12.17.2007

உண்மையடி நீ எனக்கு


ஒன்றிரண்டு வாசகங்கள்
உன்னைப் பற்றி நானெழுத
வெள்ளைத் தாளில் ஓடு மடி
கவிதை என்ற பேரருவி
சிந்தி விழும் துளி சிரிப்பும்
உன்னுடனே உறவு சொல்லும்
பொத்தி வைத்த ஆசையெல்லாம்
நீ நடக்கக் கூட வரும்
கற்பனைக்கு கரு அமைய
உன்னை பற்றியே நினைத்திருக்கும்
கண் விழிக்கும் நேரமெல்லாம்
உன் முகமே சுற்றி நிற்கும்
எதை பற்றி நானெழுத
உன்னிடம் பொய்யுரைக்க ஆசையில்லை
உண்மையடி நீ எனக்கு காதலியே!


அழைத்து செல்வாயா ?
வேகமேடுக்கும் உன்
விழிகளின் பார்வையில்
என் நினைவுகளையும்
சேர்த்து அழைத்து செல்வாயா?
உன் உள்ளத்தில் பயனியாக
வர அனுமதி கேட்கிறேன்
பாலைவனத்தில் தனியாக சிக்கி
தவிக்கும் நான்
வழியுமின்றி விழியுமின்றி
கிடக்கிறேன்
அழைத்து செல்வாயா ?
உன் நீண்டநேசப் பயணத்தில்.......................



என்னுயிர் நின்று விடும்

உன் உள்ளத்துப் பயணியாக
வந்த என்னிடமே செல்ல
வழி கேட்கிறாயே பெண்ணே!
எங்கேயாவது செல்................
பயணத்தை நிறுத்தி மட்டும்
விடாதேஎன்னுயிர் நின்று விடும்.........



அதிசயம் தானே நான்..

சாவையருகில் பார்த்ததாக பலர்
சொல்லியிருக்கிறார்கள்
நானோ சாவையே பார்த்து
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
நீ உள்ளே வந்தாயே அந்நொடியே
என்னுயிர் பிரிந்து விட்டது
இருந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
பெண்ணே ! அதிசயம் தானே நான்.....................

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts