1.30.2013

விஸ்வரூபம் : சமூக அறியாமையின் எதிர்ப்பு குரல்




         இந்தப் படத்தை பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவன் தன் சமூகத்தைச் சார்ந்தவனின் அறியாமையையும், வன்முறையையும் எதிர்த்துப் போராடுகிறான். இதில் நாடு, மதம், இனம் தாண்டிய பார்வை இந்தப் படத்தில் தெரிவது தெளிவு. இதில் தமிழகம், இந்திய முஸ்லீம்கள் பற்றிய கருத்துக்கள் எதுவும் இல்லை என்று நான் சொல்லிக் கொண்டு இந்த விமர்சனத்தை ஆரம்பிக்கப் போவதே இல்லை.

விஸ்வரூபம் : நான் பார்த்த கதை




       தமிழகத்தில் இது வரை எந்தப் படத்திற்கும் இந்தளவு எதிர்ப்பு கிளம்பியது இல்லை. அது போன்று இந்தப் படம் பெற்ற விளம்பரம் போல் எந்தப் படமும் இது வரை பெற்றதில்லை என்று தான் சொல்ல வேண்டும். உலகம் முழுதும் வெளியாகி முதல் முறை தமிழகத்தில் தடை செய்யப்பட முதல் தமிழ்ப்படம் இதுவாகத் தான் இருக்கும்.அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளா, மற்றும் கர்நாடகாவின் சில இடங்களில் விஸ்வரூபம் ஓடிக் கொண்டிருக்க, தமிழகத்தில் மட்டும் வெளியாகாதது மிகப் பெரிய ஏமாற்றம் தான்.

Popular Posts