10.16.2007

நினைவெனும் மெல்லியநூலிழை


எனது வெட்க்கத்தின் வேர்களில்
தண்ணீர் ஊற்றியவன் நீ
எனது இரவுகளின் ரகசியநொடிகளை
நீளச் செய்தவன் நீ
என் மனதின் ஒவ்வொரு அசைவும்
உன் நினைவெனும் மெல்லியநூலிழையால்
பிணைக்கப்பட்டிருக்கிறது
அன்பை வெளிக்காட்டுவதில்
உன்னைக்காட்டிலும் நான் ஏழை தான்
இருப்பினும் அன்பில் வறுமை
இல்லை என்னிடம்
மூடிய பின்னும் எனது விழிகளில்
பார்வை மறைவதிலலை
உன் முகம் மட்டுமே
எனது மௌனங்களில் வெளிப்படும்
அன்பை உன்னால் உணர முடியவில்லை
எனும் பொழுது வார்த்தைகளை வெறுக்கிறேன்
என் வார்த்தைகளை விட
என் மௌனத்தை அல்லவா
நீ எளிதில் புரிந்துக் கொள்வதாக
எண்ணியிருந்தேன் இது வரை................
போகட்டும் எப்பொழுதுமே
உன் வார்த்தைகளும் என் மௌனங்களும்
தானே உறவாடிக் கொண்டிருந்தது
இப்பொழுது மட்டும் என்னிடம்
வார்த்தையை எதிர்பார்ப்பதில் என்ன நியாயம்
சொல்!
பேசிக் கொண்டிருப்பவன் நீ
கேட்டுக் கொண்டிருப்பவள் நான்
எனவே நீயே பேசிவிடு !
நம் நேசத்தைப் பற்றி அதில்
நம்முடனே தவழ்ந்து வந்த நாட்களைப் பற்றி
பேசாமல் மட்டும் இருந்து விடாதே!
உனது நேசங்க்களின் தொகுப்புக்கு
தோல்வி என்ற தலைப்பை
மட்டும் வைத்துவிடாதே!
தயவு செய்து பேசிவிடு!
என் சுவாசத்தினுள் உனது
நேசக் காற்றினை வரவேற்க
காத்திருக்கிறேன்......
உனது வார்த்தைகளில் சில
என்னை கோபப்படுத்தியதுண்டு
அப்பொழுதெல்லாம் எனது
கோபத்தை ரசிப்பதற்க்காகவே
பேசினேன் என்பாயே.....
இப்பொழுது என் காதலை
ரசிக்க கொஞ்சம் பேசேன்!
நான் நிச்சயம் கோபம்கொள்ள மாட்டேன்

உனக்கு ஒரு கும்பிடு

தலைவணங்குகிறது

கற்பூர தீபத்தைக் காட்டுகையில்
எல்லோரும் கை கூப்பித் தலைவணங்கினர்
என்ன அதிசயம்! அதுவோ!
உன்னைக் கண்டு
தலைவணங்குகிறது.........
அதற்கும் தெரிந்திருக்கிறது நீ
என்னுடைய தெய்வமென்று.......................



அனுமதிப்பதில்லை


கண்ணீரை என் தோட்டத்தில்
என்றுமே நான் அனுமதித்ததில்லை
ஏனோ அதனாலேயே பூக்களையும்
நான் அனுமதிப்பதில்லை
ஏனென்று கேட்கிறாயா?
தன்னை காட்டிலும் ஓர்
மென்மையான அழகா!என்று
உன்னை கண்டதும்
கண்ணீர் விடுகின்றது பூக்கள்
என்ன செய்ய.................




என்னைப் பார்த்து நீ......


துறவியென்றாய் என்னைப் பார்த்து நீ........
இல்லை! நான் துறவியைக் காட்டிலும்
மேன்மையானவன்
துறவியால் தன் உயிரின் உருவத்தை
காண இயலாது
அதைத் தேடியே தன் வாழ்நாளை
வீணடிப்பவன்
நானோ! அதை என்னருகிலேயே காண்கிறேன்
இதோ என்னுயிர் சிரிக்கிறது,
பேசுகிறது, அசைகிறது
அழகாக வெட்கப்படுகிறது
என்று உன்னை கைக் காட்ட
நீயோ! உன் இரண்டு கைகளாலும்
முகத்தை மூடியபடி
உனக்கு ஒரு கும்பிடு என்றாய் ......
என்னைப் பார்த்து
ஆ! என்னுயிருக்கு கும்பிடவும் தெரிந்திருக்கிறது

10.12.2007

சிரிக்க நினைத்தேன்


வார்தைகளை எப்படி மனதிலிருந்து
தோண்டி எடுப்பது என்று நினைவுகள்
அடிக்கடி சோர்கின்றப் பொழுது தான்
சொற்களில் இதமில்லாமல் கடுமை
வெளிப்படுவது கண்டேன்......................
முற்களில் இதயம் மாட்டியது போல்
வலி எங்கே என்று தேடித்
திரிகையில் தான் மேனி
முழுதும் சோர்வைக் கண்டேன்.........
கண்ணீர் சீந்தவும் மனதின்
நினைவுகள் தூண்ட வேண்டும்என்று
கண்கள் கசக்கப் போராடும்
பொழுது உணரக் கண்டேன்.............
உதடுகளில் மலர்ச்சியை காண்பிக்க
உள்ளத்தில் எத்தனை
அழ வேண்டும் என்பதை
துவண்ட இதயத்தின்
சோகத்தில் கண்டேன்

10.09.2007

சிந்திக்கத் தூண்டும் உன் சந்திப்பு

என் நண்பனின் வேண்டுகோளுக்கு இணங்கி ,அவனுடைய நண்பனின் காதலுக்காக எழுதியது. ஒரு மாதம் அவன் சொன்ன தகவல்களில் இருந்து நான் எழுதிய முதல் காதல் கவிதை, ஆறு வருடத்திற்கு முன் எழுதியது. இப்பொழுது அவர்களுக்குள் திருமணம் நிகழ்ந்து ஆண்டுகள் ஆகிவிட்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. உங்களையும் சிறிது மகிழ்விக்கலாம் என்ற எண்ணத்தில் இதோ காதலுடனான என் முதல் சந்திப்பு....................


கால மணித் துளிகளோடு
என் காதல் மழைத் துளிகளையும்
வீசும் தென்றல் காற்றினூடே- உலவ
விடுகிறேன் தூசி போலே
இதை மாசு போல் நினைத்து
உதறி விட முடியாது.....
உள்ளுக்குள் இருக்கும் நோயை
தும்மல் மூலம் வெளிக்காட்டிவிடுகிறது தூசி
அது போல் உள்ளத்தில்
உள்ள நோயைக் காதல் மூலம்
வெளிக்காட்டிவிடுகிறது கண்கள்
அதை உள்ளே அடக்குவது முறையோ!
அடக்குவதால் தான் என்ன பயனோ!
இந்த வெள்ளைத் தாளில்
என் சிந்தனைத்துளிகளை சிந்தவிட
ஏனோ என் மனம் விரும்புகிறது
இதை உள்ளத்தின் உளறல் என்று
நினைப்ப தினால் எனக்கொன்றும்
கவலையில்லை......
உள்ளத்தின் உளறல் என்றாலும்
உதடடளவில் இல்லாத
உறுதியான உச்சரிப்பு
மலையை உடைக்கவோ! நிலவைப் பிடிக்கவோ!
என் காதலுக்குத் தெரியாது
ஆனால் உள்ளத்தை உருக்க...........
உணர்வை எழுப்ப...........
அன்பைக் கொடுக்க...........
என் காதலுக்குத் தெரியும்
அந்த தாஜ்மஹாலின் உன்னத
உயிர்த் துடிப்பை உணர முடியும்
அந்த கல்லறையில் உறங்கிக்கொண்டிருக்கும்
காதல் நெஞ்சங்களை
எழுப்ப முடியும்...............
நேற்றைக்காகவோ! இன்றைக்காகவோ! நாளைக்காகவோ!
நான் வாழவில்லை..............
ஒரு மணித் துளி வாழ்ந்தாலும்
எனக்காக என் ஆத்மாவின்
ஆனந்தத்திற்காக வாழ்கிறேன்
என் ஆனந்தம் இந்த ரோஜாவின்
மெல்லிய இதழை விடவும்
துல்லியமானது....
எனக்கு கிடைத்த இந்த ஆனந்தம்
காதலால் வந்ததே...........
காலத்தின் மீது முற்களூக்கு
உள்ள காதலால் தானே
கடிகாரம் கூட மணித் துளிகளை
உதிர்க்கிறது
ரோஜாச் செடியில் முற்கள் என்று
நாம் கவலைப் பட்டாலும்
கடினமான அந்த நெஞ்சத்திலும்
எவ்வளவு மென்மையுள்ளது என்பதை
ரோஜாவின் புன்னகையே விளம்பரப்படுகிறதே....
ஆம் நீ என் கண்ணில் மட்டும்பட்டிருந்தால்
பரவாயில்லை
உன் முதல் சந்திப்பு என்னை
சிந்தித்திருக்க வைத்திருக்காது..........
சிந்திக்கத் தூண்டும் உன் சந்திப்பு
என் இதயத்தைத் தொட்டு
என் நெஞ்சில் நினைவையும்
சுமக்கவைத்துவிட்ட உன் பார்வை------
என் விழியினில் ஊர்ந்து சென்று
உள்ளத்தையும் அல்லவா தாக்கிவிட்டது
அந்த தாக்கத்தினால் ஏற்பட்ட புண்
என் இதயத்தில் இன்றும் வேதனையை
உண்டு பண்ணுகிறது
இந்த வேதனை சுககமாக இருந்தாலும்
சோகமான நினைவுகளை என்னுள்
தோற்றுவித்து தாகமான என் நெஞ்சில்
திடீரென்று இன்பமான தூறலை
தூவியது சோதனை தான்
உன் சந்திப்பினால் ஏனோ
உலகம் கூட எனக்கு அடக்கம்போல்
தான் தெரிகிறது
ஆனால் என் உள்ளம் அடங்காமல்
போனது தான் புரியவில்லை
என்னுள் துளிர்கின்ற இந்த
மொட்டான நினைவுகள் ஏனோ
மலரத் துடிக்கின்றது
காலம் அதற்கு குறுக்கே நிற்கிறது
உதட் டால் உணர்வுகளை உரைக்க
உள்ளம் தடுக்கிறது
மனதால் உன்னை நினைக்கமட்டும்
காதல் உதவுகிறது
எனக்குள் இருக்கும் உணர்வு உன்னிடம்
அது நீங்காத நினைவுகளாய் என்னிடம்
உறங்காத உளரல்களாய் என்
உறக்கத்தில் நின்றாடும் கண்ணிடம்
துடித்துக் கொண்டிருக்கும் என் நினைவுகளை
நீ பகிர்ந்து கொள்ள வருவாய்....
என நான் நினைக்கவில்லை
வந்தால் என் நினைவுகள் உன்னை சுமக்கும்
இல்லையேல் அந்த நினைவுகளை நான் சுமப்பேன்
கால ஏட்டில் எல்லா எழுத்துக்களையும்
எழுதி முடிக்கும் வேளை வரை
இந்த நினைவு ஏட்டை அடிக்கடித் திருப்புவேன்
சுகமான அந்த நினைவுகள்
என் மனதார வாசிக்கப்படும் உச்சரிப்புகள்
இரவின் ஒரு நாளில்
என் முடிவான வாழ் நாள் வரும் பொழுது
நான் சிந்திக்கும் அந்த சிந்தனை
உன் சந்திப்பின் பசுமையான
நினைவுகளையே அசை போடும்
பெண்ணே! இத்தனைக்கும் நான்
உன்னையன்று சந்திக்காமல் இருந்திருந்தால்
என் சலனமற்ற மனது
சாந்தமாய் இருந்திருக்கும்......................................

10.05.2007

மிருகம் சிரித்திருந்தால்

ஏதோ உலகத்தில் பிறந்து விட்டோம்
அதனாலே உறவை வளர்த்துவிட்டோம்
பாதம் மண்ணில் படியும் வரை
பறவைகள் போலே வாழக்கற்றோம்
தேடுதல் நிறைந்த வாழ்வினிலே
பாம்புகள் போலே ஊர்ந்திருக்கோம்
மாணிக்கம் கண்ணில் படும் வரையில்
பலரை நாமும் சீறவிட்டோம்
பட்டினி ஒன்றை நாம் மறந்தால்
வாழ்வில் வேதனை எதுவுமில்லை
படுக்கும் நாளை நினைத்தபடியே
பசியை நாமும் திர்த்திருக்கோம்
சின்னக் காகிதம் பெரிதாய் தெரிவதனால்
செல்வம் எதுவென மறந்துவிட்டோம்
புள்ளிக் கோலங்கள் போல் தான்
நம்வாழ்வும் நாளையும் வேறொன்று தோன்றிவிடும்
சிரிப்பதை ஒன்றே கற்றுவிட்டோம்
மிருக்கத்தில் இருந்து வேறுப்பட்டோம்
மிருகம் முன்னமே சிரித்திருந்தால்
இன்று இயற்க்கையை அழத்தான் விட்டிடுமா ?

மழலை


உன்னை முதன்முதலாய் தொட்டுத்

தூக்கையில் என்னுயிர்
மறுமுறை ஜணிக்கின்ற
வலியை உணர்ந்தேன் கண்ணே !
உன்னை நெஞ்சோடு அணைக்கையில்
தான் வலியே சுகமாய்
நிலைப்பதை உணர்ந்தேன் கண்ணே!
அடிக்கடி நீ சிரிக்கும் பொழுது தான்
உள்ளம் அழகழகாய் மாறுதே!

நொடிக்கொருமுறை நீ அழுகையில் தான்
உயிரும் அதிர்வது போல் உள்ளதே!
படபடவென்று உன் கைகள் அசையத்தான்
கண்களில் உற்சாகம் பொங்குதே!
சரசரவென்று உன் உடல் நகர்ந்திடத்தான்
பூமியின் போக்கே மாறுதே!
மடிமீது நீ தவழ்ந்திடத்தான்
மனதுக்குள் மத்தாப்பு பூக்குதே!
எப்பொழுது உன் மழலை மொழி
கேட்பேன் என்னுயிர் துடிக்குதே!
என் ஒரு விரலும் நீ கடித்திடத்தான்
நரம்பினுள் அமிர்தம் பாயுதே!
சிலுசிலுவேன்று நீ நனைத்திடத்தான்
என்னாடையும் பல முறை ஏங்குதே!
சிணுங்காமல் உன்னைக் கொஞ்சிடத்தான்
என் ஒவ்வொரு அசைவும் முயலுதே!

10.02.2007

உணர்ச்சிகளுக்காக

நரை விழுந்த மனதில்
குறையொன்று கண்டேன்
குறை கண்ட மனதிலோ!
சிறையொன்றைக் கண்டேன்
சிறையான மனமோ!
தேய்வானது பிறையாய்
தூக்கத்தின் மத்தியில்
பிதற்றங்கள் பலவும்
அதன் தாக்கத்தின்விளைவாய்
சோர்வுகள் படரும்
பாழாகும் உயிரோ
மறந்ததையே நினைக்கும்
நோயாகும் உடலோ
துறந்தையே கேட்கும்
போகின்ற வரையிலும்
பூக்காத தெளிவு
சேர்கின்ற பொழுது தான்
தெளிவாக்கும் பூக்கள்
தேகத்தின் மடியில்
நினை கின்ற பொழுது
உயிர் தாகத்தின் தேடலை
யாரறிவாரோ!

Popular Posts