8.27.2012

அந்தப் பயணம்

 
வெண்மேகம் புன்னகைக்க
தொடுவானம் முகம் சிவக்க
வாழ்த்துச் சொல்லிச் சென்ற
சூரியனை வழியனுப்பி வைக்க
சிற்றொளியோடு நிலவு வந்த
அந்த நேரம்

மாலைப்பொழுதில் சாலைகளெல்லாம்
வாகனங்களும் மனிதர்களும்
நிறைந்திருந்த அந்த இடத்தில்
ஒரு தனிமையை
உணர்ந்தேன்
ஒரு புதுமையைக் கண்டேன்
துவலவிட்ட உன் துப்பட்டா
துவண்டு வந்த என் மார்பில்
பட்டதும் துடித்த என் உணர்வுகளை
யாரும் அறிய முடியாது.
விலகாமல் வைத்திருந்திருக்கலாம்
என் மனதை ஆனால்
விலகி வந்த உன்னாடை
விடவில்லையே
அது போதாதென்று
அந்தப் பளிச்சிடும் முகத்தில்
ஒரு ஒளிர்ந்திடும் சிரிப்பு வேறு
விட்டு வைக்கவில்லை என் மனதின்
கொஞ்ச மிச்சங்களையும்
ஆம் அந்த சாலையின் ஓரத்தில்
பேருந்து நிறுத்தத்தில் என்னுடனே
நீயும் காத்திருப்பாய் என்று
நான் நினைக்கவில்லை
முதலில் வந்த பேருந்து
என்னை மூச்சிரைக்க வைத்தது
நல்ல வேளை நீ ஏறவில்லை
திரும்பி என்னைப் பார்க்காமலாவது
இருந்திருக்கலாம்
அது என்ன
அந்த களவாடும் பார்வை
என்னை என்னவோ செய்கிறதே
நேரடியாகத் தான்
பார்த்துவிட்டுப் போயேன்
ன்னால் தான் முடியவில்லை
அடுத்து வந்தது நான் செல்ல
வேண்டியப் பேருந்து எனக்கு
ஏற மனமில்லை இருந்தும்
ஏறினேன்
பின்னே அவளும் ஏறினாள்
ஏன் இந்த பேருந்தில் ஏறினாய்
நீயும் எந்தன் ஊர்ரைச் சேர்ந்தவளோ ...!
என்ற கேள்வி மனதில்
அப்படி இருக்கக் கூடாதா...?
ஒவ்வொரு நிறுத்தம்
வரும் பொழுதும்
பேருந்தின் வெளியெ
பார்த்தேன் என்ன ஆச்சர்யம்
நீ இறங்கவில்லை
கடைசியாக என்னுடைய
ஊருக்கு முன் ஒரு
நிறுத்தம் வந்த பொழுது
நீ எழுந்து நின்றாய்
இருக்கையில் இருந்து
ன் மனது வேகமாக
சொன்னது இவள் இங்கே
இறங்கக் கூடாதென்று
ஆம் அப்படியே தான் நடந்தது
நீ அடுத்த நிறுத்தத்தில்
இறங்குவதற்காகத் தான்
எழுந்து நின்றாய் எனபது
நீ இறங்காததில் இருந்து
புரிந்தது
ஆனால் நான் இறங்காததை
நீயும் கவனிக்கிறாய் எனபதை
நான் அந்நொடி தான் உணர்ந்துக்
கொண்டேன்
மனதில் இன்பப் பூரிப்பை
சுமந்த நேரம்
நிறுத்தம் வந்து விட்டது
நீயும் இறங்கினாய்
நானும் இறங்கினேன்
ஓரே ஒரு முறை என்னை
நேரடியாக உற்றுப் பார்த்தாய்
அப்பொழுது கூட நான் உன்னை
சரியாகப் பார்க்கவில்லை
பார்த்த பார்வை என் மனதில்
பதிவதற்குள் நீ மறைந்துவிட்டாய்
திரும்பவும் அந்தப் பயணம்
வரக்கூடாதா என்ற ஏக்கத்தை
னக்குள் தந்துவிட்டு....



வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

10 comments:

  1. நீண்ட ஆனால் அருமையான கவிதை

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி

      Delete
  2. அந்தக்கால நினைவை மீட்டி விட்டீர்கள்... அருமை...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 4)

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் என் கல்லூரி நாட்களின் நினைவு தான்.வாழ்த்திற்கு மிக்க நன்றி

      Delete
  3. எதார்த்தமான கவிதை சகோ!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சகோதரி

      Delete
  4. கதவை திறக்கும் போது அறிவிப்பின்றி உள் நுழையும் காற்றை போல தான் காதலும் ............
    அழகிய காட்சிகளை கண் முன் காட்டுகிறது கவிதை .......அருமை நண்பா

    ReplyDelete
    Replies
    1. காதலுக்கு அழகான விளக்கம்.

      Delete
  5. அழகிய வரிகள் ...
    தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி சகோ.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. எனக்கும் அதே உணர்வு தான்

      Delete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts