11.28.2011

தமிழன் அடி வாங்குகிறானா, முதலில் யார் தமிழன் ?


     தமிழா எழுந்திரு...! தமிழன் அடி வாங்குகிறான்...! என்று நிறைய முழக்கங்களை நீங்கள் கடந்த சில வருடங்களாக தமிழகமெங்கும் பார்க்கலாம். அது என்ன எல்லா விளம்பரங்களும் தமிழன் அடி வாங்குகிறான், தமிழர்களே எவ்வளவு நாள் தான் ஏமாறுவீர்கள் என்று கோஷமிட்டபடியே இருக்கின்றன.
     முதலில் தமிழன் எங்கு இருக்கிறான். அதைச் சொல்லுங்கள். தமிழ் பேசினால் தமிழனா ? தமிழ் மண்ணில் வாழ்ந்தால் தமிழனா ? யார் தமிழன் ?

     “ யாதும் ஊரே யாவரும் கேளீர்” “ என்று முழக்கமிட்டவன் தமிழனா?  இல்லை தமிழ்நாட்டிற்க்குள்ளேயே மனிதர்களை பிரித்துப் பார்க்கும் உணர்வைத் தூண்டுகிறவன் தமிழனா?  போலியாகத் திரைப்படங்களில் வசனங்களில் மட்டும் தமிழ் பேசிவிட்டு தமிழர்கள் என்று மார்த்தட்டிக் கொள்வதில்லை தமிழ் உணர்வு.
எல்லா மனிதர்களையும் தன் இனமாக பாவித்து உதவியவன் தான் தமிழன். அதை விடுத்து மனிதர்களை எல்லாம் இனம்,மொழி,மதம் வாரியாக பிரிக்கும் இன்றைய கொள்கைகளில் தமிழன் எங்கு இருக்கிறான்.
     அடி வாங்குபவன் என்றுமே தமிழன் இல்லை. அடிக் கொடுப்பவன் தான் தமிழன். தமிழன் மட்டுமில்லை மனிதனும் கூட...

     தமிழன் வேறு மனித கலாசாரம் வேறில்லை.இரண்டுமே ஒன்று தான்.
     மனித சிக்கல்களையும், உணர்வுகளையும் பக்குவப்படுத்தும் சிறந்த கலையை படைத்தவனே தமிழன். தமிழன் அடிக்க வேண்டுமெனில் முதலில் அடிக்க வேண்டியது விவசாயப் பூமியான தமிழகத்தில் நிலத்தை கூறுப் போட்டு விற்று கான்கீரிட் கட்டிடங்களாக்கும் கொள்ளையர்களைத் தான். ஏரிக் குளங்களையெல்லாம் வளைத்து வீடுகளாக்கிய சமூக விரோதிகளைத் தான். ஆனால் நாம் அடிக்கவில்லையே ... ஏன் நமக்கும் வீடு வேண்டும். எங்கிருந்தோ வந்து நமக்கு கடன் தருகிறேன் என்றவுடன், நம் கன்னிப் பூமியை விபச்சாரியாக்கி விட்டோம். நதிகளையும், நீர் வளங்களையும் உறிஞ்சி மலடாக்கிவிட்டோம். மனிதனாகவே வாழ இயலாத இந்த நிலத்தில் தமிழன் என்று பெருமை சொல்லிக் கொள்வது அவமானம்.

     அடுத்தவனிடம் தண்ணீர் கேட்கும் முன், நம் நீர் வளங்களை கொள்ளையடிக்கும் துரோகிகளாக நாமே இருக்கிறோம் என்பதை எப்பொழுது நாம் உணரப் போகிறோம்.
     முதலில் தண்ணீரை நாம் நேசிக்கிறோமா...?  அப்படியிருந்தால் கூவம் ஏன் இன்னும் சுத்தமாகவில்லை.
     இங்கு மனிதனே இல்லாதப் பொழுது தமிழன் என்று சொல்வது வீண். சொல்பவன் ஒவ்வொருவனும் சுயநலவாதி தான். இதே தமிழகத்தில் தான் விவசாய நிலங்களைப் பற்றியும் அதை கொள்ளை அடிக்கும் துரோகிகள் பற்றியும்,தமிழனின் நிலைப்பற்றியும் வந்த ஆண்மைத் தனமான படம்    அந்தளவு வரவேற்புப் பெறவில்லை. ஆனால் அறிவு ஜீவித்தனமாக தமிழ், தமிழன் என்று சில இடங்களில் உணர்வைத் தொட்டுக் கொண்ட படங்கள் எல்லாம் விளம்பரங்களினால் வரவேற்ப்பைப் பெறுகிறது. விளம்பர எலிகளாக வாழும் மக்கள் மனிதர்களாகவே வாழ வில்லை, தமிழனாக எப்படி வாழ முடியும்.
     முதலில் மனிதனாக வாழப் பழகுவோம். தமிழன் என்று நாம் சொல்லிக் கொள்வதை விட நம்மை மற்றவர் சொல்வார்கள் அன்று தமிழன் என்று...

வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

17 comments:

  1. mandaiyil uraiththl sari nalla padhivu vaazhththukkal nandri surendran
    surendranath1973@gmail.com

    ReplyDelete
  2. @விழித்துக்கொள்
    உரைப்பது அவ்வளவு சுலபமல்ல...
    எந்திரத்தனமான வாழ்க்கையில் இருந்து விடுபடும் வழியை தமிழன் கண்டுபிடித்தானென்றால், மீண்டும் ஒரு புதிய பரிமாணத்திற்கு மனித இனத்தை கொண்டு சென்ற பெருமை தமிழனுக்கு சேரும். எந்திரத்தை யார் வேண்டுமானாலும் கண்டுப்பிடிக்கலாம்
    மனிதனைத் கண்டுபிடிப்பது தான் மிக கடினம். மற்ற உலக நாடுகளுக்கு முன் நாம் அதை செய்ய வேண்டும்.மனிதர்களை ஒன்றுச் சேர்த்தால் தமிழ் தானாக அங்கு வந்துவிடும். மனிதன் இருக்கும் இடத்தில் தமிழ் வாழ முடியும், தமிழனும் வாழ முடியும்.

    ReplyDelete
  3. @பெயரில்லா
    உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழரே

    ReplyDelete
  4. @PUTHIYATHENRAL
    நிச்சயம் பார்க்கிறேன். உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  5. வாசகர்களின் கனிவான பார்வைக்கு !

    இஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக் கூட்டணியும், உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும், பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும்,

    இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு, எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன.

    "அமைதிக்காலங்களில் தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள் சத்தமின்றித் தூவப்படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்"

    சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

    1. ***** திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக்கும் மிருகங்கள். அவசியம் படியுங்கள். *****

    2. **** தினமலம்(ர்?) திருகுதாள திருவிளையாடல் தோலுரிக்கப்படுகிறது! தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக ஊளையிடும் தினமலர். ”ஆர்.எஸ்.எஸ். “ ன் ஊதுகுழலாக பார்ப்பன வன்மத்துடன் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக பகிரங்கமாக செயல்படும் ஆரிய வந்தேறி தினமல கூட்டம். தினமலரின் இஸ்லாமிய வெறுப்பு தோலுரிக்கப்படுகிறது விடியோ காணவும்
    *****

    .

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. @VANJOOR
    உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  8. @சேக்காளி
    உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றீ

    ReplyDelete
  9. ஹி..ஹி..ஹி இங்கிலீஷ் பேசறவன் எல்லாம் இங்கிலீஷ்காரன்.பிரெஞ்சு பேசறவன் எல்லாம் பிரெஞ்சுகாரன்.

    ஏய் எல்லாரும் வந்து ஸ்டேஷன்ல கையெழுத்துப் போட்டுட்டு போங்க.

    நீ யாருடா கோமாளி?
    நானும் ரவுடி தான்.
    நீ ரவுடின்றதுக்கு என்ன ஆதாரம் இருக்கு?
    ஈக்குவலா பேசறேன் இல்லே?
    எங்கம்மா சத்தியமா நானும் ரவுடி தாங்க.
    உன்னை இந்த ஏரியாவிலே பார்த்ததில்லையே?
    நான் இந்த ஏரியாவிலே ரவுடின்னு பார்ம் ஆயிட்டேன்ல. சரி ஏறித் தொல.

    நான் ஜெயிலுக்கு போறேன்.நான் ஜெயிலுக்கு போறேன்.
    நல்லா பாத்துகுங்க நான் ஜெயிலுக்கு போறேன்.”//”நல்ல வடிவேலு காமெடி”.

    வீட்டிலும், வெளியிலும், கனவிலும் நனவிலும், எம்மொழியை பேசுகிறார்களோ அம்மொழியைச் சேர்த்தவர்களே அவர்கள்- என்று சொல்லித் தெரிய வேண்டுமோ???

    தமிழா, இனவுணர்வு கொள்! தமிழா, தமிழனாக இரு!!

    ஹி..ஹி..ஹி இங்கிலீஷ் பேசறவன் எல்லாம் இங்கிலீஷ்காரன்.பிரெஞ்சு பேசறவன் எல்லாம் பிரெஞ்சுகாரன்.

    ReplyDelete
  10. வாழ்க- யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று வாழ்ந்து கெட்ட தமிழகம்”

    “1979 எம்.ஜி.ஆர் – அச்சுதமேனன் ஒப்பந்தத்துக்கு முன்பு வரை 48 அடி நீர் தமிழகம் வசம் இருந்தது. அது மூன்றில் ஒரு பங்காக்கப்பட்டது. அணைப் பாதுகாப்பு, நம் காவல் துறையிடமிருந்து கேரள காவல் துறைக்குப் பிடுங்கித் தரப்பட்டது. அணையில் படகு விடும் உரிமை பறி போனது. மீன் பிடிக்கும் உரிமையும் போயிற்று. அணை வரையிலான சாலையும் பிடுங்கப்பட்டது. அணை தமிழகத்துக்குச் சொந்தமென்றாலும் அணைக்குச் செல்ல, பொறியாளர்கள் உட்பட எல்லாரும் கேரள அரசின் அனுமதி பெற வேண்டும். இவையெதுவும் 1979க்கு முன்னர் இல்லாதவை. கடைசியாக இப்போது அணையையே பறிக்க விரும்புகிறது. அணையின் பாதுகாப்பு மட்டும்தான் அசல் கவலையென்றால் புது அணையை தமிழகமே கட்டட்டுமென்றல்லவா சொல்ல வேண்டும்? தான் கட்டித் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புவதாக ஏன் சொல்ல
    வேண்டும்?”

    இது தான் நம் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். மலையாளிகளுக்கு பெற்றுத் தந்த மண்ணின் பாச உணர்வு; அதன் பரிசாக மலையாள சகோதரர்கள் நமக்கு காட்டும் விசுவாசம்./. நம்பிக்கைத் துரோகம்..????

    தமிழா மண்ணின் மீதும் உனது மக்கள் மீதும் ஞாய உணர்வு கொள்!

    ReplyDelete
  11. கடலூர் சித்தன்.ஆர்Sun Apr 15, 06:00:00 PM 2012

    ஆங்கிலம் தாய்மொழியாக கொண்டவர்களை விட,வேறு மொழியை தாய்மொழியாக கொண்ட- ஆங்கிலம் பேசுவோர்களின் எண்ணிக்கை உலகில் மிக அதிகமாகி உள்ளது; ஆங்கிலேயரின் வாழ்க்கைதரம் குறையவில்லை. தமிழகத்தில்,அதே நிலை தமிழ் மொழிக்கும் உருவாகியுள்ளது. ஆனால் தமிழரின் வாழ்க்கைத் தரம் பரிதாபமாக உள்ளது; பிற மொழிகளை தாய்மொழியாக கொண்ட, தமிழகத்தில் வாழும் மக்களின் வளர்ச்சி பிரம்மாண்டமாக உள்ளது. இந்நிலை இந்திய ஒருமைப்பாட்டுக்கு/நமக்கு நல்லதல்ல. ஆகவே திறமையான தமிழ் வழிகாட்டிகள் தமிழகத்திற்கு உடனடியாகத் தேவை.”

    தமிழர்கள் நம்முடன் வாழும் அணைத்து மொழி பேசுபவர்களையும் நல்லபடியாக தான் பார்க்கிறோம். இல்லாவிடில் 234 எம்.எல்.ஏ. மற்றும் மந்திரிகளில் 20% அண்டைமாநில மொழியை பேசுபவர்கள் சென்ற முறை பதவி வகித்திருக்க முடியுமா? அண்டைமாநிலங்களி ல் நம்மால் இப்படி நினைத்து பார்க்க முடியுமா? “யாதும் ஊரே யாவரும் கேளீர்”- என்று வாழ்ந்த தமிழர்கள் தமிழகத்தில் மைனாரிட்டி தகுதியில் வரும் நாள் துலைவில் இல்லை.

    தமிழன் நெல்லுக்காக இரைத்த நீர் எத்தனை சதவிகிதம் தமிழனை சேர்க்கிறது என்று கேட்ட ஒரே தலைவன் மருத்துவர் ராமதாஸ் மட்டுமே?? என்ன செய்வது – ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று புரிய மறுக்கிறார்களே??? கணக்கெடுக்க தயாரா திராவிடம் பேசுவோர்??? சிந்திக்க வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம். வாழ்க வாடிய பயிரைக் கண்டு மனம் வாடிய, வள்ளலார் பிறந்த தமிழ் நாடு.

    காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு “- நம் வீட்டுக்குழந்தையை விட பக்கத்துக்கு குழந்தை அழகாக இருந்தால், பக்கத்து வீட்டு குழந்தையையா கொஞ்சுகிறோம்?

    ReplyDelete
  12. தமிழன்!!!

    திருக்குறள், பொங்கல் விழா,தமிழர் பெருமை, தமிழ் உணர்வு, தமிழில் குழந்தைகளுக்கு பெயரிடுதல், சாதனை புரிந்த பச்சை தமிழர் – இவைகளைப்பற்றி பேசினால் ஆர்வம் காண்பிக்காதது மட்டுமல்லாமல் கிண்டலடிக்கும் மக்களும்/ வீட்டில் தமிழ் பேசாத அணைத்து தமிழ் மக்களும்- தமிழர்கள் அல்லர்…

    தமிழ் நண்பர்களே!!!கொஞ்சம் சிந்திப்போமா- நாய்ப் புத்தி என்றால் என்ன என்று ??? தெருவில் வரும் பன்றி, எருமை,கழுதை …பல விலங்குகளை தெருவில் போக அனுமதிக்குமாம்.ஆனால் தன் இனமான வேறொரு நாய் வந்தால், தெரு எல்லை வரை துரத்தி அடித்த பின்னர் தான், நிம்மதி பெறுமாம்.

    நாலாயிரம் குறைந்த சம்பளம் பெற்ற செவிலியர்கள், பன்னிரண்டாயிரம் பெற்றதின் இரகசியம் என்ன???முதலில் ஒருவன் தைரியமாக சிந்தித்தல்- பின்னர் ஒற்றுமையுடன் போராடல்.

    ஆகையால் சாதி, மத, இன பேதமில்லா அணைத்து தமிழ் மக்களும்- நாம் தமிழர் என்று ஒன்றுபடுதல் -காலத்தின் அவசியம்.


    வீட்டிலும், வெளியிலும், கனவிலும் நனவிலும், எம்மொழியை பேசுகிறார்களோ அம்மொழியைச் சேர்த்தவர்களே அவர்கள்- என்று சொல்லித் தெரிய வேண்டுமோ???

    ஏன் நம்மை பத்து பதினைந்து சதவிகிதம் கூட இல்லாத மக்கள் தொடர்ந்து ஆள முடிந்தது / எதிர்கட்சியாக உட்கார முடிகிறது???

    தமிழா, இனவுணர்வு கொள்! தமிழா, தமிழனாக இரு!!

    ஹி..ஹி..ஹி ..நம்ம தான் காது குத்து/மஞ்சள் நீர்/ வளைய காப்பு/ பத்திரிகையில் நம்ம பெயர் இடம் மாறியிருந்தாலோ / அல்லது விடுபட்டிருந்தாலோ – திராவிட பகுத்தறிவை பயன் படுத்தி உபயோகமுள்ள உறவுகளை எதிரிகளாக்கும் கலையை வளர்த்து வருகிறோமே???

    ReplyDelete
  13. "பல்லு இல்லாத கிழவர்களுக்கு முறுக்கு சாப்பிடுகிறவர்களை கண்டால் பொறுக்காது தானே ???

    //அம்மா, அப்பா என்று சொன்னால் என்ன?மம்மி, டாடின்னு , சொன்னால் என்ன?- எஸ்.வீ.சேகர்- மாஜி எம்.எல்.ஏ -புதிய தலைமுறை தொலைக்கட்சிக்கு அளித்த பேட்டியில்.//

    //Why Tamil is a Classical Language:
    University of California, Berkeley, holds a ‘Tamil’ Conference annually. Its Chair in Tamil Studies, Prof. George L. Hart, writes, “To qualify as a classical tradition, a language must fit several criteria: it should be ancient, it should be an independent tradition that arose mostly on its own and not as an offshoot of another tradition, and it must have a large and extremely rich body of ancient literature. Unlike the other modern languages of India, Tamil meets each of these requirements. It is extremely old (as old as Latin and older than Arabic); it arose as an entirely independent tradition, with almost no influence from Sanskrit or other languages; and its ancient literature is indescribably vast and rich.”//

    ராஜா காது தெரியாமல் அணிந்துள்ள தொப்பி, ரொம்ப அழகாயிருக்கு இல்லே??? (ஹி..ஹி.ஹி தமிழாவது கத்திரிக்காயாவது. கழுதை காது மேல, மக்களுக்கு தொப்பியுடன் கலந்த மோகத்தை வர வச்சிட்டோம் பார்த்தேளா???)

    ஹிஹும்..ஹிஹும்..ஹிஹும் .. பல்லு இல்லாத கிழவர்களுக்கு முறுக்கு சாப்பிடுகிறவர்களை கண்டால் பொறுக்காது தானே ???

    ReplyDelete
  14. கடலூர் சித்தன்.ஆர்Sat Sep 21, 10:40:00 PM 2013

    //‘வயித்தில வந்த கட்டி கேன்சரா இல்லையா என்று பரிசோதனை செய்து கொள்ளும்போது எப்படிபட்ட நாத்திகனும், அது கேன்சர் கட்டியா இருக்கக் கூடாது என்று கடவுளை கும்பிடுவான். அப்படிப் பட்டவர்கள் இல்லை என்றால் என்னிடம் அழைத்து வாருங்கள் நான் அவர்கள் காலில் விழுகிறேன்’ என்று நடிகர் சிவகுமார் சவாலாக சொல்லியிருக்கிறாரே?
    -ச. ராமச்சந்திரன், உடுமலை.//

    “முன் மாதிரி மனிதர் எனப்படும் ஒரு தமிழர் -
    அவருக்கு மனதில் பட்ட யதார்த்தத்தைச் சொன்னால், திருக்கோவில்களில் அர்ச்சகப் பணி செய்ய இயலாத / திராணியற்ற /விரும்பாத/சம்பந்தமில்லாத – திராவிடத் தமிழர்களுக்கும்/ பச்சைத் தமிழர்களுக்கும்/ பகுத்தறிவுத் தமிழர்களுக்கும் கோபம் வரத் தானே செய்யும்.” ஹி ஹி ஹி தெருக் கோவில்களில் நாங்க தானே எல்லாம்!!!
    http://mathimaran.wordpress.com/2012/12/18/593/

    ReplyDelete
  15. ’’உலகம் சமநிலை பெற வேண்டும்”

    //"கடவுள் செய்த பாவம்;இங்கு காணும் துன்பம் யாவும்;
    என்ன மனமோ என்ன குணமோ - இந்த; மனிதன் கொண்ட கோலம்;மனிதன் கொண்ட கோலம்" - நாடற்ற தமிழன்.//

    //"கொடுத்ததெல்லாம் கொடுத்தான்;அவன் யாருக்காகக் கொடுத்தான்;ஒருத்தருக்கா கொடுத்தான்; இல்லை ஊருக்காகக் கொடுத்தான்" - ஈழத் தமிழன்.//

    //சிரித்து வாழ வேண்டும்; பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே'; - வாடிய பயிரை கண்ட போதெல்லாம் மனம் வாடிய வள்ளலார் தமிழன்.//

    //’’உலகம் சமநிலை பெற வேண்டும்; உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும். இமயமும் குமரியும் இணைந்திடவே எங்கும் இன்பம் விளைந்திடவே சமயம் யாவும் தழைத்திடவே”- இந்தியத் தமிழன்.//

    //"நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்; நல்லவர் கெட்டவர் யாரென்றும்; பழகும் போதும் தெரிவதில்லை;பாழாய்ப் போன இந்த பூமியிலே." - பாமரத் தமிழன்.//

    //ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்; சாராய கங்கை காயாதடா.... சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா; சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா " - டாஸ்மாக் தமிழன்//


    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts