10.17.2007

பொது மகளீர்.......................


இது வரை குப்பைத் தொட்டிக்கு
செல்லாத காகிதங்களால் ,நாங்கள்
குப்பையாகிறோம்

.......................................................................................


குப்பைத் தொட்டிக்கு
சென்ற பின்னும்
மீண்டும் பூஜைக்கு வரும்
மலர்கள் நாங்கள்

.........................................................................................


வெற்றுக் காகிதங்கள் நாங்கள்
இது வரை எங்களின் மேல்
எந்த ஓவியமும் வரையப்படவில்லை
எந்த கவிதையும் எழுதப்படவில்லை
கிறுக்களுக்கும் கிழிசலுக்குமே
எங்களின் சதைகள் தேவைப்படுகின்றன
வெற்றுக் காகிதங்கள் நாங்கள் .................................

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts