
ஐந்து ஆண்டுகளாக சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு நான் சென்றுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த முறை மட்டும் தான் நிறைய ஆசைகளுடன் சென்று குறைந்தப் புத்தகங்களுடன் திரும்பினேன்.என்னை கல்லூரி நாட்களுக்குப் பிறகு எந்த பொருளும் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் புத்தக கண்காட்சி என்றால் மட்டும் நான் பைத்தியமாகிவிடுவேன். எல்லாப் புத்தகங்களையும் வாங்கிவிடும் பேராசை என்றுமே எனக்கு உண்டு.




