10.19.2012

கங்கை நீர் புற்று நோயை உண்டாக்கும்!: ஆய்வு




இதைப் பற்றிய ஒரு பதிவை நான் ஏற்கனவே என் வலைத்தளத்தில் எழுதியிருந்தாலும் , இது அவசியம் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய பதிவு என்பதால், என் தளத்தில் பகிர்கிறேன்

புதுடெல்லி:புனித நதியாக கருதப்படும் கங்கை நதி மாசடைந்து பல ஆண்டு களாகிவிட்ட நிலையில், தற்போது கங்கை நீரில் புற்று நோயை உண்டாக்கும் கார்சினோஜென்ஸ் (carcinogens)எனப்படும் புற்று நோயை உண்டாக்கக்கூடிய காரணிகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

10.18.2012

ரணகளம் : என்னுடைய முதல் குறும்படம்

          

       ரணகளம் என்னுடைய முதல் குறும்படமாக அமைந்துவிட்டது. உண்மையில் குறும்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கு இருந்தது இல்லை. 
           ஆனால் என் நண்பனுக்கு உதவ சென்ற நான் குறும்பட இயக்குனராகிவிட்டேன். கல்லூரியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த என் நண்பன் விளையாட்டாக அங்கு அவனுடன் வேலைப் பார்த்தவர்களுடன் சேர்ந்து ஒரு கதைக் கருவை மட்டும் வைத்துக் கொண்டு படப்பிடிப்புக்குரிய அனைத்து வேலைகளையும் தொடங்கிவிட்டான்.

10.17.2012

பேராசையும் பெரியப் படங்களின் வீழ்ச்சியும்




       2012 ஆம் ஆண்டு திரைத்துறையில் பெரிய சலனத்தை ஏற்படுத்திய ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும். பல கோடி சம்பளத்தை ஸ்டார்களுக்கு கொட்டிக் கொடுத்து, பல கோடிகளில் படங்களை தயாரிக்கும் பழக்கம் தமிழ்த் திரையுலகில் கடந்த பல வருடங்களாக நிகழ்ந்த வண்ணமிருப்பது அனைவரும் அறிந்ததே…

10.16.2012

கொஞ்சம் தமிழ் கொஞ்சும் காதல் (6)




எனக்காக காத்துக் கொண்டிருந்த
உன் விழிகளின் ஏக்கத்தை
அந்த ஒளிக் கூட என்னிடம்
சொல்ல முடியாமல் சீக்கிரம்
கதிரவனை மேற்கு நோக்கி
அனுப்பிக் கொண்டிருந்தது.
வான் வெளி யெல்லாம்
உன் விழிச் சிவப்பினைக்
களவாடிக் கொண்டிருந்தது.
உன் மெல்லியக் கைகள்
பூக்களைக் கோர்த்துக்
கொண்டிருந்தது.

10.15.2012

எனது பிளாக்கில் பிரபலமான இடுகைகள் எல்லாம் மாறிவிட்டன




       இன்று காலை எனது பிளாக்கை திறந்துப் பார்க்கையில் எனது பிரபலமான இடுகைகள் அடங்கிய பகுதியில் இடுகைகள் எல்லாம் மாறியிருக்கின்றன. அது மட்டுமின்றி எனது பேஸ் வீயூவில் இருந்த கவுண்ட் அப்படியே பல ஆயிரங்களில் இருந்து மறைந்து 20க்கு வந்துவிட்டது.

10.14.2012

மகிழ்ச்சி பற்றி நீயா நானாவில் அலசல்




       டந்த வாரத்திலேயே இதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். இருப்பினும் சில அலுவல்களால் எழுத முடியாமலேயே இருந்தது. இன்று தான் இதற்கு நேரம் வாய்த்திருக்கிறது.
       கிழ்ச்சியைப் பற்றி 30.09.2012 நடந்த நீயா நானாவில் பகிர்ந்துக் கொண்ட கருத்துக்கள் உண்மையில் நம் சமூகத்தின் அச்சு அசல் கலாசாரத்தின் பிரதிபலிப்பாகவே இருந்தது. ஆம் அந்த நிகழ்வில் சந்தோசம்  என்ற வார்த்தைப் பிரயோகத்திலே அவர்கள் பேசினார்கள்.அந்த வாரம் பார்க்காதவர்கள் இங்கே கிளிக் செய்யவும் நீயா நானா

Popular Posts