12.11.2012

தமிழக மீனவர்களின் இரக்கமிக்க துணிகரச் செயல் (பகிர்வு)



படத்தில் - மீனவர் மணிகண்டன் மீனை தூக்கிச் செல்கிறார்

         

 என்னுடைய வலைத்தளத்தில் என்னைப் பாதித்த செய்திகளை மட்டும் எப்பொழுதெனும் நான் பகிர்வதுண்டு. தற்பொழுது என்னை மிகவும் நெகிழ வைத்த செய்தியை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்.
          
      மெரீனா கடற்கரையில் கரை ஒதுங்கிய டால்பின் மீனை காப்பாற்றிய தமிழ் மீனவர்களின் செயற்கரிய செயல்.

12.07.2012

திரைவிமர்சனம்: நீர்ப் பறவை ஆழமாக நீந்தியிருக்கலாம்.




  நீர்ப்பறவை தலைப்பே என்னை திரையரங்கம் நோக்கி ஈர்த்தது. மேலும் அடிக்கடி தொலைக்காட்சியில் தென்படும் துண்டுக் காட்சிகள் நீர்ப்பறவையைப் அவசியம் பார்த்தே ஆக வேண்டுமென்ற எண்ணத்தை மனதில் ஏற்படுத்திவிட்டது.மேலும் படத்தின் இயக்குனரும் நடித்த நடிகர்களுக்கும் மற்றும் அதில் பணி செய்த அத்தனைக் கலைஞர்களும் என்னை மிகவும் கவர்ந்தவர்கள்.

12.02.2012

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் : கொண்டாட்டம்





       இயக்கம் என்பது சின்ன விஷயமல்ல என்று பலர் சொல்வார்கள். ஆனால் சின்ன சின்ன விஷயங்களில் தான் இயக்கமே இருக்கிறது என்று நிரூபித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பாலாஜி தரணிதரன். டிஜிட்டல் கேமராவான 5-டியில் குறைந்த பொருட் செலவில் எடுக்கப்பட்டு கதையின் பலத்துடன் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துவரும் ”நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” இயக்குனரின் துணிச்சலான முயற்சி.

11.30.2012

பாக்கெட் மனியின் பூதாகரப் பிரச்சினைகள் நீயா நானாவில்






       இந்த வார நீயா நானாவில் பாக்கெட் மனிப் பற்றிய நிறை குறைகளை விவாதிக்கையில் தான் நம் சமூகத்தின் அத்தியாவசியத் தேவைகளின் புரிதலின்மையைப் புரிந்துக் கொள்ள முடிந்தது.
       நீயா நானாவில் ஒரு பக்கம் பெற்றோர்களும், மறுபக்கம் பிள்ளைகளையும் அமர வைத்து  விவாதிக்கையில் தான் பிள்ளைகளைக் காட்டிலும் பெற்றவர்கள் எத்தனைப் பெரிய தவறை செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

11.19.2012

இரசித்த நூல்கள்:வெண்ணிற இரவுகள் - ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி




கனவுலகவாசியின் நினைவுகளிலிருந்து என்று புத்தகத்தை திறக்கையிலேயே ஆரம்பிக்கிறது வெண்ணிற இரவுகள். இந்த குறுநாவலைப் பற்றி பேராண்மை படத்தில் ஒரு இடத்தில் ஜெயம் ரவி சொல்வார். உடனே அந்த புத்தகத்தைத் தேடிப் பிடித்து வாங்கிவிட்டேன். இப்பொழுது படித்தும் விட்டேன். அந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதலாம் என்று தொடங்குகையில் தான். எனக்கு முன் இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதியவர்களின் விமர்சனத்தைப் படிக்கலாம் என்று தேடினேன். அது நீண்டு கொண்டே செல்கிறது.

11.18.2012

உள்ளத்தின் ஆழத்திலிருந்து…




விழுந்தது மழைத்துளியோ!
என் காதல் உயிர்த்துளியோ!
உன் மேனித் தொட்ட துளிகளில்
என் காதலுமுண்டோ…?

இந்த பெண்மையின் மனதை
ஒரு சொல்லினில் அறிய
நீ முயற்சி செய்கிறாய்
நீ முயற்சி செய்கிறாய்
நானும் சொல்லிடுவேனோ…!
எளிதில் நானும் சொல்லிடுவேனோ…

11.13.2012

தீபாவளி ஞாபகங்கள்





தீபாவளி என்றதும் எல்லோருக்கும் பல ஞாபகங்கள் வரும். முதலில் பட்டாசு.புது சினிமா,பலகாரம்,இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இன்னும் சொல்லிக் கொண்டேப் போகலாம். ஆனால் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது என் பாட்டி வீடு தான்.

Popular Posts