11.28.2011

தமிழன் அடி வாங்குகிறானா, முதலில் யார் தமிழன் ?


     தமிழா எழுந்திரு...! தமிழன் அடி வாங்குகிறான்...! என்று நிறைய முழக்கங்களை நீங்கள் கடந்த சில வருடங்களாக தமிழகமெங்கும் பார்க்கலாம். அது என்ன எல்லா விளம்பரங்களும் தமிழன் அடி வாங்குகிறான், தமிழர்களே எவ்வளவு நாள் தான் ஏமாறுவீர்கள் என்று கோஷமிட்டபடியே இருக்கின்றன.
     முதலில் தமிழன் எங்கு இருக்கிறான். அதைச் சொல்லுங்கள். தமிழ் பேசினால் தமிழனா ? தமிழ் மண்ணில் வாழ்ந்தால் தமிழனா ? யார் தமிழன் ?

11.25.2011

பெண்களே உங்கள் அகத்தில் அச்சம் தவிர்ப்பது எப்பொழுது?

 
 சமீபத்தில் இணையத்தில் ஒரு கட்டுரைப் படித்தேன். வெளியூரில் இருந்து சென்னையில் வந்து தங்கிப் படிக்கும் பெண்ணின் அவலக் கதை. சென்னையில் தனியார் விடுதி ஒன்றில் தங்கிப் படிக்கும் பெண். தனியார் விடுதியில் சேர்ந்த முதல் நாளே அவளுக்கு தேனீரில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து, அவளை மயக்கமடைய செய்திருக்கின்றனர்.

தமிழ் பாடல் என்ன கொடுமை ஐயா?(why this கொலை வெறி டீ )

 
ஆங்கிலம் தெரியாதவன் தமிழைக் கொஞ்சம் பயன்படுத்தி பாடும் பாடலாகத் தெரிகிறது. உண்மையில் இதில் வரும் வார்த்தைகள் ரசிக்க வைக்கிறது. இருப்பினும் தனுஷ் இதற்கு முன் பாடி இன்று வெளியாகவுள்ள மயக்கமென்ன பட்த்தில் வரும் ” “ஓட ஒட இன்னும் தூரம் “ என்ற பாடலை ஒப்பிடுகையில் இது எனக்கு அவ்வளவாக ரசிக்கும்படி இல்லை.

11.23.2011

உன் வார்த்தைகளும் என் மௌனங்களும்


எனது வெட்க்கத்தின் வேர்களில்
தண்ணீர் ஊற்றியவன் நீ
எனது இரவுகளின் ரகசியநொடிகளை
நீளச் செய்தவன் நீ
என் மனதின் ஒவ்வொரு அசைவும்
உன் நினைவெனும்  
மெல்லிய நூலிழையால்                                                                                                                         பிணைக்கப்பட்டிருக்கிறது

பிளாக்கரில் நிறைய சந்தேகங்கள் எனக்கு எழுந்துள்ளது


 
ஒரு மாதமாக என் பிளாக்கருக்கு ஒரு நல்ல டெம்ப்ளெட்டைத் தேடிக் கொண்டிருக்கிறேன். அது மட்டுமின்றி நிறைய சந்தேகங்கள் பிளாக்கரில் எனக்கு எழுந்துள்ளது
     யாரேனும் எனக்கு உதவுங்கள்...

11.22.2011

புது வீடு குடி புகும் பொழுது


 (என்னுடைய  கவிதைக்கான வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட கவிதை)
புது வீடு குடி புகும் பொழுது
எடுத்துப் போக வேண்டிய பொருட்களை
ஒவ்வொன்றாய் சொன்னாய் நீ
குத்து விளக்கு !
நான் வேண்டாம்
நீ இருக்க அது எதற்கு?
என்றேன்.

11.21.2011

அரசாங்கம் நடத்தும் சீட்டு கம்பெனியில் ஏமாந்தவர்களில் நானுமொருவன்


     இதோ மேலுள்ள படங்களில் நம் அரசாங்கத்தின் முட்டாள்தனத்தைப் பார்க்கலாம். கீழே படிக்க என் முட்டாள் தனத்தைப் பார்க்கலாம்.

   தமிழக அரசு போக்குவரத்து கழகம் அரசாங்கம் நடத்தும் சீட்டு கம்பெனியாகத் தான் எனக்குத் தெரிகிறது. 600 ரூபாய் கொடுத்தால் மாதம் முழுவதும் விருப்பம் போல் மாநகர பேருந்தில் பயணம் செய்யலாம் என்பது நவம்பர் 18ற்கு முன் இருந்த சட்டம்.

Popular Posts