1.17.2012

இது தான் காதலென்று உங்களால் விளக்க முடியுமா...?

 
 
நீண்ட நாட்களாக என்னுடைய வாழ்க்கையில் நடந்த காதலைப் பற்றிய ஒரு விவாதத்தை உங்களின் முன் வைக்க வேண்டும் என்று நினைத்தேன். இன்று அதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
  காலந்தோறும் காதலுக்கு நிறைய விளக்கங்கள் வந்துக் கொண்டே இருக்கிறது. இருப்பினும் இது தான் காதலென்று உங்களால் விளக்க முடியுமா...
இது தான் தலைப்பு

சென்னையில் 35வது புத்தகக் கண்காட்சி (போரும் வாழ்வும்)


     ஐந்து ஆண்டுகளாக சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு நான் சென்றுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த முறை மட்டும் தான் நிறைய ஆசைகளுடன் சென்று குறைந்தப் புத்தகங்களுடன் திரும்பினேன்.என்னை கல்லூரி நாட்களுக்குப் பிறகு எந்த பொருளும் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் புத்தக கண்காட்சி என்றால் மட்டும் நான் பைத்தியமாகிவிடுவேன். எல்லாப் புத்தகங்களையும் வாங்கிவிடும் பேராசை என்றுமே எனக்கு உண்டு.

1.15.2012

தமிழர் திருநாளைக் கொண்டாட நமக்கென்ன அருகதை இருக்கிறது

 நம் மண்ணின் உயிர் விவசாயம்

அது நம்முடைய தொழில் மட்டுமில்லை உயிர். ஆனால் நம் விவசாயத்தின் நிலையும், அதை உருவாக்கும் இன்றைய நம் மண்ணின் நிலையும் இன்று எப்படி இருக்கிறது...?

1.13.2012

தமிழ்த்திரைப்படம் தேடலும், திருடலும்

     

   புத்தாண்டு தொடங்கிய நன்னாளில் ஜெயா டிவியில் ஒரு நிகழ்ச்சி. சத்யராஜ் அவர்களும்,சுஹாசினி அவர்களும் இணைந்து இன்றைய தமிழ் சினிமா பற்றி ஒரு விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். நிறைய திரைக்கலைஞர்களும், ரசிகர்களும் கலந்து கொண்டு ஒர் ஆரோக்கியமான விவாதத்தை நம் முன் வைத்தார்கள்.

1.10.2012

நீ சேயானாய் … நான் தாயானேன்

உங்களுக்கு என்னைத் தவிர
உலகத்தில் வேறு எதுவும்
கண்ணுக்குத் தெரியாதா?
கோபமாகக் கேட்டாய் நீ

12.31.2011

துளித் துளியாய் மரணப் பிறப்பு


துளித் துளியாய் மரணப் பிறப்புத்
தரும் காதலே தயவு செய்து
என்னிடம் இப்பொழுது வராதே

12.30.2011

இது போதும்!


 முதன்முதலாய் நீ என் வீட்டிற்கு
வருகிறாய் என்றதும் — என்
வீட்டிற்குள் தான்
எத்தனை மாற்றங்கள்–உன்னால்
நிகழ்ந்தது தெரியுமா?

Popular Posts