12.31.2011
12.30.2011
12.15.2011
12.10.2011
12.07.2011
12.06.2011
12.05.2011
12.04.2011
12.02.2011
11.30.2011
திரைவிமர்சனம் : மயக்கமென்ன ரசிக்கயென்ன...?
ஓட ஒட ஓட நேரம் போகலை
பாக்க பாக்க பாக்க படம் முடியல
போக போக போக ஒண்ணும் புரியல
ஆக மொத்தம் ஒண்ணும் விளங்கல
தெருவோரப் புகைப்படக் கலைஞன் தன் வாழ்க்கையினுள்ளே ஒரு பெண் வந்தவுடன் உலகம் போற்றும் ஒருப் புகைப்படக் கலைஞனாகிறான். இது தான் கதையின் கரு. 50 ஓவரில் 150 தான் இலக்கு. அதை அடிக்க என்னென்ன மொக்கைப் போட முடியுமோ அத்தனையும் போட்டு கடைசி பந்தில் சிக்சர் அடித்துவிட்டு பல்லைக் காட்டுகிறது படம்.
11.28.2011
தமிழன் அடி வாங்குகிறானா, முதலில் யார் தமிழன் ?
தமிழா எழுந்திரு...! தமிழன் அடி வாங்குகிறான்...! என்று நிறைய முழக்கங்களை நீங்கள் கடந்த சில வருடங்களாக தமிழகமெங்கும் பார்க்கலாம். அது என்ன எல்லா விளம்பரங்களும் தமிழன் அடி வாங்குகிறான், தமிழர்களே எவ்வளவு நாள் தான் ஏமாறுவீர்கள் என்று கோஷமிட்டபடியே இருக்கின்றன.
முதலில் தமிழன் எங்கு இருக்கிறான். அதைச் சொல்லுங்கள். தமிழ் பேசினால் தமிழனா ? தமிழ் மண்ணில் வாழ்ந்தால் தமிழனா ? யார் தமிழன் ?
11.25.2011
பெண்களே உங்கள் அகத்தில் அச்சம் தவிர்ப்பது எப்பொழுது?
சமீபத்தில் இணையத்தில் ஒரு கட்டுரைப் படித்தேன். வெளியூரில் இருந்து சென்னையில் வந்து தங்கிப் படிக்கும் பெண்ணின் அவலக் கதை. சென்னையில் தனியார் விடுதி ஒன்றில் தங்கிப் படிக்கும் பெண். தனியார் விடுதியில் சேர்ந்த முதல் நாளே அவளுக்கு தேனீரில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து, அவளை மயக்கமடைய செய்திருக்கின்றனர்.
11.22.2011
11.21.2011
அரசாங்கம் நடத்தும் சீட்டு கம்பெனியில் ஏமாந்தவர்களில் நானுமொருவன்
இதோ மேலுள்ள படங்களில் நம் அரசாங்கத்தின் முட்டாள்தனத்தைப் பார்க்கலாம். கீழே படிக்க என் முட்டாள் தனத்தைப் பார்க்கலாம்.
தமிழக அரசு போக்குவரத்து கழகம் அரசாங்கம் நடத்தும் சீட்டு கம்பெனியாகத் தான் எனக்குத் தெரிகிறது. 600 ரூபாய் கொடுத்தால் மாதம் முழுவதும் விருப்பம் போல் மாநகர பேருந்தில் பயணம் செய்யலாம் என்பது நவம்பர் 18ற்கு முன் இருந்த சட்டம்.
11.18.2011
கிரிக்கெட்டும் வாழ்க்கையும் தத்துவம்
கிரிக்கெட் இன்று
பெரும்பாலான இந்தியர்களின் தேசிய கீதமாகவே இருக்கிறது. அதுவும் நம் இந்திய அணியினர் இந்த வருடம் உலக கோப்பையை
வென்றதில் இருந்து இந்தியர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இருப்பினும் கிரிக்கெட்டை
வெறுப்பவர்கள் இந்தியாவில் நிறையப் பேர் இருக்கிறார்கள். கிரிக்கெட்டை முட்டாள்கள்
தான் பார்ப்பார்கள், இன்னும் பல
வகையில் அதற்கு எதிர்ப்பு கிளம்பினாலும். இன்று பணம் கொழிக்கும் தொழிலாகவே உலகம் முழுவதும்
கிரிக்கெட் பார்க்கப்படுகிறது.
11.17.2011
11.16.2011
11.15.2011
11.14.2011
கொஞ்சம் தமிழ் கொஞ்சும் காதல் (2)
நீ கவிதையாய் எழுதிய கடிதங்களை விட
நான் உனக்கு முதன் முதலில்
வாங்கித் தந்த பேனாவை நீ
எழுதுகிறதா என பரிசோதிக்க
ஒரு காகிதத்தில் கிறுக்கினாயே...
அந்த கிறுக்கல்கள் தான் எனக்கு
இன்றும் மிகப் பெரிய காதல் பொக்கிஷமாகத்
தெரிகிறது
வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே
11.13.2011
11.12.2011
ஏழாம் அறிவுக்கு ஒரு உதவி இயக்குனராக நான் எழுதும் திரைக்கதை (2)
வாசக நண்பர்களே இந்தப் பதிவை படிப்பதற்கு முன் இதற்கு முந்தையப் பதிவை படிக்கவும். இதற்கு முன் படித்தவர்களிடம் முதலில் தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பதிவு மிக நீண்டதாக மாறிவிட்டது. எத்தனை முயன்றும் தவிர்க்க முடியவில்லை. சீன மொழி பேசும் இடங்களில் எல்லாம் தமிழையே பயன்படுத்தியிருக்கிறேன். வேறு வழியில்லை இன்னும் நீண்டு விடும் என்பதனால்....
வாசக நண்பர்களே படித்துவிட்டு இதன் நிறை குறைகளை மறக்காமல் பின்னூட்டம் இடவும்.
இடைவேளி முடிந்ததும்
11.11.2011
ஏழாம் அறிவு திரைவிமர்சனம்: ரசனைக்கு எட்டாத அறிவு
உதயநிதி ஸ்டாலின் ,ஏ.ஆர்.முருகதாஸ்,சூர்யா,ரவி.கே.சந்திரன்,ஹாரிஸ் ஜெயராஜ், பீட்ட்ர் ஹெயின், ஆண்டனி என்று மிகப் பிரம்மாண்டமான கூட்டணியில் ஒரு படைப்பு. ஆயுதப் பூஜையில் இருந்தே ஏழாம் அறிவிற்கான பரபரப்பை கூட்டிவிட்டது மீடியாக்கள். தமிழக மக்களின்றி உலக தமிழர்கள் அனைவரிடமும் ஒரு எதிர்ப்பார்ப்பை கிளப்பிவிட்டது இந்த மீடியாக்கள்
ஏழாம் அறிவுக்கு ஒரு உதவி இயக்குனராக நான் எழுதும் திரைக்கதை
இது கிண்டலுக்காக அல்ல. உண்மையில் ஏழாம் அறிவைப் பார்க்கையில் சில இடங்களில் வியந்தேன். இருப்பினும் அந்த திரைக்கதை என் மனதில் சிறு உறுத்தலை உண்டு செய்ததால் என் மனதில் இப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணியதை எழுதுகிறேன்.
Ø திரைப்படம் ஆரம்பித்து முதல் 15 நிமிடங்கள் எந்த மாற்றமும் இல்லை. போதி தர்மனின் வாழ்க்கை அப்படியே திரையில் வருகிறது. அதற்கு அடுத்து போதிதர்மன் இறந்ததும் இந்தியத் தேசத்தைக் காட்டுகிறோம். தமிழகம் காட்டப்படுகிறது.
Ø சென்னை மாநகரில் ஸ்ருதிஹாசன் ( சுபா ஸ்ரீனிவாசன்) படிக்கும் கல்லூரி காட்டப்படுகிறது. ஒரு பேராசிரியர் வந்து ஆராய்ச்சிப் பற்றி சொல்லிவிட்டு, அதை எந்த தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு செல்கிறார்.
11.09.2011
10.28.2011
வேலாயுதம் திரைவிமர்சனம்
நீண்ட நாட்களுக்குப் பிறகு இளைய தளபதிக்கு ஒரு பெயர் சொல்லும் படம். வேலாயுதம். படம் ஆரம்பித்தவுடனேயே காஷ்மீரைப் போன்ற ஒரு இடத்தைக் காட்டி தெரியாத மொழியில் ஏதோ பேச,பழைய விஜயகாந்த் பட்த்துக்குள் நுழைந்துவிட்டது போல் ஒரு உணர்வைத் தருகிறது. மீண்டும் அதே தீவிரவாதமா, அய்யோ சாமி கண்ணைக் கட்டுதேன்னு கொஞ்சம் கண் அயர,சிட்டியில் ஒரு வெடிக்குண்டு வெடிக்கிறது. என்னடா இது சென்னைக்குப் பழக்கப்படாத விஷயங்களைக் காட்டுவதிலேயே இந்த தமிழ்சினிமா எவ்வளவு நாள் தான் பயணிக்குமோ தெரியலையே. பழைய சினிமாவில் வருவதுப் போல் ரிப்போர்டர் கூட்டம் அதில் ஜெனிலியா என்று ஆரம்பித்து ஒரு பத்து நிமிடம் பொறுமையாகச் செல்கிறது.
10.25.2011
அவதாருக்கு கைத்தட்டல் கூடங்குளத்திற்கு ஏன் எதிர்ப்பு...?
அவதார் :மனித இனம் வேறு ஒரு கிரகத்திற்கு சென்று அங்கிருக்கும் நாபிகள் என்ற இனத்தை விரட்டிவிட்டு,அங்கிருக்கும் ஒரு பொருளை (தனிமத்தை) கைப்பற்ற எண்ணுகின்றனர். அந்த நாபிகள் இயற்கையோடு இயற்கையாக வாழ்கின்றார்கள். இவர்களுக்கும் இயற்கையை அழிக்க வந்த மனிதர்களுக்கும் இடையில் மிகப் பெரிய யுத்தம் நிகழ்கிறது. அதற்கு மனிதனில் இருந்து ஒருவன் இவர்களுக்கு நாபியாகி உதவுகிறான். இறுதியில் நாபிகள் வெற்றி பெற்று மனிதர்கள் தோற்று, அந்த கிரகத்தை விட்டே துரத்தப்படுகிறார்கள்.
10.19.2011
அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் துரோகம்
தேர்தலென்றால் சட்ட
மன்றமாகட்டும்,பாராளுமன்றமாகட்டும், ஊராட்சியாகட்டும் பெரு வாரியான மக்கள்
எதிர்ப்பார்ப்பது ஒரு ஓட்டுக்கு யார் எவ்வளவு தருவார் என்று தான் இருக்கிறது.
இந்த முறை இந்த வேடபாளர் இத்தனை லகரங்கள் செலவு
செய்திருக்கிறார், எனவே அவர் நிச்சயம் வெற்றி பெற்றிடுவார் என்பதாகத் தான் தேர்தல்
கணிப்பு இருக்கிறது. அதையும் தாண்டி அவர் எத்தனைப் பிரபலம் என்ற அளவிலும் அமைகிறது
வேட்பாளரின் வெற்றி. இந்த முறையில் என்றேனும் ஒரு சிறந்த தலைவர் நமக்கு கிடைக்க
வாய்பிருக்கிறதா?
10.13.2011
நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் மட்டும் போதுமா?
சமூகத்தின் சரியான பிரதிபலிப்பு
“எங்கேயும் எப்பொழுதும் மணிமேகலை”. இந்தப் படத்தைப் பார்த்தவர்களுக்கு நன்குப்
புரியும் நான் சொல்ல வருகிற கருத்து. தன்னைக் காதலிக்கும் ஒருவனுக்கு மணிமேகலையாக
வரும் அஞ்சலி, என்னென்ன தேர்வுகள் வைக்கிறாள் என்பதை இந்தக் கதையில் அழகாக
சொல்லியிருக்கிறார்கள். தேர்வுகள் என்பதைவிட தன்னைக் காதலிப்பதனால் என்னென்ன
பிரச்சினையை காதலனான கதிரேசன்(ஜெய்) சந்திக்க வேண்டும் என்பதை இந்த கதையில்
சொல்லப்பட்டிருக்கிறது.
சமூக ஒழுக்கம்: பெருமைக் கொள்வோம் இந்தியர் என்பதில்.
ஜம்மூ காஷ்மீர்
தொடர்பாக,பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்த கருத்தால் கோபமடைந்த இரு
வாலிபர்கள் அவரை அடித்து உதைத்தனர். சுப்ரீம் கோர்ட் சேம்பரிலேயே இந்த சம்பவம்
நடந்தது.
பத்திரிக்கையில் ஒரு
செய்தி, படித்துவிட்டு மக்கள் உச்” கொட்டிவிட்டு சிறிது நாட்களில் மறந்துவிடுவர். ஒரு நபருக்கு கொடுக்க வேண்டிய
தண்டைனையைப் பற்றி கருத்துத் தெரிவித்ததில் நடந்த வன்முறை செயல் இது. தூக்குத்
தண்டையை ரத்து செய்ய வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்னர் தமிழ் நாட்டிலும் சில
இடங்களில் போராட்டம் நிகழ்ந்தது. ஜம்மூவிலும் அதைச் சார்ந்தே போராட்டம்
நிகழ்கிறது. இதைப் பற்றி கருத்து தெரிவித்த ஒரு வழக்கறிஞர் மேல் தாக்குதல்
நிகழ்ந்திருக்கிறது.
நானோ தொழில்நுட்பத்தினால் உடல் தானம் அவசியமற்றுப் போகும்:
இன்று நாம் என்ன தான் விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும்
வளர்ச்சியடைந்தாலும், மனித சமுதாயத்தையே மிரட்டிக் கொண்டிருக்கும் சில கொடிய
நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் வழியை இன்னும் நாம் கண்டறியவில்லை
என்று தான் சொல்ல வேண்டும். இல்லையெனில் “ ஸ்டீவ் ஜாப்ஸ் போன்ற சிறந்த மனிதரை நாம்
கணையப் புற்று நோய்க்கு பலிக் கொடுத்திருக்க மாட்டோம்.
10.07.2011
மின்சாரத்திற்கு நிரந்த தீர்வு எப்பொழுது?
தமிழக மின் துறைக்கு
சோதனை மேல் சோதனை,கூடங்குளத்தில் அணுமின் உலையை மூட வேண்டும் என்ற போராட்டம்,
சென்னையிலும் கல்பாக்கம் அணு மின் உலையை மூட வேண்டும் என்ற போராட்டம்.
அமெரிக்காவின் “வால் தெரு” போராட்ட்த்திலும் அணு
உலையை மூட வேண்டும் என்ற கோரிக்கை என்று அணு உலையை எதிர்க்கும் போக்கு வலுத்துக்
கொண்டே செல்கிறது. உண்மையில் இது சரி தானா?
வள்ளுவர் சொன்னது போல
குணம் நாடி குற்றமும் நாடி
அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல்
வாகை சூட வா...
திரைவிமர்சனம்: வாகை சூட வா...
வாகை
சூட வா... பெயரிலேயே தமிழின்
சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூற்றின் புறத்திணையை நினைவுப்படுத்துகிறார்
இயக்குனர் சற்குணம். அந்த பெயருக்காகவே படத்தைப் பார்க்க வேண்டுமென திங்க கிழமை
காலையிலேயே அருகிலிருக்கும் திரையரங்கிற்குள் சென்றேன். எதிர்பார்த்த கூட்டம்
இல்லை தான். எப்பொழுதும் நல்ல படங்களுக்கு கூட்டம் வர சிறிது காலம் பிடிக்கும்
தான். எதிர்பார்ப்புடனே டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டு திரையரங்கிற்குள் சென்று
அமர்ந்தேன். அமர்ந்த கொஞ்ச நேரத்திலேயே திரைப்படம் ஆரம்பித்துவிட்டது. எல்லா
படங்களுக்கும் வரும் சிலுமிச ஜோடிகள் இந்த படத்தையும் விட்டு வைக்கவில்லை.
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
இன்று தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்த சந்திப்பு ஒரு பெரும் விழாவாகவே இனிதே நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந...
-
அடிக்கடி நீ தொட்டுப் பார்க்கும் அடி வயிற்றில் தான் நான் துடிக்கின்றேன் நொடிக் கொரு முறை என் சலனத்தை நீ ரசிப்பதை நானும் உணர்கின்றேன் ...
-
” கா ந்தி கணக்கு” தமிழ்நாட்டில் பெரும்பாலும் அபத்தமாகப் பிரபலமாகியுள்ளது. இந்த வார்த்தையின் தோற்றம் பற்றி இன்று காலை ஒரு தொலைக்காட்சி அ...