6.10.2012

என் பார்வைக்கருகில்

                                        உன்னை நான் பார்த்து விடக்கூடாதென்று
எத்தனை முயற்சி எடுக்கிறாய்
நான் வீட்டிற்குள் வரும் நேரம்
தான் உனக்கு மாவு அரைப்பது
ஞாபகத்திற்கு வரும்
நான் வெளியில் போகும் பொழுது
உனக்கு ஊற வைத்த துணி
ஞாபகத்திற்கு வரும்
நான் பேசும் பொழுது உன்
காதுகளுக்கு மட்டும் அடுப்பங்கறையில்
இருந்து ஒலி கேட்கும்
நான் விடுமுறை என்றால்
அப்பொழுது தான் உனக்கு
தலைவலி ஞாபகத்திற்கு வரும்.
இப்படி நமக்கான தனிமையெல்லாம்
சென்றுக் கொண்டே இருக்கிறது.
உள்ளுக்குள் உன் அருகாமையை
எண்ணி புலம்பும் ஒரு உயிர் இருப்பதை
ஏன் உன்னால் உணர முடியவில்லை.
என் பார்வைக்கருகில், அருகாமையில்
பேசிக் கொண்டிருக்க உனக்கு விருப்பமில்லையா?
என்று ஒரே ஒரு முறை தான் கேட்டேன்
அதுவும் மனம் தாங்காமல்
அந்நொடி நீ சிந்திய கண்ணீர் சொன்னது
உன்னுடைய அத்தனை அன்பையும்…



வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

6 comments:

  1. migavum nandraga ullathu....

    Raaga

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ராகா.

      Delete
  2. ''..பேசிக் கொண்டிருக்க உனக்கு விருப்பமில்லையா?
    என்று ஒரே ஒரு முறை தான் கேட்டேன்
    அதுவும் மனம் தாங்காமல்
    அந்நொடி நீ சிந்திய கண்ணீர் சொன்னது
    உன்னுடைய அத்தனை அன்பையும்..''
    இது ஊர்ப் பழக்கம்...பாதிப்பேர் இப்படியும் உள்ளனர். நல்ல கரு. நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. இது ஊர் பழக்கமா...பாதிப் பேன் இப்படியும் உள்ளனர்...

      பேச்சு தராத மகிழ்ச்சியும்,ஆனந்தமும் சிந்தும் சிறுப் புன்னகையிலும், சிறுதுளிக் கண்ணீரிலும் வந்து விடுகிறது. இது உலகப் பழக்கமாக இருந்து ஊரளவு சுருங்கிவிட்டது.
      உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி கோவைகவிஞரே...

      Delete
  3. உள்ளுக்குள் உன் அருகாமையை
    எண்ணி புலம்பும் ஒரு உயிர் இருப்பதை
    ஏன் உன்னால் உணர முடியவில்லை.// நியாமான கேள்வி தான் பதிலும் நீங்களே சொல்லி முடித்த விதம் அருமை .

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் பதிலும் நான் தானே சொல்ல வேண்டும். அதற்கும் நான் தான் வாய் திறக்க வேண்டியுள்ளது

      Delete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts