12.28.2012
12.26.2012
ரணகளம் : குறும்படம் திரையீடல்
பதிவ நண்பர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் வணக்கம். என்னுடைய முதல் குறும்படம் (ரணகளம்) திரையீடல் வரும் டிசம்பர் மாதம் 30ந்தேதி ஏ.வி.எம் ஸுடியோவில் பகல் 11.00 மணியளவில் நடைப் பெறவுள்ளது. இந்த நிகழ்விற்கு பதிவ மற்றும் வாசக நண்பர்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.
12.21.2012
கண்ணாடியின் கேள்வி
ஏன் இப்படி நாயைப் போல் அலைகிறாய் ?
உனக்கென்ன குறை வைத்தேன் நான் ?
இப்படி சோம்பி கிடக்க வா நீ பிறந்தாய், உனக்குள் இருந்த அறிவு எங்கே?
உன்னை மனிதனாக்கிய அந்த சிந்தனை எங்கே …?
எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடின்றி இப்படி இருப்பது உனக்கு
உறுத்தவில்லையா? உன்னை எந்த ஒரு கலங்கமுமின்றி வளர்க்க எத்தனை
முயற்சி செய்திருப்பேன். இருந்தும் நீ இப்படி இருக்கலாமா?
12.16.2012
திரைவிமர்சனம் : கும்கி அழகான குழப்பம்
சிவாஜியின் பேரன்,பிரபுவின்
மகன் விக்ரம் பிரபு கதாநாயகன்,இந்தப்படத்தில் அறிமுகமாகியிருந்தாலும் சுந்தரபாண்டியனில்
முதலில் காட்சி தந்து மக்களின் மனதில் இடம்
பிடித்த கதாநாயகி லட்சுமி மேனன்,இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு, இயக்குனர் பிரபுசாலமனின்
மைனாவின் பிரம்மாண்டமான வெற்றி, யானைகள் பற்றிய கதை,இப்படி நிறைய எதிர்ப்பார்ப்பை மக்களுக்கு
இந்த படம் திரைக்கு வருவதற்கு முன் தந்திருந்தாலும். இந்த படத்தின் இசை வெளியீட்டுக்குப்
பின் தான் இந்தப் படத்தைப் பற்றிய எதிர்ப்பார்ப்பு மேலும் பன்மடங்கானது.
உண்மையில் இந்தப் படம் அந்த எதிர்ப்பார்ப்பையெல்லாம்
பூர்த்தி செய்ததா…?
12.11.2012
தமிழக மீனவர்களின் இரக்கமிக்க துணிகரச் செயல் (பகிர்வு)
படத்தில் - மீனவர் மணிகண்டன் மீனை தூக்கிச் செல்கிறார்
என்னுடைய வலைத்தளத்தில் என்னைப் பாதித்த செய்திகளை மட்டும் எப்பொழுதெனும் நான் பகிர்வதுண்டு. தற்பொழுது என்னை மிகவும் நெகிழ வைத்த செய்தியை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்.
மெரீனா கடற்கரையில் கரை ஒதுங்கிய டால்பின் மீனை காப்பாற்றிய தமிழ் மீனவர்களின் செயற்கரிய செயல்.
12.07.2012
திரைவிமர்சனம்: நீர்ப் பறவை ஆழமாக நீந்தியிருக்கலாம்.
நீர்ப்பறவை தலைப்பே
என்னை திரையரங்கம் நோக்கி ஈர்த்தது. மேலும் அடிக்கடி தொலைக்காட்சியில் தென்படும் துண்டுக்
காட்சிகள் நீர்ப்பறவையைப் அவசியம் பார்த்தே ஆக வேண்டுமென்ற எண்ணத்தை மனதில் ஏற்படுத்திவிட்டது.மேலும்
படத்தின் இயக்குனரும் நடித்த நடிகர்களுக்கும் மற்றும் அதில் பணி செய்த அத்தனைக் கலைஞர்களும்
என்னை மிகவும் கவர்ந்தவர்கள்.
12.02.2012
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் : கொண்டாட்டம்
இயக்கம் என்பது சின்ன விஷயமல்ல என்று பலர் சொல்வார்கள். ஆனால் சின்ன
சின்ன விஷயங்களில் தான் இயக்கமே இருக்கிறது என்று நிரூபித்திருக்கிறார் அறிமுக இயக்குனர்
பாலாஜி தரணிதரன். டிஜிட்டல் கேமராவான 5-டியில் குறைந்த பொருட் செலவில் எடுக்கப்பட்டு
கதையின் பலத்துடன் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துவரும் ”நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்”
இயக்குனரின் துணிச்சலான முயற்சி.
11.30.2012
பாக்கெட் மனியின் பூதாகரப் பிரச்சினைகள் நீயா நானாவில்
இந்த வார நீயா நானாவில் பாக்கெட் மனிப் பற்றிய நிறை குறைகளை விவாதிக்கையில்
தான் நம் சமூகத்தின் அத்தியாவசியத் தேவைகளின் புரிதலின்மையைப் புரிந்துக் கொள்ள முடிந்தது.
நீயா நானாவில் ஒரு பக்கம் பெற்றோர்களும், மறுபக்கம்
பிள்ளைகளையும் அமர வைத்து விவாதிக்கையில் தான்
பிள்ளைகளைக் காட்டிலும் பெற்றவர்கள் எத்தனைப் பெரிய தவறை செய்திருக்கிறார்கள் என்பது
தெரிகிறது.
11.19.2012
இரசித்த நூல்கள்:வெண்ணிற இரவுகள் - ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி
கனவுலகவாசியின் நினைவுகளிலிருந்து
என்று புத்தகத்தை திறக்கையிலேயே ஆரம்பிக்கிறது வெண்ணிற இரவுகள். இந்த குறுநாவலைப் பற்றி
பேராண்மை படத்தில் ஒரு இடத்தில் ஜெயம் ரவி சொல்வார். உடனே அந்த புத்தகத்தைத் தேடிப்
பிடித்து வாங்கிவிட்டேன். இப்பொழுது படித்தும் விட்டேன். அந்தப் புத்தகத்தைப் பற்றி
எழுதலாம் என்று தொடங்குகையில் தான். எனக்கு முன் இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதியவர்களின்
விமர்சனத்தைப் படிக்கலாம் என்று தேடினேன். அது நீண்டு கொண்டே செல்கிறது.
11.18.2012
11.13.2012
தீபாவளி ஞாபகங்கள்
தீபாவளி என்றதும் எல்லோருக்கும்
பல ஞாபகங்கள் வரும். முதலில் பட்டாசு.புது சினிமா,பலகாரம்,இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்,
இன்னும் சொல்லிக் கொண்டேப் போகலாம். ஆனால் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது என் பாட்டி
வீடு தான்.
11.09.2012
கல்லணை : தொழில்நுட்பம்
என்னுடைய வலைத்தளத்தில் நான் வேறு தளத்தில் இருந்துப் பகிர்ந்துக் கொள்ளும் பதிவுகளில் இதுவும் ஒன்று. சிலப் பதிவுகள் மக்களை, குறிப்பாக தமிழக மக்களை சென்றடைய வேண்டும் என்பதால் இந்த பதிவுகளை நான் பகிர்ந்துக் கொள்கிறேன். இது உலக மக்கள் தமிழர்களைப் பற்றித் தெரிந்துக் கொள்ளும் முயற்சி அல்ல. நாம் நம் முன்னோர்கள் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற முயற்யினாலே இப்பகிர்வு.
11.06.2012
இரசித்த நூல்கள்: காதலில் துயரம் - கதே
நீண்ட நாட்களாக நான் படித்து ரசித்த புத்தகங்களைப் பற்றி பதிவிட வேண்டும்
என்ற ஆவல் எனக்குள் இருந்தது. ஆனால் அதற்கான சரியான நேரம் எனக்கு கிடைக்கவில்லை. சமீபத்தில்
நான் படித்த கதேயின் காதலின் துயரம் என்னை அதற்கான நேரத்தை நோக்கி நகர்த்தியிருக்கிறது
என்று தான் சொல்ல வேண்டும். எனவே தான் அதற்கு ”ரசித்த நூல்கள்” என்ற தலைப்பிட்டு படித்த
புத்தகங்கள் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன். அதில் முதலில் நான் எழுதப் போவது கதேயின்”
காதலின் துயரம்” தமிழாக்கம் எம். கோபாலகிருஷ்ணன்.
11.05.2012
ராமரும்,நபிகளும் : மதநல்லிணக்கம்
சமீபத்தில் தொலைக்காட்சியில்
இந்த நாள் இனிய நாள் நிகழ்ச்சியில் சுகிசிவம் அவர்கள் பேசியதையே இங்கு உங்களிடம் நான்
பகிர்ந்துக் கொள்கிறேன்
மதம், மனங்களிலுள்ள அறியாமையை பக்தி என்னும் ஒளியால் அகற்றவே உலகில்
பல மதங்கள் தோன்றியிருக்கின்றது. அதைப் பற்றி கடந்த சனிக்கிழமையன்று சுகிசிவம் அவர்கள்
பேசுகையில் அருமையான ஒரு தகவலை சொன்னார்.
11.01.2012
இனி இனிக்கும்
மனதிலிருந்து எந்த நினைவுகளையும்
அழித்துவிட முடியாது
என்று சாலையைக் கடக்கையில்
உன்னைக் கணடதும்
தான் தோன்றியது.
இரண்டு வருடங்களுக்கு முன்
இதே சாலையில் கைக்கோர்த்தபடி
நடந்த அந்த இரு உருவங்கள்
பளிச்சென மின்னல் போல்
என் மனக்கண் முன் வந்துப் போனது
அதே உருவங்கள் தான் இன்றும்
வேறு ஒரு பரிமாணத்தில் மாறி
உலகில் உலவிக் கொண்டிருப்பதாய்
எனக்கு எண்ணத் தோன்றியது.
என் சிந்தனையை சட்டென
உனதுப் பார்வை கலைத்துப் போட்டது.
நீ என்னைப்
பார்த்தப் பார்வையில்
உன்னைப் பற்றிய எந்த உணர்வும்
வெளிப்பட்டுவிடக் கூடாதே என்ற
அச்சஉணர்வு உனக்கிருப்பதை
என்னால் உணர முடிந்தது.
அந்தப் பார்வையை விலக்காமல்
என்னருகில் வந்து
நின்றாய்
பழைய நினைவுகளின்
எந்த சுவடுமின்றி
நிகழ்வில் ஒரு வார்த்தையை
பிரயோகிப்பது எத்தனை கடினம்
என்பதை அந்நொடி தான் உணர்ந்தேன்
ஏனெனில் அந்த முயற்சியில்
நானும் தோற்றேன் நீயும் தோற்றாய்
உனது விழியும் எனது விழியும்
சந்தித்துக் கொண்ட அந்த தருணம்
மட்டும் எதுவும் பேசாமல்,
எதையும் கேட்காமல் அந்த நொடிகள்
கடந்துவிடக் கூடாதாயென்று
மனம் துடித்தது.
வாகனங்களின் சத்தத்திலும்
உனது சுவாசக்காற்றின் துடிப்பை
என்னால் உணர முடிந்தது.
என்ன தான் நாம் பேசிவிட முடியும்
என்றெண்ணுகையில் தான்
எதிர்ப்பார்க்காத ஒரு கேள்வியை
கேட்டாய் நீ
நல்லாயிருக்கீங்களா…?
வேண்டாம் நான் பொய்
சொல்ல மாட்டேன் என்றதுக்கு
எனக்கு வரும் என்று
சொன்ன நீ
நல்லாயிருக்கிறேன்
உன் நினைவுகள் இல்லாமல்
உன் கனவுகளும் இல்லாமல்
யாருடனோ எங்கையோ
என்றாய்…
மனதின் ஒட்டு மொத்த வலிகளும்
ஒரு வரியில் சரியாகி விட முடியுமா…?
என் விழிகள் அவளின் விழிகளை
நேருக்கு நேர் சந்தித்தது
கண்ணீர் மலர்கள் அவள் விழிகளில்
மலர்ந்து கன்னத்தின் வழியே
உதிர்ந்துக் கொண்டிருந்தது.
அந்த சாலையின் ஓரத்தில்
உன் கரங்களைப் பற்றி
உண்மை சொல்லட்டுமா என்றேன்
நீயும் தலையை ஆட்டினாய்
எனக்கு சர்க்கரை இனித்து
இரண்டு வருடமாகிறது. என்றதும்
நீ லேசாக நகைத்தாய்
உன் கரங்கள் என் கரத்தை
அழுத்தமாய் பற்றியது
இனி இனிக்கும் என்று
கன்னத்தில் இருந்த ஈரத்தைத்
துடைத்தபடியே சொன்னாய் நீ
நட்புடன்
தமிழ்ராஜா
10.30.2012
பீட்சா : துணிச்சலான பயமுறுத்தல்
நான் இந்தப் படத்தை முதல் நாளேப் பார்த்துவிட்டேன். இருப்பினும்
அதைப் பற்றி எழுத இப்பொழுது தான் நேரம் கிடைத்தது. அதான் ஒரு வாராமா நிறைய படித்துவிட்டோமே
நீ என்ன மிகவும் தாமதமாக வந்திருக்கிறாய் என்று கேட்பவர்களுக்கு இங்கே நான் சொல்லிக்
கொள்வது இது விமர்சனமல்ல… இது ஒரு விவாதம்.
10.24.2012
10.21.2012
10.19.2012
கங்கை நீர் புற்று நோயை உண்டாக்கும்!: ஆய்வு
இதைப் பற்றிய ஒரு பதிவை நான் ஏற்கனவே என் வலைத்தளத்தில் எழுதியிருந்தாலும் , இது அவசியம் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய பதிவு என்பதால், என் தளத்தில் பகிர்கிறேன்
புதுடெல்லி:புனித நதியாக கருதப்படும் கங்கை நதி மாசடைந்து பல ஆண்டு
களாகிவிட்ட நிலையில், தற்போது கங்கை நீரில் புற்று நோயை உண்டாக்கும்
கார்சினோஜென்ஸ் (carcinogens)எனப்படும் புற்று நோயை உண்டாக்கக்கூடிய
காரணிகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
10.18.2012
ரணகளம் : என்னுடைய முதல் குறும்படம்
ரணகளம் என்னுடைய முதல் குறும்படமாக அமைந்துவிட்டது. உண்மையில் குறும்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கு இருந்தது இல்லை.
ஆனால் என் நண்பனுக்கு உதவ சென்ற நான் குறும்பட இயக்குனராகிவிட்டேன். கல்லூரியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த என் நண்பன் விளையாட்டாக அங்கு அவனுடன் வேலைப் பார்த்தவர்களுடன் சேர்ந்து ஒரு கதைக் கருவை மட்டும் வைத்துக் கொண்டு படப்பிடிப்புக்குரிய அனைத்து வேலைகளையும் தொடங்கிவிட்டான்.
10.17.2012
பேராசையும் பெரியப் படங்களின் வீழ்ச்சியும்
2012 ஆம் ஆண்டு திரைத்துறையில் பெரிய சலனத்தை ஏற்படுத்திய ஆண்டு என்று
தான் சொல்ல வேண்டும். பல கோடி சம்பளத்தை ஸ்டார்களுக்கு கொட்டிக் கொடுத்து, பல கோடிகளில்
படங்களை தயாரிக்கும் பழக்கம் தமிழ்த் திரையுலகில் கடந்த பல வருடங்களாக நிகழ்ந்த வண்ணமிருப்பது
அனைவரும் அறிந்ததே…
10.16.2012
10.14.2012
மகிழ்ச்சி பற்றி நீயா நானாவில் அலசல்
கடந்த வாரத்திலேயே இதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். இருப்பினும்
சில அலுவல்களால் எழுத முடியாமலேயே இருந்தது. இன்று தான் இதற்கு நேரம் வாய்த்திருக்கிறது.
மகிழ்ச்சியைப் பற்றி 30.09.2012 நடந்த நீயா நானாவில் பகிர்ந்துக்
கொண்ட கருத்துக்கள் உண்மையில் நம் சமூகத்தின் அச்சு அசல் கலாசாரத்தின் பிரதிபலிப்பாகவே
இருந்தது. ஆம் அந்த நிகழ்வில் சந்தோசம் என்ற
வார்த்தைப் பிரயோகத்திலே அவர்கள் பேசினார்கள்.அந்த வாரம் பார்க்காதவர்கள் இங்கே கிளிக் செய்யவும் நீயா நானா
10.09.2012
10.02.2012
காந்தி கணக்கு : தமிழர்களின் துரோகச் செயல்(தெளிவான விளக்கம்)
”காந்தி கணக்கு” தமிழ்நாட்டில்
பெரும்பாலும் அபத்தமாகப் பிரபலமாகியுள்ளது. இந்த வார்த்தையின் தோற்றம் பற்றி இன்று
காலை ஒரு தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள் பேசினார்.
அதில் காந்தி கணக்கு என்ற வார்த்தை எப்படி வந்தது என்ற வரலாற்றைச்
சொன்னார். பெரும்பாலும் திரும்ப வராத, ஏமாற்றப்பட்ட கணக்குகளையே காந்தி கணக்கில் எழுது
என்று சொல்லும் வழக்கம் தமிழர்களிடையே பரவி
இருக்கிறது.
இந்த வழக்கம் நம் தமிழ்நாட்டில் மட்டும் தானா … பிற மாநிலங்களிலும் இருக்கிறதா ? என்று ஆராய்ந்தால் இல்லை என்ற பதில்
தான் வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த காந்தி கணக்கு என்ற சொல்வழக்கு பரவியிருக்கிறது.
ஒரு நேர்மையான மனிதரைப் பற்றி இப்படி ஒரு வழக்கம் நிலவுவதை எண்ணி
தமிழர்களாகிய நாம் வெட்கப்பட்டே ஆக வேண்டும். இருப்பினும் இந்த வார்த்தை தோன்றிய விதம்
தமிழ்நாட்டில் வேறு விதமாகவே உள்ளது.
இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன் இருந்த காலக்கட்டங்களில் பல நிறுவனங்களின்
கணக்குகளில் குளறுபடிகள் வரும் பொழுதெல்லாம்,
அந்த தொகையை சரி செய்ய “ மகாத்மா காந்தியின் சுதந்திரப் போராட்டத்திற்காக நன்கொடையாக
அளிக்கப்பட்டது” என்ற கணக்கில் சேர்த்துவிடுவார்களாம். அது மருவி காந்தி
கணக்கு என்று மாறி இன்றும் தமிழ் மக்களிடம் பரவி வருகிறது.
இந்த தலைப்பில் தமிழில் ஒரு திரைப்படம் வேறு வந்தது.பிறகு அந்த தலைப்பிற்கு
எதிர்ப்பு வலுக்கவே அதை மகான் கணக்கு என்ற தலைப்பில் வெளியிட்டார்கள். காந்தி கணக்கு
என்ற சொல்லிற்கு பின்னே தமிழர்களாகிய நம்முடைய தேச துரோகச் செயல் அப்படமாகத் தெரிவதை
நம்மால் மறுக்க முடியாது.
சுதந்திரப் போராட்டத்திற்காக உதவி செய்யவில்லையென்றாலும், நன்கொடை
வழங்கவில்லையென்றாலும், கணக்கில் வராத தொகையையெல்லாம், காந்தியின் போராட்டக் கணக்கில்
எழுதிய அந்த துரோகச் செயலை தமிழர்கள் செய்திருக்கிறார்கள் எனும் பொழுது உண்மையில் ஒரு
தமிழனாக நான் தலைக் குனிகிறேன்.
அதுவும் காந்தி கணக்கு என்ற வார்த்தையின் பிரபலம், ஒரு குறிப்பிட்ட
தமிழர்களின் ஊழலைப் பறைச்சாற்றுவதாகவே உள்ளது. அந்தக் குறிப்பிட்ட தமிழர்களின் இழிவான
செயலால், ஓட்டு மொத்த தமிழர்களின் முகமாகவும் இது இன்று மாறியுள்ளது.
சுதந்திரப் போராட்டத்திற்காக தன்னுடைய சொத்தையெல்லாம் விற்று கப்பலோட்டியவரும்,
தமிழர்களாகிய நம் தன்மானத்தைத் தூக்கி நிறுத்தியவருமான வ.உ.சிதம்பரனார் பிறந்த மண்ணில்
தான் இப்படி சில ஊழல்காரர்களும் இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது, மனது
வலிக்கிறது.
அது மட்டுமின்றி அதை ஏற்கும் விதத்தில் நாமும் தெரிந்தோ தெரியாமலோ
இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது எத்தனைப் பெரிய இழிவான செயல். தமிழர்களின் நகைச்சுவை
சிந்தனை ஒரு மகாத்மாவையே இழிவுப்படுத்தும் அளவு கேவலமாகப் போனது எதனால்…?
சுதந்திரப் போராட்டக் காலத்தில் கூட நாட்டிற்காக கொடுக்கும் கொடையில்
தப்பானக் கணக்கை காட்டி அதை காந்தியின் பெயரிலேயே எழுதும் போக்கு எப்படி நம் தமிழர்களுக்கு
வந்தது. இன்று இந்திய அரசாங்கம் எதற்கும் எங்களுக்கு உதவவில்லை, என்று கொடித் தூக்கும்
பேச்சளவு தமிழர்கள், சுதந்திர வரலாற்றின் ஏடுகளை கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும்.
பக்கத்து நாட்டு விடுதலைக்காக சீறி எழும் தமிழ் வீரர்கள், நம் தேச விடுதலைக்காக நாம்
ஆற்றிய ஊழல் பணியை திரும்பிப் பார்த்தால், நாம் இந்தியன் என்று சொல்லிக் கொள்ளவே அருகதையற்று,
தமிழன் என்று சொல்லிக் கொள்ளவும் வெட்கப்பட்டு, மனிதன் என்று சொல்லிக் கொள்ளவும் திரானியற்று
தான் இருப்போம் என்பதை மறந்துவிடக் கூடாது.
தமிழகத்தில் தியாகம் ஒளிவிட்ட காலக்கட்டத்திலேயே, நம் தேசத்திற்காக
கொடுத்த கொடையில், இப்படியொரு ஊழல் இருந்திருக்கிறதே…
இன்றோ சுயநலத்தின் பிடியில் சிக்கியிருக்கும் தமிழகத்தில் ஒவ்வொரு
நன்கொடையிலும், திட்டத்திலும் எத்தனை ஊழல் நடந்துக் கொண்டிருக்கும் என்பது அனைவரும்
அறிந்த ஒன்றே...
வறுமை எனபது வன்முறையின்
மோசமான ஒரு முகம் என்று சொன்னார் காந்தி. இந்தியாவின்
வறுமைக்கு முக்கிய காரணமே ஊழல் தான். அந்த ஊழலின் முதல் படி தமிழகத்தில் காந்தியின்
பேரிலேயே ஆரம்பித்திருக்கிறது என்பதை நாம் ஆதரிக்கலாமா…?
தமிழர்களாகிய நாம் ஊழலைத் தடுக்க முடியவில்லையென்றாலும், இந்த வார்த்தையின்
பிரயோகத்தையாவது தடுக்கலாம் இல்லையா…?
நாம் தமிழர்கள் என்பது உண்மையென்றால், இந்த வார்த்தையை நிச்சயம் நம்
சூழலில் இருந்து ஒழித்தே ஆக வேண்டும். இது மகாத்மாவிற்கு நாம் அளிக்கும் மிகப் பெரிய
மதிப்பு மட்டுமின்றி, நம் வருங்கால தலைமுறையினர் ஊழலை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளக்
கூடாது என்ற தொலைநோக்கு சிந்தனையும் தான்.
” இப்படி ஒரு மாமனிதர்
நம்மிடையே வாழ்ந்து மறைந்தார் என்பதை வருங்கால தலைமுறையினர் எண்ணி அதிசயப்படுவர், அது
மட்டுமின்றி அதை நம்புவது அவர்களுக்கு கடினமாக இருக்கும் “ என்று காந்தியின் மறைவில்
ஒரு புகழ்ப் பெற்ற மாமனிதர் சொன்னார்.
ஆம் அவரின் வாழ்க்கை அப்படியொரு எளிமையானது. நம் கற்பனைக்குள் எளிதில்
அகப்படாதது. அவர் தோன்றிய இந்நாளில் தமிழர்களாகிய நாம் இந்த ஊழல் வார்த்தையை நம்மிடையே
இருந்து அகற்றுவதை கடமையாகக் கொள்வோம்.தமிழன் மேலுள்ள கரையை அகற்றுவோம். விரைவில் வார்த்தையில்
மறையும் ஊழல் நம் வாழ்க்கையிலும் மறையும் என்பதில் நம்பிக்கை வைப்போம்
வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே
9.25.2012
9.21.2012
வலைப்பதிவர்களும் நாங்களும் கலாட்டா (அரசியல் தலைவர்)
இணையத்தில் வலைப்பதிவர்களின் எழுத்துக்கள் பிரபலமடைந்து அவர்களுக்கென்று ஒரு
தனி உலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதை சமூகத்தில் உள்ள ஒவ்வொரு தொழில்,சமூகம் சார்ந்த
உறுப்பினர்களும் எப்படிப் பார்க்கிறார்கள். அதை தங்களுக்கு சாதகமாகவும், பாதகமாகவும்
கருதும் அவர்களுடையை மனநிலையை நகைச்சுவையோடு சொல்லலாம் என்ற சிறு முயற்சியே இந்த பதிவு.
முதல் முயற்சியும் கூட…
கட்சி தொண்டர் : தலைவரே இந்த வலைப்பதிவர்கள்
தொல்லை தாங்க முடியலை. எதுன்னாலும் எழுதிபுடறாங்க… பத்திரிக்கைல வர்றதுக்குள்ள் நம்மள
வறுத்தெடுத்துப் புடறாங்க…
9.19.2012
காதலும் கடவுளும்
மனிதர் உணர்ந்துக் கொள்ள இது மனிதக் காதல்
அல்ல அதையும் தாண்டிப் புனிதமானது... இது அடிக்கடி நிறைய காதலர்கள் மத்தியில் உச்சரிக்கப்படும்
ஒரு வாசகம் தான். காதலர்கள் யாரிடம் கேட்டாலும் எங்களின் காதல் புனிதமானது என்று
தான் சொல்கின்றனர். பிறகு சில வருடங்களிலோ,மாதங்களிலோ,வாரங்களிலோ, நாட்களிலோ காதல்
தன் புனிதத்தை அவர்களிடன் இழந்துவிடுகிறது. அதே காதலர்களை கேட்டால், காதல் எல்லாம் வெறும் மாயை என்று சொல்கின்றனர்.
9.16.2012
9.15.2012
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
இன்று தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்த சந்திப்பு ஒரு பெரும் விழாவாகவே இனிதே நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந...
-
அடிக்கடி நீ தொட்டுப் பார்க்கும் அடி வயிற்றில் தான் நான் துடிக்கின்றேன் நொடிக் கொரு முறை என் சலனத்தை நீ ரசிப்பதை நானும் உணர்கின்றேன் ...
-
” கா ந்தி கணக்கு” தமிழ்நாட்டில் பெரும்பாலும் அபத்தமாகப் பிரபலமாகியுள்ளது. இந்த வார்த்தையின் தோற்றம் பற்றி இன்று காலை ஒரு தொலைக்காட்சி அ...