11.15.2011

அம்மா உனக்குத் தெரியுமா?

அடிக்கடி நீ தொட்டுப் பார்க்கும்
அடி வயிற்றில் தான் நான் துடிக்கின்றேன்

நொடிக் கொரு முறை என் சலனத்தை

நீ ரசிப்பதை நானும் உணர்கின்றேன்

இரவு பகலென எது வந்தாலும்

நீ சிரிக்கும் பொழுது இங்கு பகலென

உணர்கிறேன்

நீ சிரிக்காத பொழுது இரவெனக்

கொள்கிறேன்

என் கருவறை நாட்களில் பகல்

நீள வேண்டும் என்னை வளர்ப்பவளே!

எனக்காக சுவாசிக்கும்
  நீ
எனக்காக உண்ணும் நீ

எனக்காக துடிக்கும் நீ

எனக்காக மகிழ வேண்டும்

மனம் மகிழும் இசையில்

நா மகிழும் ருசியில்

நீ திளைக்க வேண்டும்

என்னுள் உணவை சேர்க்கும்

இந்த அன்புக் கொடியை

பிரித்தெடுக்கும் நாளுக்காக

நீ காத்திருக்கிறாய்

உன்னுள் பொங்குகின்ற

தாய்மையை காண

நான் காத்திருக்கின்றேன்.

மறதியான வலிகளுடன்

உனக்குள் உறங்கிக் கொண்டிருக்கின்றேன்

நினைவுகளற்ற மனதுடன் உன்னுள்

விழிக்கப் போகிறேன்

எனக்கான முத்தங்களையும்

தழுவல்களையும் நீ கொடுக்கப்

போகிறாய் என் வலி தீர...

உனக்கான வலி தீர

நான் சொல்லப் போகிறேன்

அம்மா! அம்மா! அம்மா!

என...




வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

9 comments:

  1. உன் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழியே

    ReplyDelete
  2. Hi...

    Vry Nce...But, I Miss U My Mother....

    ReplyDelete
  3. @S.Maya
    பாராட்டிற்கு மிக்க நன்றி. அம்மாவின் உருவம் வேண்டுமானால் நம்மை விட்டுப் போகலாம், நினைவுகள் என்றும் போகாது.

    ReplyDelete
  4. please ithai eppati copy seithu moblie sms ha anuppuvathu plssssssssssss

    ReplyDelete
    Replies
    1. வீக்கி அவர்களே இதை அப்படியே ஒரு வோர்ட் பைலில் காப்பி செய்து உங்களின் மொபைலில் ஏற்றிக் கொள்ளுங்கள். இல்லையேல் இந்த லிங்கை எல்லோருக்கும் பகிருங்கள். முகநூல் மூலம் கூட பகிரலாம்.

      Delete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts