9.25.2012

இயற்கையின் மெல்லிய அசைவுகளில்




கண்களை மூட கடினப்பட்டு
சோர்ந்திருந்த வேளையில்
உதடுகள் திறப்பதே
அரிதாகிவிட்ட நொடிகளில்
செவிகள் மட்டும் எதையோ
கேட்கத் துடிக்கும்
வார்த்தைகள் செய்யும் யுத்தம்
நெஞ்சில் வலியாகத் தோன்றும்
சில சொற்களின் கூர்மை
மனதை காயப்படுத்தி  
விட்டுச்செல்லும்
விட்டு விட்டுத் துடிக்கும் இதயம்
கூட விட்டு விடவா…?
என்று கேட்பதைப்
போல தோன்றும்
சுவாசத்தை இழக்கத்
துணிந்திடும் மனமோ
வாசத்தை ரசிக்க மறுக்கும்
புரியாத மெளனங்கள்
நெஞ்சத்தை இறுக்கும்
உணராத வலிகளும்
வேதனை செய்யும்
என்னென்னவோ 
ஏதேதோ நினைவுகளின்
சுமைகளால் அழுந்திய
உள்ளம் உளறலாமல்
உள்ளுக்குள் குமுறும்
சுதந்திரமாய் சுற்றித் திரிந்த 
எண்ணப் பறவை
வண்ணமிழந்து சிறகொடிந்து
மன வாசல் முன் கிடக்கும்
பரவசக் காற்று உதிர ஓட்டத்தினுள்
எங்கோ தொலையும்
சட்டென நொடிகளில் மறையும்
அத்தனை அழுத்தங்களும்
இயற்கையின் மெல்லிய அசைவுகளில்


 


வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

4 comments:

  1. மனது தவிக்கும் போது ஏற்படும் நிலைமை வரிகளில்... கண் முன்னே தெரிகிறது...

    ReplyDelete
    Replies
    1. மனம் தவித்த வேளைகளில் எழுதிய வரிகள் தான் நண்பரே

      Delete
  2. சொல்ல முடியாத உணர்வுகள் என்று சொல்வோமே அதுதான நண்பா .............என்னமா ? சொல்லியிருகீங்க ..........உணர முடிந்தது வரிகளில் விக்கி ,தொக்கி நிற்கும் உணர்வுகளை ஆனாலும் காற்று வந்து கலைத்து போகும் தருணம் அற்புதமானதுதான்

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்குமே எந்த நொடியிலாவது ஏற்படும் உணர்வு. உணர்ந்து பின்னூட்டமிட்டதிற்கு மிக்க நன்றி

      Delete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts