்கரின் உரையை அருமையான சிந்தனை வரிகள் பல வார்த்தைகள் இப்படிதான் காலபோக்கில் திரிந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது ஆகவே முதலில் வார்த்தையை மாற்றுவோம் அதன் பின் வழக்கத்தை மாற்றுவோம் ............நல்ல தகவல்களை தரும் நண்பருக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி தோழி. வார்த்தையை மாற்றி,வாழ்க்கையையும் மாற்றுவோம்.

      Delete
  7. மிக்க நன்றி நண்பரே... இந்த பகிர்வு செயலாக மாற வேண்டுமென்பதே என் விருப்பம்.

    ReplyDelete
  8. சில நாட்களுக்கு முன்பு கூட ஒருவர், என்னிடம் இதே வார்த்தையை சொன்னார்... அப்போது யோசித்தேனே ஒழிய ஆராயவில்லை,, இதற்க்கான முழு விளக்கம் இப்போது தான் தெரிந்து கொண்டேன்.. நன்றி திரு ராஜா...

    ReplyDelete
    Replies
    1. சில நாட்களுக்கு முன் மட்டுமல்ல, வரும் நாட்களிலும் நாம் இதை களையவில்லையென்றால், இது தொடர்ந்துக் கொண்டே இருக்கும்.எனவே ஒன்றுச் சேர்ந்து இதைத் தவிர்ப்போம்

      Delete
  9. யார் துரோகி?
    காந்தியா? தமிழனா?
    உண்மை தூங்குகின்றது

    ReplyDelete
  10. இங்கு செயலைப் பற்றி மட்டுமே விவாதிக்கப்படுகிறது. நீங்கள் கேட்கும் கேள்வி ஓட்டு மொத்த தமிழனையும் சார்ந்ததாக இருக்கிறது... ஆனால் அதற்கு அருகில் காந்தி எனும் தனி மனிதரை நிறுத்தியிருக்கிறீர்கள்.

    ஆனால் இது தனிமனிதனின் வைத்து நாட்டின் பேரில் நடந்த மிகப் பெரிய ஊழல். தமிழனாக வருந்த வேண்டிய ஒரு விஷயம்.

    ReplyDelete
  11. சுதந்திரப் போராட்டத்தை கணக்கு காட்டி ஏமாற்றியதாக வெட்கப்பட வேண்டியது இல்லை... இதே ஏமாற்றுவேலையை வெகுவான இந்தியர்களும் செய்திருப்பார்... செய்யவில்லை என்று சான்று ஏதும் உண்டா? காந்தி கணக்கு என்று பிம்பம் கொடுத்திருக்கமாட்டர் அவ்வளவு தான்.. அதே வேளையில், கார்கில் , குசராத் பூகம்பம் போன்ற நிகழ்வுகளில் மாநில அரசு திரட்டிய நிதிகளில் தமிழகம் தான் தனித்து நின்றது என்பதையும் மறக்க வேண்டாம்...

    ReplyDelete
    Replies
    1. சதீஷ் என்ன சொல்ல வருகிறீர்கள்...?
      பிறருக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தந்ததில் முன்னோடியாக விளங்குவது தான் தமிழர்களின் மரபு.
      அதை விடுத்து பிறர் செய்கிறார்கள். அதனால் இதற்கு வெட்கப்பட தேவையில்லை என்று சொல்வது எந்த வகை நியாயம்
      ஒரு நன்மை செய்துவிட்டால் நாலு தீமைகள் செய்யலாமா...?
      கொஞ்சம் திருக்குறளைப் புரட்டிப் பாருங்கள்...

      Delete
  12. தமிழர்கள் ஏன் யா வெட்கபடனும்... சுதந்திர போராட்ட நாட்களிலேயே கள்ள கணக்கு ல வந்த பணத்தை காங்கிரஸ் கு கொடுத்த நாய்கள்.... அதன் முளியமா மக்களிடம் உங்கள்ளின் வாழ்கை தரத்தை முனேற்ற படுகிறோம் என ஏமாற்றிய நாய்கள்ல்லாம் தான் வெட்க படனும்....

    இதில் வெட்கப்பட தேவையில்லை...

    தமிழன் உண்மையை தான் சொல்லுறான்....

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts