10.05.2007

மிருகம் சிரித்திருந்தால்

ஏதோ உலகத்தில் பிறந்து விட்டோம்
அதனாலே உறவை வளர்த்துவிட்டோம்
பாதம் மண்ணில் படியும் வரை
பறவைகள் போலே வாழக்கற்றோம்
தேடுதல் நிறைந்த வாழ்வினிலே
பாம்புகள் போலே ஊர்ந்திருக்கோம்
மாணிக்கம் கண்ணில் படும் வரையில்
பலரை நாமும் சீறவிட்டோம்
பட்டினி ஒன்றை நாம் மறந்தால்
வாழ்வில் வேதனை எதுவுமில்லை
படுக்கும் நாளை நினைத்தபடியே
பசியை நாமும் திர்த்திருக்கோம்
சின்னக் காகிதம் பெரிதாய் தெரிவதனால்
செல்வம் எதுவென மறந்துவிட்டோம்
புள்ளிக் கோலங்கள் போல் தான்
நம்வாழ்வும் நாளையும் வேறொன்று தோன்றிவிடும்
சிரிப்பதை ஒன்றே கற்றுவிட்டோம்
மிருக்கத்தில் இருந்து வேறுப்பட்டோம்
மிருகம் முன்னமே சிரித்திருந்தால்
இன்று இயற்க்கையை அழத்தான் விட்டிடுமா ?

2 comments:

  1. nice poem raja,these r true words.... only the smile make diff from human and animal true words.... ALL THE BEST keep writting such a good poems

    ReplyDelete
  2. Thank you for your comments Raseegai

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts