11.11.2011

ஏழாம் அறிவுக்கு ஒரு உதவி இயக்குனராக நான் எழுதும் திரைக்கதை


இது கிண்டலுக்காக அல்ல. உண்மையில் ஏழாம் அறிவைப் பார்க்கையில் சில இடங்களில் வியந்தேன். இருப்பினும் அந்த திரைக்கதை என் மனதில் சிறு உறுத்தலை உண்டு செய்ததால் என் மனதில் இப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணியதை எழுதுகிறேன்.

Ø  திரைப்படம் ஆரம்பித்து முதல் 15 நிமிடங்கள் எந்த மாற்றமும் இல்லை. போதி தர்மனின் வாழ்க்கை அப்படியே திரையில் வருகிறது. அதற்கு அடுத்து போதிதர்மன் இறந்ததும் இந்தியத் தேசத்தைக் காட்டுகிறோம். தமிழகம் காட்டப்படுகிறது.

Ø  சென்னை மாநகரில் ஸ்ருதிஹாசன் ( சுபா ஸ்ரீனிவாசன்) படிக்கும் கல்லூரி காட்டப்படுகிறது. ஒரு பேராசிரியர் வந்து ஆராய்ச்சிப் பற்றி சொல்லிவிட்டு, அதை எந்த தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு செல்கிறார். 

Ø  அவர் சென்ற பிறகு சுபா அவளின் நண்பர்களிடம் போதிதர்மனின் புகைப்படத்தைக் காட்டுகிறாள். போதி தர்மனின் தலைமுறைகள் இன்றும் வாழ்ந்துக் கொண்டிருப்பதாகச் சொல்லி அவர்களிடம் தான் எடுத்த டி.என்.ஏ பரிசோதனையைப் பற்றி சொல்கிறாள். ஆனால் அவர்களின் எந்த டி.என்.ஏவும் போதிதர்மனின் டி.என்.ஏவுக்கு சரியாகப் பொருந்தவில்லை என்கிறாள்.சுபாவின் நண்பர்கள் சற்று சோர்வடைகிறார்கள்.
§  அரவிந்தனின் (சூர்யா)புகைப்படத்தை காட்டுகிறாள். நம்முடைய ஆராய்ச்சியின் கடைசி நம்பிக்கை என்று அரவிந்தனின் புகைப்படத்தைக் காட்டிப் பேசுகிறாள். எல்லோர் முகத்திலும் ஒரு புத்துணர்ச்சி.


Ø  அரவிந்தனைக் காட்டுகிறோம். அதேப் பாடல். ஓ ரிங்கா....ரிங்கா....  என்று ஒலிக்கிறது. பின்பு கதையில் நடந்ததுப் போலவே அரவிந்தன் சர்கஸ்சில் வேலைச் செய்கிறார். அவனைப் பார்க்க சுபா அவள் நண்பர்களுடன் வருகிறாள்.  
§  அரவிந்தன் அவளைக் கண்டு மயங்குகிறான். அதேப் போல் குரங்கைப் பற்றிக் கேட்டுவிட்டு அரவிந்தனைப் பார்த்தப்படி செல்கிறாள். அப்பொழுது சுபாவின் தோழிகள் அவன் உன்னிடம் மயங்கிவிட்டான் நம்முடைய பரிசோதனை முயற்சி பாதி வெற்றி என்று சிரிக்கிறார்கள். சுபா அரவிந்தனைப் பார்த்தபடியே அவனுடைய டி.என்.ஏ அதற்கு பொருந்த வேண்டுமே என்கிறாள். “அதற்கு பொருந்துதோ இல்லையோ, உனக்கு சரியாகப் பொருந்தும் என்று தோழிகள் சொல்ல சுபா முறைக்கிறாள்.பின்பு அரவிந்தனைப் பார்க்கிறாள். அவன் சுபாவையே பார்க்கிறான்.

Ø  அதன் பிறகு செல்போன் தொலைவது,அதை அரவிந்தன் சுபாவிடம் ஹோட்டலில் கொடுப்பது என்று படத்தில் நீங்கள் பார்த்த காட்சி நகர்கிறது. இருவருக்கும் ஓரளவு சொல்லிக் கொள்ளும்படி நட்பு வளர்கிறது

Ø  அதன் பிறகு அரவிந்தன் சுபாவை கல்லூரியிலேயே பார்க்க வந்துவிடுகிறான். சுபாவிடம் அரவிந்தன் தான் செய்த பொம்மையைக் காட்டுகிறான்.சுபா அவனை சமாளித்து அனுப்ப முயலுகிறாள். சுபாவின் கல்லூரி மாணவர்களெல்லாம் அரவிந்தனை சர்கஸ்சில் பார்த்ததாகச் சொல்கிறார்கள். அவனை ஏதேனும் வித்தைக் காட்டச் சொல்கிறார்கள். அரவிந்தனும் அதன்படி தனக்குத் தெரிந்த வித்தையை அவர்களிடம் காட்ட, சுபாவைப் பார்த்து ஒருவன் கிண்டல் பண்ண அரவிந்தன் அவனை அடிக்கிறான். அப்பொழுது அரவிந்தனுக்கு அடிப்படுகிறது. அதைப் பார்த்த சுபா அரவிந்தன் மேல் கோபப்படுகிறாள். அரவிந்தனுக்கு முதலுதவி செய்ய சுபாவின் நன்பர்கள் அவனை அழைத்து செல்கின்றார்கள். அப்படியே அவனிடமிருந்து தங்கள் ஆராய்ச்சிக்குத் தேவையானவற்றை சேகரித்து விடுகிறார்கள்

Ø     அந்த நேரம் கல்லூரி பேராசிரியர் சுபாவை அழைத்துக் கண்டிக்கிறார். சுபா தன் ஆராய்ச்சியைப் பற்றி அவரிடம் சொல்கிறாள். அதைக் கேட்டு அவர் வியக்கிறார். இருந்தும் அவர் அவளிடம் இதெல்லாம் எப்பவும் இங்கு நடக்காது என்று சொல்கிறார்.சுபா நடக்கும் என்று அந்த இடத்தை விட்டு செல்கிறாள். உடனே அந்த பேராசிரியர் தன் மடி கணினியில் இணையம் வழியே சீனத் தேசத்து ஆளிடம் வீடியோ மூலம் சேட் செய்கிறார். 

Ø  இரவு நேரம் அரவிந்தன் தன் நண்பனிடம் இன்று சுபா என்னிடம் கல்லூரியில் கோபித்துக் கொண்டாள் என்று புலம்புகிறான். செல்போனில் பேசு என்று நண்பன் சொல்கிறான். அரவிந்தன் செல்போனில் பேச, சுபா தன் தோழியிடம் செல்போனை காட்டுகிறாள்.
§  தோழி எடுத்துப் பேசச் சொல்கிறாள். அவளும் ஸ்பிக்கர் மோடில் போட்டு பேசுகிறாள். அரவிந்தன் ஏன் அப்படி பேசினாய் என்கிறான். பதில் சொல்ல முடியாமல் சுபா முழிக்க, தோழி ”” உன்னை எல்லோரும் எப்படிப் பாத்தாங்க தெரியுமா, அதனால் தான் எனக்கு கோபம்” “ என்று சொல்லச் சொல்லி  சுபாவை செல்போனை வைக்கச் சொல்கிறாள். அரவிந்தன் முகத்தில் மகிழ்ச்சி. சுபாவும் அப்படியே சொல்லிவிட்டு வைத்தவுடன் தோழி, இனி பொறுப்பது வீண் அவனிடம் சொல்லிவிடு இல்லை விபரிதமாயிடும்னு சொல்கிறாள். சுபாவும் தலையாட்டிவிட்டு உறங்குகிறாள்.

Ø  அடுத்த நாள் சுபா அரவிந்தனைப் பார்க்க செல்ல அங்கு அரவிந்தனின் சொந்தக்காரர்களைப் பார்த்த சுபா திரும்பி வந்துவிடுகிறாள். அரவிந்தன் அங்கு வர அவனிடம், நண்பன் சுபா வந்த விஷயத்தைச் சொல்கிறான். அரவிந்தனின் சொந்தம் சுபாவைப் பற்றி வாயெடுக்க, சுபாவிடமிருந்து அரவிந்தனுக்குப் போன் வருகிறது. அரவிந்தனை உடனே கல்லூரிக்கு வரச் சொல்கிறாள்.அரவிந்தனும் அவள் சொன்னபடி கல்லூரிக்கு செல்கிறான்.

Ø  கல்லூரியில் சுபா தன்னுடைய ஆராய்ச்சி முடிவை எல்லாருக்கும் சொல்கிறாள். தமிழில் பேச அனுமதி கூறுகிறாள். அப்பொழுது சிலர் கிண்டல் செய்கின்றனர். உங்களுக்கு புது விஷயம் தெரிஞ்சிக்கனும்னு விருப்பமிருந்தா கேளுங்க, இல்லைன்னா காதைப் பொத்திக்குங்க என்று சொல்லி தமிழில் விளக்குகிறாள்.போதி தர்மனின் மரபணுவுக்கும் அரவிந்தன் (சூர்யா) வின் மரபணுவிற்கும் உள்ள குணங்கள் கிட்டத் தட்ட 84% ஒத்துப் போகிறது.அரவிந்தனின் மரபணுவை தூண்டினால் பழைய போதி தர்மனின திறமையை அவனிடம் கொண்டு வர முடியும் என்று சொல்கிறாள். அதைக் கேட்டு சிலர் பிரம்மிக்கிறார்கள்.சிலர் கேலிச் செய்கிறார்கள். இறுதியில் சீன உளவாளி பேராசிரியர் மட்டும் லேசாகப் பாராட்டுகிறார்.

Ø  இங்கு சுபா இவர்களிடம் விளக்கிக் கொண்டிருக்க, அரவிந்தன் கல்லூரிக்கு வெளியே சுபாவுக்காக காத்திருப்பது.அவனைப் பார்த்து கல்லூரி நண்பர்கள் சுபா சோதனை செஞ்ச குரங்கு இதோடா!” என்று சொல்லிச் செல்கின்றனர். அரவிந்தன் ஒன்றும் புரியாமல் விழிக்கிறான். அவர்களிடம் அரவிந்தன் சென்று சுபாவை தப்பாக பேசாதே என்று மிரட்டுகிறான். அவர்களிடம் சுபா தன்னைக் காதலிப்பதாக சொல்கிறான்.எல்லோரும் கிண்டலாக சிரிக்கின்றனர். அரவிந்தன் அவர்களை அடிக்க நினைப்பது. அவர்கள் எங்களை அடிப்பதை விட்டு விட்டு சுபாவிடமே போய் கேள் என்று சொல்கின்றனர். அரவிந்தன் கோபத்துடன் செல்கிறான். 

Ø  அருமையாக பேசியதற்காக சுபாவிற்கு அவளுடைய நண்பர்கள் கைக்குடுக்கிறார்கள்.அப்பொழுது சுபா இது இல்லை பிரச்சினை, இந்த ஆராய்ச்சியைப் பற்றி அரவிந்தனுக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு தான் தெரியவில்லை என்று சொல்கிறாள். அப்பொழுது அங்கே அரவிந்தன் வருகிறான். ” “”எனக்கு எல்லாம் புரிஞ்சிடுச்சு” “ என்று சொல்கிறான்.சுபா அதிர்ச்சியாகி நிற்கிறாள். சுபா அவனிடம் தன்னுடைய நிலையை விளக்குகிறாள். எதையும் கேட்கப் பிடிக்காமல் அரவிந்தன் அந்த இடத்தை விட்டு செல்கிறான்.மாணவர்கள் அவனை கிண்டல் செய்கின்றனர். எதுவும் அவன் காதில் விழவில்லை.

Ø        பாடல் ஒலிக்கிறது.

Ø  சுபாவை பேராசிரியர் அழைத்து உன்னுடைய ஆராய்ச்சிக்கு நீ சீனா சென்றால் நன்றாக இருக்கும் என்று நான் முடிவு செய்கிறேன். நீ சீனா செல்ல வேண்டும்.ஏனெனில் சீனாவில் தான் போதி தர்மனைப் பற்றி நீ நன்கு அறிந்துக் கொள்ள முடியும் என்று சொல்கிறார்.அதற்கு சுபா மகிழ்ச்சியோடு சம்மதிக்கிறாள். 

Ø      சுபா தன் நண்பர்களிடம் இதைப் பற்றிச் சொல்கிறாள். தன்னுடன் இரு நண்பர்களை அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறாள்.

Ø   சுபா சீனா செல்வதற்கு முன் அரவிந்தனை பார்க்க அவன் இருப்பிடத்திற்கு செல்கிறாள். அவன் காஞ்சிபுரம் சென்றுவிட்டதாக சொல்கிறார்கள்.ஏமாற்றத்துடன் அவனுடைய மொபைலுக்கு தொடர்பு கொள்கிறாள். எண் மாற்றப்பட்டுள்ளதாக செய்தி வருகிறது. கவலையுடன் திரும்புகிறாள்

Ø    தன் நண்பர்களிடம் அவனைப் பார்க்க வேண்டுமென்று சொல்கிறாள். நண்பர்கள் அவனை நீ செல்வதற்குள் அவனை அழைத்து வருவதாகச் சொல்லிச் செல்கின்றனர்.

Ø    விமான நிலையத்தில் சுபா அரவிந்தனுக்காக காத்திருக்கிறாள், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறார்கள்.சுபா கவலையுடன் சீனா கிளம்புகிறாள்

Ø  பேராசிரியர் சொன்னபடி சுபாவையும்,அவளுடைய நண்பர்களையும் சீனாவின் விமான நிலையத்திலேயே இரு சீனர்கள் வந்து அழைத்துச் செல்கிறார்கள்

Ø      சுபாவையும், நண்பர்களையும் ஒரு ஹோட்டலில் தங்க வைக்கின்றனர். அப்பொழுது இவர்களை அங்கு அழைத்து வந்தவன் செல்போனில் ஏதோ பேசுகிறான்.

Ø    சுபாவின் பேராசிரியரிடம் வீடியோ சேட்டில் பேசியவன், செல்போனில் சுபாவை ஹோட்டலுக்கு அழைத்து வந்தவுடன் பேசுகிறான். பேசி முடித்தவுடன் ஒரு வேலையாளை கூப்பிட்டு யாரையோ அழைத்து வர சொல்கிறான்.

Ø  வில்லன் டாங்கிளி அறிமுகம், ஒரு இருட்டறையில் டாங்கிளி பயிற்சி செய்து கொண்டிருக்கிறான். படத்தில் இந்த காட்சி பாடலில் இறுதிக் கட்ட காட்சியில் வருகிறது.வில்லன் பயிற்சியில் ஒருவன் அவனிடம் வந்து ஏதோ சொல்கிறான்.. அவனை டாங்கிளி முறைக்கிறான்.

Ø    டாங்கிளியிடம் இன்று இரவு சுபா தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்று அவளை கடத்தி நம்மிடத்திற்கு கொண்டு வர சொல்கிறான். டாங்கிளி பார்வையிலேயே பதில் சொல்லி விட்டு செல்கிறான்..

Ø  சுபாவிடம் நண்பர்களில் ஒருவன் தங்களை அழைத்து வந்தவரில் ஒருவனைப் பற்றி சந்தேகம் இருப்பதாக சொல்கிறான். அவன் சீன மொழியில் சொன்ன ஒரு வார்த்தையை நான் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன் என்று சொல்கிறான். அதை தான் மொபைலில் பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்று சொல்கிறான். அதை அவர்களிடம் போட்டுக் காட்டுகிறான்.அந்த நேரத்தில் அங்கிருக்கும் தொலைக்காட்சியில் ஒரு சீனப்படம் ஓடுகிறது.இவர்கள் செல்போனில் கேட்ட வார்த்தைகளை தொலைக்காட்சியில் சிலர் பேசுகிறார்கள். அதன் கீழே ஆங்கிலத்தில் அதன் அர்த்தம் (subtitle) போடப்படுகிறது. அதைப் பார்த்ததும் மூவரின் முகத்திலும் பயம் பரவுகிறது. தாங்கள் இன்னும் சற்று நேரத்தில் கடத்தப்படப் போகிறோம் என்று தெரிகிறது. இருப்பினும் என்ன செய்வது என்று புரியாமல் விழிக்கிறார்கள். செல்போனில் ISD வசதியில்லை. சீனாவிற்கு வந்து கொஞ்ச நேரம் தான் ஆகிறது. அதற்குள் இப்படியொரு செய்தி. தொலைப்பேசியில் பேராசிரியரை தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றனர். அதிர்ஷ்டவசமாக பேராசிரியருக்கு தொடர்பு கிடைக்கிறது. பேராசிரியரிடம் தாங்கள் கடத்தப்படப் போகும் விஷயத்தை சொல்கிறார்கள். பேராசிரியர் அவர்களை அறையை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என்று சொல்கிறார். தான் ஒரு நபரை அனுப்புவதாகச் சொல்கிறார்.

Ø  சுபா தன் மொபலை ஆன் செய்து அந்த அறையை வீடியோ எடுக்கிறாள். அப்பொழுது காலிங் பெல் சத்தம் கேட்கிறது. சுபாவும் நண்பர்களும் பயந்த நிலையில் கதவின் அருகில் செல்லும் பொழுது டாங்கிளி என்று ஒரு குரல் கேட்கிறது. மீண்டும் அந்த குரல் உளவாளி பேராசிரியர் பெயரையும் சொல்ல, கதவை நண்பர்கள் திறக்கிறார்கள்.

Ø  டாங்கிளி அவர்களை அழைத்து செல்கிறான்.காரில் ஏறும் பொழுது தன்னுடைய செல்போனை மறந்தது சுபாவிற்கு நியாபகம் வர,டாங்கிளியிடம் சொல்கிறாள். அவன் பரவாயில்லை என்று சொல்கிறான். அவள் நான் சென்று எடுத்து வர வேண்டும் என்று அவனிடம் மீண்டும் கேட்க ,அவன் பார்க்கிறான் அவள் அமைதியாகிறாள்.

Ø  இவர்கள் ஒரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார்கள், அங்கே சுபாவிடம் டாங்கிளியை அனுப்பிய தலைவன் ஏதோ கேட்கிறான். அவள் பதில் சொல்ல மறுக்கிறாள். அருகில் இருக்கும் டாங்கிளி அவளை முறைக்கிறான். அதைப் பார்த்த நண்பனில் ஒருவன் என்னவென்று கேட்டு டாங்கிளியை நெருங்க... அவனை டாங்கிளிப் பார்க்கிறான். அவன் உடனே அங்கிருக்கும் கத்தியை எடுத்து கையை அறுத்துக் கொள்கிறான். அதைக் கண்ட சுபாவும் அவளின் இன்னொரு நண்பனும் அதிர்கிறார்கள். டாங்கிளி சுபாவைப் பார்க்கிறான். சுபா எல்லாவற்றையும் அவன் தலைவனிடம் சொல்கிறாள். அரவிந்தனைப் பற்றியும் சொல்கிறாள். அவள் சொல்லிக் கொண்டிருக்க, அவளின் நண்பன் அவர்களுக்குத் தெரியாமல் அங்கிருக்கும் ஒரு மொபைல் போனை எடுத்து  அதில் யாருக்கும் தெரியாமல் குறுந்தகவல் அனுப்ப முயற்சிக்கிறான். ஆனால் மொபைலில் வரும் தகவல்கள் சீன மொழியில் இருக்க, ஒன்றும் புரியாமல் விழிக்கிறான் நண்பன். அப்பொழுது வேறு வழியின்றி தன்னுடைய சென்னை நண்பனுக்கு போன் செய்கிறான். 

Ø    சென்னையில் அரவிந்தனை சர்கஸ்சில் சந்தித்து அவனிடம் சுபாவைப் பற்றி சொல்கிறார்கள்.அவள் சீனா சென்றிருப்பதாகச் சொல்கிறார்கள். அரவிந்தன் எதையும் கேட்காமல் அவர்களை திரும்பிப் போகச் சொல்கிறான். அப்பொழுது அங்கிருக்கும் நண்பர்களில் ஒருவனுடைய செல்போன் ரிங்க் ஆவது. அவன் அந்த நம்பரைப் பார்த்துவிட்டு சீனாவிலிருந்து டா என்று பேசுகிறான். அரவிந்தனும் ஆர்வத்தோடு அவனையே பார்க்கிறான்.“”வீ ஆர் கிட்னாப்டு என்று அவன் காதில் விழ ,கேட்கும் நண்பன் அதிர்ச்சியாகிறான். என்னது வீ ஆர் கினாப்டா ? என்று நண்பன் திருப்பிச் சொல்ல சுற்றியிருக்கும் நண்பர்களும் அதிர்ச்சியாகிறார்கள். அரவிந்தனும் அதிர்ச்சியாகப் பார்க்கிறான்.நண்பன் அதை ஸ்ப்பீக்கர் மோடில் போடுகிறான். அந்த வார்த்தைக்குப் பிறகு ஒரே அமைதி.

Ø     அங்கே செல்போனில் பேசியவன் டாங்கிளியையே பார்க்கிறான். சுபா தன் நண்பனைப் பார்க்கிறாள். அவன் டாங்கிளியைப் பார்த்தபடி அருகில் இருக்கும் துப்பாக்கியை எடுக்கிறான். சுபா நோ! நோ! என்று கத்துகிறாள்
Ø இங்கே அரவிந்தனும் ,நண்பர்களும் சுபாவின் குரலைக் கேட்க அதிர்ச்சியாகிறார்கள். அவள் கத்திக் கொண்டே இருக்க, திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்கிறது. சுபாவின் சத்தம் அதிகமாகிறது. அரவிந்தன் கத்துகிறான். என்ன  நடக்குது என்று கத்துகிறான். நண்பர்களும் ஒன்றும் புரியாமல் விழிக்கிறார்கள்.

Ø  வேறு வழியில்லை பேராசிரியரைத் தான் பார்க்க வேண்டும் என்று சொல்லி அந்த இடத்தில் இருந்து கிளம்புகிறார்கள்.அரவிந்தனும் அவர்களுடன் செல்கிறான்.

Ø  அவரின் வீட்டிற்கு செல்கிறார்கள். கதவு திறந்திருக்க உள்ளே பேச்சு சத்தம் கேட்கிறது.நண்பர்கள் அமைதியாகிறார்கள். பேராசிரியர் தனது மடிகணினியில் யாருடனோ வீடியோ சேட்டில் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் சுபா என்று சொல்ல, நண்பர்கள் கொஞ்சம் அதை கவனிக்கிறார்கள். அவர் சீன உளவாளியிடம் பேசிக் கொண்டிருப்பதை அவர் பேசும் விஷயங்களை வைத்து கண்டுப்பிடித்துவிடுகிறார்கள் நண்பர்கள்.அரவிந்தன் ஒன்றும் புரியாமல் விழிக்கிறான். இறுதியாக அவர் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை மறைந்திருந்துப் பார்க்கிறார்கள். அப்பொழுது டாங்கிளி கணிணி திரையில் பேராசிரியரிடம் ”ஐ வில் கம் இண்டியா அண்ட் கில் தாமு “ என்று சொல்கிறான். பிறகு கணிணி திரை மறைகிறது.திடீரென்று பேராசிரியர் திரும்பிப் பார்க்க அரவிந்தன் நிற்கிறான். அவனுக்கு அருகில் நண்பர்கள் நிற்கிறார்கள்.

Ø  பேராசிரியர் தலைக் குனிந்தபடி அவர்களின் திட்டத்தை விளக்குகிறார். சீனாவில் தோன்றிய நோயை மீண்டும் உருவாக்கி அதை இந்தியாவில்  பரப்ப திட்டமிட்டிருக்கிறார்கள்.ஆனால் அந்த வைரஸ் பரிசோதனை இன்னும் முடிவடையவில்லை.அதற்குள் சுபாவின் ஆராய்ச்சிப் பற்றி அவர்கள் அறிந்ததும், சுபாவை சீனாவுக்கு அனுப்புமாறு கேட்டார்கள். இப்பொழுது சுபாவின் ஆராய்ச்சியைப் பற்றி தெரிந்துக் கொண்டார்கள். எனவே தான் ”அரவிந்தனைக் கொல்ல வருகிறான் டாங்கிளி” என்று சொல்லி முடிக்கிறார்.

Ø  பேராசிரியர் சொல்லி முடிக்கும் முன் அரவிந்தன் சொல்கிறான்.இந்த தமிழ் மண்ணுல  அவன் காலடிப் படக் கூடாது. நான் போறேன் அவனைக் கொல்ல, நான் சீனா போகணும் என்று சுபாவின் நண்பர்களை அரவிந்தன் பார்க்கிறான்.அவர்கள் கையை வெற்றி சின்னமாகக் காட்டுகிறார்கள். ” “வர்றன் டா தமிழன்னா யாருன்றதை  மறந்திட்டிருப்பீங்க  வந்து ஞாபகப்படுத்தறன்.என்று சொல்கிறான்
            
               இடைவேளை
                                          தொடரும்....

7 comments:

  1. அப்படி போட்டு தாக்குங்க....நல்ல இருக்கும் போலிருக்கே....மீதியையும் சீக்கிரம் சொல்லிடுங்க.

    ReplyDelete
  2. வெண் புரவி:
    அன்பரே மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு...

    நிச்சயம் இடைவெளிக்குப் பிறகு எழுதிக் கொண்டிருக்கிறேன்.மின்சாரம் சரி வர இல்லாததால்,எழுத முடியவில்லை. திங்கள் மாலைக்குள் பதித்துவிடுவேன். அதையும் படித்துவிட்டு கருத்துக்களை மறக்காமல் பதியவும்

    ReplyDelete
  3. ஒரு circus காரன் சீனா போய்.....
    விஜய் படம் மாதிரி ஆயிடாது??

    ReplyDelete
  4. எழிலருவி உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் முதலில் நன்றி.
    இதை ஒரு நல்ல விவாத களமாக எண்ணியே எழுதுகிறேன்
    நீங்கள் சொல்வது போல் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.
    என்னைப் பொறுத்தவரை வெளிநாட்டிற்கு அதிகம் செல்வது போல் உள்ள காட்சிகள் விஜய் படத்தில், எனக்கு தெரிந்த அளவில் குருவியிலும், வில்லுவிலும் தான் நான் பார்த்திருக்கிறேன். அப்படியிருக்க எப்படி இப்படி சொல்கிறீர்கள். ஒரு உதாரணம் சொல்லக் கூட உங்களால் புதிதாக யோசிக்க முடியவில்லை. எல்லோரும் சொல்லும் விஜய்யைத் தான் எடுத்துக் கொள்கிறீர்கள். இதிலிருந்தே தெரிகிறதா …? விஜய் என்று சொல்வதினால் சிலவற்றைப் புரிய வைக்க முடியும் என்று எண்ணுகிறீர்கள்.
    ” “ஒரு circus காரன் சீனா போய்...” “.
    பாஸ்ப்போர்ட் விஷா இருந்தா யார் வேணும்னா சீனா போகலாம்.
    படத்துல ஒரு சர்கஸ்காரன் எல்லோருக்கும் வைத்தியம் பாக்கும் பொழுது சீனா போகக் கூடாதா ஏன் நண்பரே... ?

    ReplyDelete
  5. கதை ரொம்ப அருமையாக இருக்கு....இடைவெளிக்கு பிறகு வரும் கதைக்காக காத்து கொண்டு இருக்கிறோம்.....

    ReplyDelete
  6. மாங்கனி நகர செல்ல குழந்தை...
    கவிதையாய் இருக்கிறது உங்கள் தலைப்பு.
    உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே!
    எழுதிக் கொண்டிருக்கிறேன்.
    இன்று இரவுக்குள் முடித்துவிடுவேன் என்று நினைக்கிறேன். நாளை செவ்வாய்க்கிழமை நீங்கள் இடைவெளிக்குப் பிறகு பார்க்கலாம்.

    ReplyDelete
  7. நன்றாக இருக்கிறது

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts