9.07.2012

எனது வாசிப்பில் தென்றலின் கனவு (திருமதி சங்கர் சசிகலா)

 

     உலக தமிழ்ப்பதிவர்கள் சந்திப்பில் பதிவர் சந்திப்பு 26-08-2012 அன்று சென்னையில் வெற்றிக்கரமாக நடந்து முடிந்தது. அந்த சந்திப்பில் பதிவர் சசிகலா அவர்களின் தென்றலின் கனவு என்ற கவிதைப் புத்தக வெளியீடு நடந்ததை தமிழ்ப்பதிவ நண்பர்கள் அனைவரும் அறிவர். அந்த விழாவில் கலந்துக் கொண்ட அனைவர்க்கும் தென்றலின் கனவு புத்தகம் வழங்கப்பட்டது. உடனே அந்தப் புத்தகத்தில் உள்ள கவிதைகளைப் படிக்க முடியவில்லையென்றாலும்,தொடர்ந்து நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் படித்தேன். ஒரு குறிப்பிட்ட பக்கத்திற்கு மேல் என்னால் தென்றலின் கனவை கீழே வைக்க முடியவில்லை. அந்த அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்.

9.06.2012

என்னவள்


 

ன்பு நிறைந்த முகம்
சை குறைந்த மனம்
பொன்னின் திறந்த குணம்
தேனின் இனிய மணம்
என் கண்ணில் விழுந்த கனம்

ஆண் பெண்ணின் அகப்புறச் சூழல்

 
     எத்தனைத் தான் காலம் மாறினாலும் இன்றும் மனித உழைப்பை உறிஞ்சும் அவலம் நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அது காலத்திற்க்கேற்ப கொஞ்சம் வித்தியாசமான முறையில் நடந்து கொண்டிருக்கிறது.
     சமீபத்தில் ஒரு பிரபல நிறுவனத்திற்கு என் நண்பனைக் காணச் செல்ல நேர்ந்தது. மக்களை இணைக்கும் சேவையில் இருக்கும் அந்த பிரமாண்டமான நிறுவனத்தில் வேலை செய்வதையே பெருமையாகக் கருதுபவர்கள் பலர். ஒரளவு படித்த மாணவமாணவிகளையும் உடனே வேலைக்கு அமர்த்தும் நிறுவனமாக அந்த சுத்து வட்டாரத்தையே கவர்ந்து கொண்டிருக்கிறது அது.

9.05.2012

என் தலை சீவும் வயதில்

ன் தலை சீவூம் வயதில்உனை
நினைத்தேனே மனதில்
ன் இளங்கால வாழ்வில்உனை
சைத்தேனே நாவில்
காற்றென்ற வடிவில் உனை
ரைந்தேனே உருவாய்
ரு உருவான சேற்றில்உனை
தாமரையின் வடிவாய்

9.04.2012

திரைவிமர்சனம் : முகமூடி தொழில்நுட்பப் பூச்சாண்டி


     மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் திரைக்கு வந்திருக்கிறது மிஷ்கினின் சூப்பர் ஹீரோ முகமூடி. தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஹீரோ திரைப்ப்டம் என்று நிறைய விளம்பரங்கள். கமல் நடித்த குரு என்னவாயிற்று என்று என் மனக்கேள்விக்கு பலரிடம் விடைக் கேட்டும் இன்னும் கிடைக்கவில்லை.
     இல்லை ஹாலிவுட்டில் வருவதுப் போல் அந்தப் பாணியில் எடுத்தால் தான் அது சூப்பர் ஹீரோ திரைப்படமாக ஏற்றுக் கொள்ளப்படும் என்று முகமூடியைப் பார்த்துத் தெரிந்துக் கொள்ளலாம்.

9.03.2012

அக்பரால முடியல, ஐன்ஸ்டீனாலக் கூட முடியல

     தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாமென்று அம்ர்ந்தால் விளம்பரங்கள் தான் நம்மை பெரிதும் ஆக்ரமிக்கின்றன. சமீபத்தில் நான் பார்த்து யோசித்த ஒரு விளம்பரம்.
     சாக்லேட் ஹார்லிக்ஸின் ஒரு விளம்பரம். ஒரு சிறுவன் அகபர் வேடத்தில் பால் குடிக்க மறுக்கிறான்.ஐன்ஸ்டீன் வேடத்தில் இன்னொரு சிறுவன் அப்படியே பால் குடிக்க மறுக்கிறான். பின்னணியில் ஒரு குரல் ஒலிக்குது,

பார்க்கக் கூட வெட்கப்பட்டால்

 
பார்க்கக் கூட வெட்கப்பட்டால்
உனக்கு என் முகம் மறந்துவிடாது
ன்றதும் , ஒரு பார்வைப் 
பார்த்தாயே நீ!
ன் ஆயூளில் மறக்க முடியாது
அந்தப் பார்வையை

Popular Posts