ஏதோ உலகத்தில் பிறந்து விட்டோம்
அதனாலே உறவை வளர்த்துவிட்டோம்
பாதம் மண்ணில் படியும் வரை
பறவைகள் போலே வாழக்கற்றோம்
தேடுதல் நிறைந்த வாழ்வினிலே
பாம்புகள் போலே ஊர்ந்திருக்கோம்
மாணிக்கம் கண்ணில் படும் வரையில்
பலரை நாமும் சீறவிட்டோம்
பட்டினி ஒன்றை நாம் மறந்தால்
வாழ்வில் வேதனை எதுவுமில்லை
படுக்கும் நாளை நினைத்தபடியே
பசியை நாமும் திர்த்திருக்கோம்
சின்னக் காகிதம் பெரிதாய் தெரிவதனால்
செல்வம் எதுவென மறந்துவிட்டோம்
புள்ளிக் கோலங்கள் போல் தான்
நம்வாழ்வும் நாளையும் வேறொன்று தோன்றிவிடும்
சிரிப்பதை ஒன்றே கற்றுவிட்டோம்
மிருக்கத்தில் இருந்து வேறுப்பட்டோம்
மிருகம் முன்னமே சிரித்திருந்தால்
இன்று இயற்க்கையை அழத்தான் விட்டிடுமா ?
10.05.2007
மழலை
உன்னை முதன்முதலாய் தொட்டுத்
தூக்கையில் என்னுயிர்
மறுமுறை ஜணிக்கின்ற
வலியை உணர்ந்தேன் கண்ணே !
உன்னை நெஞ்சோடு அணைக்கையில்
தான் வலியே சுகமாய்
நிலைப்பதை உணர்ந்தேன் கண்ணே!
அடிக்கடி நீ சிரிக்கும் பொழுது தான்
உள்ளம் அழகழகாய் மாறுதே!
நொடிக்கொருமுறை நீ அழுகையில் தான்
உயிரும் அதிர்வது போல் உள்ளதே!
படபடவென்று உன் கைகள் அசையத்தான்
கண்களில் உற்சாகம் பொங்குதே!
சரசரவென்று உன் உடல் நகர்ந்திடத்தான்
பூமியின் போக்கே மாறுதே!
மடிமீது நீ தவழ்ந்திடத்தான்
மனதுக்குள் மத்தாப்பு பூக்குதே!
எப்பொழுது உன் மழலை மொழி
கேட்பேன் என்னுயிர் துடிக்குதே!
என் ஒரு விரலும் நீ கடித்திடத்தான்
நரம்பினுள் அமிர்தம் பாயுதே!
சிலுசிலுவேன்று நீ நனைத்திடத்தான்
என்னாடையும் பல முறை ஏங்குதே!
சிணுங்காமல் உன்னைக் கொஞ்சிடத்தான்
என் ஒவ்வொரு அசைவும் முயலுதே!
10.02.2007
உணர்ச்சிகளுக்காக
நரை விழுந்த மனதில்
குறையொன்று கண்டேன்
குறை கண்ட மனதிலோ!
சிறையொன்றைக் கண்டேன்
சிறையான மனமோ!
தேய்வானது பிறையாய்
தூக்கத்தின் மத்தியில்
பிதற்றங்கள் பலவும்
அதன் தாக்கத்தின்விளைவாய்
சோர்வுகள் படரும்
பாழாகும் உயிரோ
மறந்ததையே நினைக்கும்
நோயாகும் உடலோ
துறந்தையே கேட்கும்
போகின்ற வரையிலும்
பூக்காத தெளிவு
சேர்கின்ற பொழுது தான்
தெளிவாக்கும் பூக்கள்
தேகத்தின் மடியில்
நினை கின்ற பொழுது
உயிர் தாகத்தின் தேடலை
யாரறிவாரோ!
குறையொன்று கண்டேன்
குறை கண்ட மனதிலோ!
சிறையொன்றைக் கண்டேன்
சிறையான மனமோ!
தேய்வானது பிறையாய்
தூக்கத்தின் மத்தியில்
பிதற்றங்கள் பலவும்
அதன் தாக்கத்தின்விளைவாய்
சோர்வுகள் படரும்
பாழாகும் உயிரோ
மறந்ததையே நினைக்கும்
நோயாகும் உடலோ
துறந்தையே கேட்கும்
போகின்ற வரையிலும்
பூக்காத தெளிவு
சேர்கின்ற பொழுது தான்
தெளிவாக்கும் பூக்கள்
தேகத்தின் மடியில்
நினை கின்ற பொழுது
உயிர் தாகத்தின் தேடலை
யாரறிவாரோ!
9.28.2007
எண்ணிலா ஆசைகள்
காற்றில்வந்து காதில்
வீழ்ந்த முதல்சொல்லைப் பல்
முளைக்கும் சொல்லஆசைப்பட்டு
எண்ணிலா எண்ணம் வளர்த்தேன்
அந்த எண்ணத்தில் தான்
அம்மா! என்றுரைத்தேன்
பக்கத்தில் இருப்பவர்களை எல்லாம்
நண்பனாக்கி தூக்கத்திலும்
துள்ளி குதித்தேன்
துவண்டு விழுந்தாலும்
தூக்கிவிடும் அன்பை ரசித்தேன்………………
புத்தகத்தைப் பார்த்தத்ப் பொழுது
பல பக்கம் ரசித்தேன்………….
அந்த பக்கத்தில் பார்த்த
புது படத்தை ரசித்தேன்………
அழுது கொண்டு பள்ளிச்செல்லும்
நேரம் சனி ஞாயிற்ைறரசித்தேன்………………
இன்று சிரித்துக்கொண்டே வரவேற்று
பள்ளி நாட்களுக்கு துடித்தேன்
விண்மீன்களை எல்லாம் கைக்குள்
அடக்க வேண்டுமென
கல்லூரிக்குள்காலடி வைக்கும்
பொழுது நினைத்தேன்
காலடி பதிக்கும் முன்னரே
காதலின்அடியை அறிய ஆசைப்பட்டேன்
காதலியை காதலிக்க ஆசை
அவளும் நம்மை மட்டுமே காதலிக்க ஆசை
கல்லூரித்தேர்வே காதலுக்கென்று ஆசை
தேர்வில் காதல் அலீகளின் வெற்றியைப்பார்த்ததும்
காதலை விட்டு ஓட ஆசை
அன்பை விட்டு அழகுக்கு ஆசை
அழகும் அழிந்துவிடுமோ!
என்றெண்ணி புகழுக்கு ஆசை
புகழுக்காக தொடர்ந்த் படிப்பை
தொய்வில்லாமல் முடித்துவிட ஆசை
பார்வையில் பணம் பார்க்க ஆசை
பார்த்த பின்னும் விலக்க முடியாத ஆசை
காமத்திற்கு ஆசை – அதனோடு
கவுரவ த்திற்கு ஆசை
திருமணத்தோடு திருதிவிட்ட ஆசைகளை
எல்லாம்திருப்பிக் கொடுக்க ஆசை
நம் போல் ஒரு பிள்ளை
நமக்குப் பிறக்க ஆசை
நமக்காக துடிக்கும் ஓர்
உள்ளத்தை நண்பனாக்க ஆசை
நகம் நனைக்கும் வயதில்
நட்பை உதைத்த தோசம்
நரை வந்த பின்னும்
நண்பனைத் தேடும்ஒரு நேசம்
நேசத்தோடு பிள்ளைகளுடனே வசிக்க ஆசை
நிறைவேறாவிட்டால் தீரா நித்திரையில்
வீழ்ந்து விட ஆசை.........................
வீழ்ந்த முதல்சொல்லைப் பல்
முளைக்கும் சொல்லஆசைப்பட்டு
எண்ணிலா எண்ணம் வளர்த்தேன்
அந்த எண்ணத்தில் தான்
அம்மா! என்றுரைத்தேன்
பக்கத்தில் இருப்பவர்களை எல்லாம்
நண்பனாக்கி தூக்கத்திலும்
துள்ளி குதித்தேன்
துவண்டு விழுந்தாலும்
தூக்கிவிடும் அன்பை ரசித்தேன்………………
புத்தகத்தைப் பார்த்தத்ப் பொழுது
பல பக்கம் ரசித்தேன்………….
அந்த பக்கத்தில் பார்த்த
புது படத்தை ரசித்தேன்………
அழுது கொண்டு பள்ளிச்செல்லும்
நேரம் சனி ஞாயிற்ைறரசித்தேன்………………
இன்று சிரித்துக்கொண்டே வரவேற்று
பள்ளி நாட்களுக்கு துடித்தேன்
விண்மீன்களை எல்லாம் கைக்குள்
அடக்க வேண்டுமென
கல்லூரிக்குள்காலடி வைக்கும்
பொழுது நினைத்தேன்
காலடி பதிக்கும் முன்னரே
காதலின்அடியை அறிய ஆசைப்பட்டேன்
காதலியை காதலிக்க ஆசை
அவளும் நம்மை மட்டுமே காதலிக்க ஆசை
கல்லூரித்தேர்வே காதலுக்கென்று ஆசை
தேர்வில் காதல் அலீகளின் வெற்றியைப்பார்த்ததும்
காதலை விட்டு ஓட ஆசை
அன்பை விட்டு அழகுக்கு ஆசை
அழகும் அழிந்துவிடுமோ!
என்றெண்ணி புகழுக்கு ஆசை
புகழுக்காக தொடர்ந்த் படிப்பை
தொய்வில்லாமல் முடித்துவிட ஆசை
பார்வையில் பணம் பார்க்க ஆசை
பார்த்த பின்னும் விலக்க முடியாத ஆசை
காமத்திற்கு ஆசை – அதனோடு
கவுரவ த்திற்கு ஆசை
திருமணத்தோடு திருதிவிட்ட ஆசைகளை
எல்லாம்திருப்பிக் கொடுக்க ஆசை
நம் போல் ஒரு பிள்ளை
நமக்குப் பிறக்க ஆசை
நமக்காக துடிக்கும் ஓர்
உள்ளத்தை நண்பனாக்க ஆசை
நகம் நனைக்கும் வயதில்
நட்பை உதைத்த தோசம்
நரை வந்த பின்னும்
நண்பனைத் தேடும்ஒரு நேசம்
நேசத்தோடு பிள்ளைகளுடனே வசிக்க ஆசை
நிறைவேறாவிட்டால் தீரா நித்திரையில்
வீழ்ந்து விட ஆசை.........................
பிறக்க ஆசை
தாய் மடியில் அனுபவித்த முதல்
வலியைஅனுபவிக்க ஆசை
அந்த நினைவற்ற வலிகளுடனே
இருந்திருக்கக்கூடாதாஎன்றாசை
என் மேனி சிந்திய
முதல் ரத்தத்தைபார்க்காசை — அதுவே
நான் சிந்திய கடைசி ரத்தமாகி
இருக்கக்கூடாதா என்றாசை
பள்ளி சென்ற முதல் நாளை
எப்படியாவது வாங்க ஆசை
பக்குவப்படாமல் பள்ளிக்
குள்ளேயே இருந்துவிட ஆசை
பழகும் பொழுது
நல்ல நட்பிற்குஆசை
அந்த நட்பினிலும்
சிறந்த மனிதரைகாண ஆசை
பிரிந்திடினும் எனை
மறவா நண்பனுக்கு ஆசை
அந்த நண்பனிடமும்
எனக்குரிய உரிமைக்கு ஆசை
மறந்திடினும் ஒரு முறையாவது
காதலிக்க ஆசை
அந்த காதலிலும் எனக்குரியவளிடம்
ஊடலுக்குஆசை
ஒரு முறையாவது எனக்குரியவளை
தொட்டு விடஆசை
அந்தத் தொடு உணர்வும்
திருமணத்திற்கு பின்னிருக்கஆசை
பத்து மாதம் எனக்குரியவளின்
பாரம் சுமக்க ஆசை
ஈன்று எடுக்கும் பொழுது என்னவளுடன்
வலி தாங்க ஆசை
என்னால் தோன்றிய உயிரை
உன்னதமாக்க ஆசை
அந்த முயற்சியிலும் என்னவள்
உணர்வு கலக்க ஆசை
இருக்கும் வரைக்கும்
இன்பத்திற்கே ஆசை
இறக்கும் பொழுதும்
துன்பம்வராமலிருக்க ஆசை
கல்லறை யிலும் உறக்கமில்லா ஆசை
அடுத்த ஜென்மம் ஒன்றிருந்தால்
ஆசையில்லா ஜென்மமாகப் பிறக்க ஆசை………………………………….
வலியைஅனுபவிக்க ஆசை
அந்த நினைவற்ற வலிகளுடனே
இருந்திருக்கக்கூடாதாஎன்றாசை
என் மேனி சிந்திய
முதல் ரத்தத்தைபார்க்காசை — அதுவே
நான் சிந்திய கடைசி ரத்தமாகி
இருக்கக்கூடாதா என்றாசை
பள்ளி சென்ற முதல் நாளை
எப்படியாவது வாங்க ஆசை
பக்குவப்படாமல் பள்ளிக்
குள்ளேயே இருந்துவிட ஆசை
பழகும் பொழுது
நல்ல நட்பிற்குஆசை
அந்த நட்பினிலும்
சிறந்த மனிதரைகாண ஆசை
பிரிந்திடினும் எனை
மறவா நண்பனுக்கு ஆசை
அந்த நண்பனிடமும்
எனக்குரிய உரிமைக்கு ஆசை
மறந்திடினும் ஒரு முறையாவது
காதலிக்க ஆசை
அந்த காதலிலும் எனக்குரியவளிடம்
ஊடலுக்குஆசை
ஒரு முறையாவது எனக்குரியவளை
தொட்டு விடஆசை
அந்தத் தொடு உணர்வும்
திருமணத்திற்கு பின்னிருக்கஆசை
பத்து மாதம் எனக்குரியவளின்
பாரம் சுமக்க ஆசை
ஈன்று எடுக்கும் பொழுது என்னவளுடன்
வலி தாங்க ஆசை
என்னால் தோன்றிய உயிரை
உன்னதமாக்க ஆசை
அந்த முயற்சியிலும் என்னவள்
உணர்வு கலக்க ஆசை
இருக்கும் வரைக்கும்
இன்பத்திற்கே ஆசை
இறக்கும் பொழுதும்
துன்பம்வராமலிருக்க ஆசை
கல்லறை யிலும் உறக்கமில்லா ஆசை
அடுத்த ஜென்மம் ஒன்றிருந்தால்
ஆசையில்லா ஜென்மமாகப் பிறக்க ஆசை………………………………….
7.24.2007
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
அடிக்கடி நீ தொட்டுப் பார்க்கும் அடி வயிற்றில் தான் நான் துடிக்கின்றேன் நொடிக் கொரு முறை என் சலனத்தை நீ ரசிப்பதை நானும் உணர்கின்றேன் ...
-
இன்று காலை எனது பிளாக்கை திறந்துப் பார்க்கையில் எனது பிரபலமான இடுகைகள் அடங்கிய பகுதியில் இடுகைகள் எல்லாம் மாறியிருக்கின்றன....