2.13.2008

காதல் சிறை




உன் கனவு... உன் நினைவு...


தூங்கும் பொழுதல்ல உன் கனவு
என்னை தூங்க விடாமல் செய்கிறது
உன் கனவு விழிக்கும் பொழுது மட்டுமல்ல
உன் நினைவு எப்பொழுதும்
விழித்துக் கொண்டே இருக்கிறது
உன் நினைவு











காதல் விழி


தூக்கம் மறக்கும் உனது விழிகள்
என் விழியில் விழிப்பு கொள்வதால்
என் தூக்கம் தூங்க விழிகள்
உன் விழியை தேடி அலையும்
என் விழியில் விழிக்க நீயும்
உன் விழியில் தூங்க நானும்
பார்வையின்றி அலைந்தோம்
காதல் விழியில் பார்வைப்பெற்றோம்.
























ஒன்றிரண்டு வாசகங்கள்
உன்னைப் பற்றி நானெழுத
வெள்ளைத் தாளில் ஓடு மடி
கவிதை என்ற பேரருவி
சிந்தி விழும் துளி சிரிப்பும்
உன்னுடனே உறவு சொல்லும்
பொத்தி வைத்த ஆசையெல்லாம்
நீ நடக்கக் கூட வரும்
கற்பனைக்கு கரு அமைய
உன்னைப் பற்றியே நினைத்திருக்கும்
கண் விழிக்கும் நேரமெல்லாம்
உன் முகமே சுற்றி நிற்கும்
எதை பற்றி நானெழுத
உன்னிடம் பொய்யுரைக்க ஆசையில்லை
உண்மையடி நீ எனக்கு காதலியே!








அழைத்து செல்வாயா ?






வேகமேடுக்கும் உன்விழிகளின்
பார்வையில் என் நினைவுகளையும்
சேர்த்து அழைத்து செல்வாயா?
உன் உள்ளத்தில் பயனியாக
வர அனுமதி கேட்கிறேன்
பாலைவனத்தில் தனியாக
சிக்கித்தவிக்கும் நான்
வழியுமின்றி விழியுமின்றி
கிடக்கிறேன்
அழைத்து செல்வாயா ?
உன் நீண்டநேசப் பயணத்தில்.......................




என்னுயிர் நின்று விடும்















உன் உள்ளத்துப் பயணியாக
வந்த என்னிடமே செல்லவழி
கேட்கிறாயே பெண்ணே!
எங்கேயாவது செல்................
பயணத்தை நிறுத்தி மட்டும்விடாதே
என்னுயிர் நின்று விடும்.........




அதிசயம் தானே நான்..


















சாவையருகில் பார்த்ததாக பலர்
சொல்லியிருக்கிறார்கள்
நானோ சாவையே பார்த்து
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
நீ உள்ளே வந்தாயே
அந்நொடியே என்னுயிர்
பிரிந்து விட்டது
இருந்தும் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்பெண்ணே !
அதிசயம் தானே நான்.....................






என்னை மீட்டுக்கொடு!














உன் துப்பட்டாவால் நான் விழுந்தேன்
அன்பே என்னை தூக்கி விடு!
உன் இருவிழி பார்வையில் எனை மறந்தேன்
அன்பே என்னை மீட்டுக்கொடு!
ஓருயிர் தானே எனக்குள் இருப்பது
இருயிர் சுமக்க இதயத்தில் இடமெது
கருவினில் கூட இருயிர் தோன்றும்
என் இதயத்தில் என்றுமே ஓருயிர் தான்
அதுவும் என்றும் உன்னிடம் தான்






மறுப்பிறப்பெடுக்குதே.............

உன் கண் இமைக்குதே
எனை சிறை வைக்குதே
உன் இதழ் திறக்குதே
அது கவி படைக்குதே
நீயும் புன்னகைக்கையில்
என்னுயிர் மறுப்பிறப்பெடுக்குதே.............




காதல் சுடுமோ!


காதல் சுடுமோ! கண்ணீர் வருமோ!
கனவும் நினைவும் கவலையை தருமோ!
மறதியும் மனதில் மறைவின்றி எழுமோ!
முற்களின் வலியை பூக்கள் தருமோ!
சொற்களும் சுமையாய் நெஞ்சினில் விழுமோ!
என்னவளே!
அடி என்னவளே!
ஒரு சொல் சொன்னாய் என் நெஞ்சுள்ளே........
வாழ்ந்தது போதும் என்று நினைப்பது போல்........




யாரிடமும் சொல்லிவிடாதே!



என் வாழ்க்கை எப்படி போகும்
உன் சொல்லால் பாதைகள் மாறும்
கனவாய் நீ இல்லை உயிராய்
உள்ளிருந்து மனமாய் இயங்குகிறாய்
பொய்யை மறைக்கின்றேன் நான்
இருப்பதாக இந்த உடலில்
உண்மையில் நீயே எனை
ஆட்கொண்டாய் உன் பார்வையில்
யாரையோ கூப்பிட்டு விட்டு
என்னை அழைத்தேன் என்கிறார்கள்
எனக்கு செவிகள் வேலை செய்யவில்லை
என்று என் நண்பர்கள் சொல்கிறார்கள்
நல்ல வேளை செவிகள் மட்டும் தான்
அவர்களுக்கு தெரிந்திருக்கிறது
என்னுயிரே வேலை செய்ய வில்லை
என்பது உனக்கும் எனக்கும் மட்டுமே
தெரியும்.................
தயவு செய்து யாரிடமும் சொல்லிவிடாதே!






ஒரு முத்தம் கேட்டேன்













உன்னிடம் ஒரு முத்தம் கேட்டேன்
யாருமில்லாத இடத்திற்கு வா என்றாய்
உன்னுடைய முத்தம் அவ்வளவு
அழுத்தமான சத்த முத்தமோ!
என்றேன்..............
உன்னீரு கண்களால் என்னை
எரித்து விடுவதைப் போல
பார்த்தாய்...................
உன் கோபம் நான் சொன்ன
உண்மையிலா! இல்லை
சொல்லாது விட்ட பொய்யிலா!
என்றேன்எது உண்மை? எது பொய்?
தெரியாதவள் போல் கேட்டாய்
நீ கொடுப்பதாய் சொன்ன
உன் முத்தம் உண்மை
நீ கோபிப்பதாய் நடிக்கும்
உன் கண்கள் பொய்யென்றேன்
மௌனமானாய்!!
இந்த மௌனம் முத்தத்திற்கான
சம்மதமோ! கேட்டேன்
வெட்க்கத்தால் தலைக்கவிழ்ந்தாய் நீ
உன் வெட்கத்தின் அழகை
காணத் தானே இத்தனை
முயற்சியும்
மகிழ்ச்சியில் நான்..............




தலைவணங்குகிறது



கற்பூர தீபத்தைக் காட்டுகையில்
எல்லோரும் கை கூப்பித் தலைவணங்கினர்
என்ன அதிசயம்! அதுவோ!
உன்னைக் கண்டு
தலைவணங்குகிறது.........
அதற்கும் தெரிந்திருக்கிறது நீ
என்னுடைய தெய்வமென்று.......................













அனுமதிப்பதில்லை



கண்ணீரை என் தோட்டத்தில்
என்றுமே நான் அனுமதித்ததில்லை
ஏனோ அதனாலேயே பூக்களையும்
நான் அனுமதிப்பதில்லை
ஏனென்று கேட்கிறாயா?
தன்னை காட்டிலும் ஓர்
மென்மையான அழகா!என்று
உன்னை கண்டதும்
கண்ணீர் விடுகின்றது பூக்கள்
என்ன செய்ய.................




என்னைப் பார்த்து நீ......




துறவியென்றாய் என்னைப் பார்த்து நீ........
இல்லை! நான் துறவியைக் காட்டிலும்
மேன்மையானவன்
துறவியால் தன் உயிரின் உருவத்தை
காண இயலாது
அதைத் தேடியே தன் வாழ்நாளை
வீணடிப்பவன்
நானோ! அதை என்னருகிலேயே காண்கிறேன்
இதோ என்னுயிர் சிரிக்கிறது,
பேசுகிறது, அசைகிறது
அழகாக வெட்கப்படுகிறது
என்று உன்னை கைக் காட்ட
நீயோ! உன் இரண்டு கைகளாலும்
முகத்தை மூடியபடி
உனக்கு ஒரு கும்பிடு என்றாய் ......
என்னைப் பார்த்து
ஆ! என்னுயிருக்கு கும்பிடவும் தெரிந்திருக்கிறது

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts