என்னுடைய வலைத்தளத்தில் நான் வேறு தளத்தில் இருந்துப் பகிர்ந்துக் கொள்ளும் பதிவுகளில் இதுவும் ஒன்று. சிலப் பதிவுகள் மக்களை, குறிப்பாக தமிழக மக்களை சென்றடைய வேண்டும் என்பதால் இந்த பதிவுகளை நான் பகிர்ந்துக் கொள்கிறேன். இது உலக மக்கள் தமிழர்களைப் பற்றித் தெரிந்துக் கொள்ளும் முயற்சி அல்ல. நாம் நம் முன்னோர்கள் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற முயற்யினாலே இப்பகிர்வு.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள்.
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.
நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.
ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .
உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை.. கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி , பகிர்ந்துக் கொள்ளுங்கள் !!!
நட்புடன்
தமிழ்ராஜா
காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.
ReplyDeleteஇத்தகவலை எங்கிருந்து எடுத்தீர்கள்? சரியாக வராதது போல் இருக்கு.
இந்த தகவல் ஃபேஸ் புக் தளத்தில் பகிரப்பட்டது நண்பரே
Deleteதகவலுக்கு நன்றி... tm2
ReplyDeleteபகிரப் பட்ட தகவலை அனைவருக்கும் சென்றடைய செய்யும் முயற்சியே...
Deleteஅருமையான தகவல்களுக்கு நன்றிகள் பல நண்பரே..
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி நண்பரே...
Deleteஉங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...
Deleteவியப்பான இதுவரை அறிந்திராத தகவல். நன்றி.
ReplyDeleteஆம் ஐயா நானும் இதைப் பார்த்து வியந்தேன். என்ன நம் முன்னோர்களின் தொழில்நுட்பம்
Deleteரொம்ப ஆச்சர்யமான ஒரு விஷயம்!! தமிழர்கள் அனைத்து கலைகளிலும் சிறந்தவர்கள் என்பதற்கு ஒரு சான்று!!! பகிர்விற்கு நன்றி ராஜா!
ReplyDeleteஆச்சர்யம் தான் சமிரா. இன்னும் நம் தமிழர்களின் வாழ்வில் நிறைய ஆச்சர்யங்கள் நிறைந்துள்ளது.
Deleteமிகவும் சுவாரஸ்யமான நல்ல பல தகவல்கள்
ReplyDeleteமிக்க நன்றி.
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி தமிழ் நீயூஸ் பேப்பர்
Deleteநண்பரே என் இதயம் கலந்த தீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி அம்மா
Delete