9.15.2012

என் உதிரம் கலந்த நன்றி உனக்கு...



மேகம் துடைத்து

மழைத்துளியாய்

கருங்கூந்தலை நனைத்து…

துளி மணலில் கலந்து

பாதங்களை தடவும் நீர்த்துளியே…

கோடான கோடி நன்றிகள் உனக்கு…

என்னவளின் குடைக்குள் செல்ல

உதவியதற்கு…

பூவை உரசி

புதுப் பொலிவோடு நீரைத் தொட்டு

குளிர் உணர்வாய் என் சுவாசத்தில்

கலந்த பூங்காற்றே…

கொஞ்சம் வேகமாக வீசியதற்கு நன்றி

என்னவளின் குடையை உடைத்து

இருவரையும் நனைய விட்டதற்கு….

நேசம் தொட்டு

உள்ளங்கை வடிவில் உயிரை அடக்கி

உறக்கமில்லாமல் உதிரங்களில் உணர்வை

தந்த என் இனிய இருதயமே

என் உதிரம் கலந்த நன்றி உனக்கு….

என்னவளின் கை என் மேனியில்

பட்டபின்னும் இன்னும் நீ

துடித்துக் கொண்டிருக்கிறாயே….



வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

12 comments:

  1. மழையில் சாதகமாகி விடுகிறது
    ஒரு காதலுக்கான அத்தனை உயிர்ப்பும் ....'அருமை நண்பா கலக்குங்க ( காதலை )

    ReplyDelete
    Replies
    1. மழையில் சாதகமாகி விடுகிறது
      ஒரு காதலுக்கான அத்தனை உயிர்ப்பும்

      இந்த வரிகளில் ஒரு கவித்துவம் இருக்கிறது. இந்த வரிகளே ஒரு கவிதைக்கான தொடக்கத்தை தந்துவிடுகிறது.
      பாராட்டிற்கு நன்றி தோழி

      Delete

  2. அழகான மழை சார்த்த உணர்வுகள்... மழைகூட துணையுடன் இருக்கும் போது சுகம் தான்....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மழைப் பற்றிய பதிவின் மூலம் நான் எழுதிய கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது. அதன் தாக்கமே இந்த பதிவு.
      சமீரா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  3. உள்ளம் குளிர்வித்துப்போகும்
    அருமையான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. என்னுள்ளம் மட்டுமின்றி படிப்பவர்களின் உள்ளமும் இதைப் படிக்கையில் குளிர்கிறது எனும் பொழுது மிக்க மகிழ்ச்சி. வாழ்த்திற்கு மிக்க நன்றி .

      Delete
  4. Replies
    1. அடடா என்று உங்களை சொல்ல வைத்ததில் மகிழ்ச்சியே...

      Delete
  5. மனம் சில்லிட்டுப் போனது
    உங்கள் கவிகண்டு...
    அதன் குளிர் இன்னும் விடவில்லை...

    ReplyDelete
  6. உங்களை சில்லிட வைத்ததில் மிக்க மகிழ்ச்சி. இதற்கே இப்படியென்றால் இன்னும் நிறைய இருக்கிறதே நண்பரே... வசந்த மண்டபத்தை குளிர்வித்ததில் மகிழ்ச்சி...

    ReplyDelete
  7. பாதங்களை தடவும் நீர்த்துளியே…

    கோடான கோடி நன்றிகள் உனக்கு…

    தேன் துளியாய் மழைத்துளிகள் !!!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா...

      Delete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts